ஊர்:திருப்புன்கூர்.தி.த-74
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவலோகநாதர்
இறைவி: ஸ்ரீசொக்கநாயகி, ஸ்ரீசௌந்தரநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள்.
த.வி- ஸ்ரீகுளம்வெட்டியவிநாயகர்
5நிலைராஜகோபுரம்-பிரகாரம்.
தீர்-கணபதி,மரம்-புங்கமரம்.
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
தீண்டத்தகாத குலத்தில் பிறந்த நந்தன் பண்ணையில் வேலை செய்து வந்தான். தோல் கருவிகளைக் கொண்டு இறைவனை நினைத்துப் பாடுவான். இறைவனைக் காண திருபுன்கூர் வந்தார். மேல் சாதியினர் அந்த தெருவிற்குள் விடவில்லை. எப்படியோ தேரடிசென்று சிவனை தரிசிக்க முடியாமல் நந்தி மறைக்க உமையவளை நினைத்து உள்ளம் உருகி மகேசனை வழிபட வழி கூறக் கேட்டார். நந்தி விலகாத என்ற நந்தனாரின் நினைவு ஈசனை சிவலோகநாதரை அடைய அவர் ஆணைப்படி நந்தி சிறிது விலக லிங்கவடிவில் சிவலோகநாதரை வணங்கி மகிழ்ந்தார். திருநாளைப்போவார்- நந்தனார் வழிபட நந்தியை விலகியிருக்கச் சொன்னதலம்.
கோவிலுக்குப் பின்னால் உள்ள குளத்தை தூர்வார முயற்சித்தவருக்கு விநாயகர் பூதகணங்களின் உதவிபுரிய நந்தனாருக்கு துனையாக விநாயகர்- கணபதி குளம் வெட்டிய தலம்.
பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், இராசேந்திரசோழன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர் வழி பட்டது.
சோழநாட்டில் பஞ்சம் நிலவியதால் சிவத்தலங்களில் சிறப்பு பூஜை நடத்த மன்னன் ஆணை. அப்போது அங்கு வந்த சுந்தரரை தங்கள் குறைகளை மகேசனிடம் கூறவும் அதற்கு கைமாறாக 12வேலி நிலம் தருவதாகவும் சொன்னார். சுந்தரர் பாட மழை 10நாடகள் நிற்காமல் பெய்ய மீண்டும் பாடி மழையை நிறுத்த இரு பன்னிரு(24) வேலி நிலம் கோயிலுக்கு மன்னன் அளித்தான்.
சப்த ரிஷிகள் தவம் செய்ய தர்பையை உருட்டு ஓடவிட அச்சக்கரம் தங்கிய இடத்தில் யாகம் செய்தனர். வேதவல்லுனர் சூதபுராணிகர் அங்கு வந்து பூவுலகில் இத்தலமே சிறந்தது எனக்கூறினார்.
இந்திரன் பூஜித்து சாபம் நீங்கியது. வீரவிக்ரமச் சோழன் மகப்பேறு இன்றி இங்கு வந்து மனைவியுடன் நீராடி வழிபட்டு மகன் பெற்றான்.
சித்சபேசன் பட்டம் கிடைக்க இங்கு வந்து வணங்கினான். இங்கிருந்த தாசி சௌந்திரத்தைக் கண்டு அவளுடன் மகிழ்ந்திருந்தான். சிதம்பரம் செல்ல அவளை அழைக்க அவள் மறுக்க கோபத்தில் அவள் அணிகலன்களைக் களவாடிக் கொன்றான். ஊர் மக்கள் திருக்குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யச் சொல்ல குளத்தில் மூழ்கியவன் தன்னிலை மறந்து உண்மையைச் சொன்னான். களவாடிய நகைகளுடன் மேலும் பல நிலபுலன்களைக் கோவிலுக்கு தானமாக கொடுத்தான்.
புங்கு+ ஊர்+புங்கூர். அருகிலுள்ள மேலாதனூர்- 27/63- நந்தனார் நாயனார்-திருநாளைப் போவார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)