ஊர்: சேய்ஞலூர்.சேங்கனூர், செங்கநல்லூர்
மூலவர்: ஸ்ரீநிவாசப்பெருமாள்-7' உயரம்
இறைவன்: இறைவி:
பிறசன்னதிகள்: பெரியவச்சான் பிள்ளை. ஸ்ரீசுதர்சன ஆழ்வார்.
தீர்-மண்ணியாறு,
தி.நே-0730-1100,1700-1900
தலவரலாறு-யாமுன தேசிகருக்கும் நாச்சியார் அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கிருஷ்ணபாதர் என்கிற கிருஷ்ணசூரி ஆவணி ரோகிணியில் பிறந்ததால் கண்ணனின் அம்சமாகக் கருதப்படுபவர். மனைவியுடன் திருமலை சென்று தரிசனம் செய்தவர் அனைவரையும் மறந்து அங்கேயே வாழ்ந்தார். பெருமாள் வயோதிகராக தோன்றி வயதான பெற்றோரை தனியே விடுவது பாவம், நீ ஊருக்கு திரும்பி செல்! வேங்கடத்தான் உனக்கு அங்கே அருள்வான் எனக்கூறி ஒரு சாளக்கிராமத்தைக் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி அதை தினமும் பூஜித்து வந்தார். ஒருநாள் கொள்ளிடக்கரையில் வைத்து திருமஞ்சனம் செய்ய நீராடி வந்து பார்த்தபோது சாளக்கிரமம் காணவில்லை. ஊண் உறக்கமின்றி தேடியபொழுது அது இருந்த இடத்தில் அர்ச்சாவிக்ரகம் புதையலாகக் கிடைக்க பிரதிஷ்டை செய்து ஸ்ரீநிவாசப்பெருமாள் என நாமம் சூட்டி வழிபாடு செய்து வந்தார் பின்னர் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து பல நாட்கள் அங்கேயே இருந்தார். நம்பிள்ளையின் சீடராகி பெரியவச்சான் பிள்ளை என பெயர் பெற்றார். திருவாய் மொழிக்கு விளக்க உரை எழுதி- இருபத்து நாலாயிரப்படி- வியாக்யானம் செய்து வியாக்யான சக்ரவர்த்தி எனப்பெயர் பெற்றார். தனது இறுதி காலத்தில் மீண்டும் சேய்ஞாலூர் வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வாழ்ந்தார். தாயருக்கு சன்னதி கிடையாது. திருமார்பிலேயே உறைகின்றாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)