ஊர்:தாமல்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாராகீஸ்வரர்(சு) ஸ்ரீநரசிம்மேஸ்வரர் /திருப்பன்றீஸ்வரர் லிங்கத்தின்மேல் விஷ்னுவின் சங்கு மற்றும் சக்கரம்.
இறைவி: ஸ்ரீகௌரியம்மாள்.லிங்கவடிவில்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசரபேஸ்வரர்-ஸ்ரீசொர்ணாம்பிகா
ராஜகோபுரம்-மொட்டை
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி: 9994367390 / 9965067780 / 0442724 6636
வாகீஸ்வர்ர் சூட்சும லிங்கம் என அழைக்கப்படுகின்றார். வணங்குபவர்களின் பிரச்சனைகளை கேட்காமலேயே தீர்த்து வைப்பவர். லிங்கத்தின்மேல் விஷ்ணுவின் சங்கு மற்றும் சக்கரம் உள்ளதால் இவரை வணங்கினால் பெருமாளையும் வணங்கிய பலன். குடும்பத்தில் நல்லவை நடக்கும். வராகப் பெருமாள் பூமாதேவியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் தீரும். நிலம் வாங்க தடை விலகும். வீடு கட்டும் பாக்யம் உண்டாகும். தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மணவாழ்வு சிறக்கும்.
காஞ்சிபுரத்திற்கு அரணாக விளங்கிய ஊர். இங்கிருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு சுரங்கப்பாதை உள்ளது. அன்னியர் படையெடுப்பின்போது தாமலில் உள்ள சிலைகள் ஆபரணங்கல் காஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பாது காக்கப்படும்.
சோழ அரசர்கள் இரண்டாம் குலோத்துங்கன் இரண்டாம் ராஜராஜன் ஆகியோர் 11,12 ம் நூற்றாண்டில் கோவிலை புதிதாக கட்டியுள்ளனர். விஜயநகர பேரரசர் திருமலைராயர் கருவரையை புதுப்பித்துள்ளார்.
வரலாறு:-கடவுளை வணங்க வேண்டிய நேரத்தில் காமவசப்பட்ட பெற்றோருக்கு பிறந்த அசுரன் இரண்யாட்சன். தேவலோகத்தைக் கைப்பற்றி இந்திரனை விரட்டி அடைத்தான். பின் பூமியை தூக்கிக் கொண்டு சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்தான். பூமி மறைக்கப்பட்ட்தால் யாகங்கள் இல்லாமல் தேவர்களும், சிரார்த்தம் இல்லாமல் பிதுர்களும் வருந்தினர். அனைவரும் மகாவிஷ்னுவிடம் தங்களுக்கு உதவ வேண்டுகேள் விடுத்தனர். தனது மனைவி சொருபமான பூமாதேவியை மீட்க விஷ்ணு பன்றிமுக வராஹ உருவம் எடுத்தார். காலகேய்புரம் சென்று இரண்யாட்சன் போர்புரிந்து அவனைக் கொன்றார், பூ(மி)வராகர் எனப்பட்டார். பூமியை அதனுடைய இட்த்தில் வைத்துவிட்டு இரண்யாட்சன்மேல் கொண்ட சீற்றம் குறையாமல் பூலோகத்தில் சுற்றிவர பயந்த அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் பூவரகரை எதிர்கொண்டு அணைத்து கொம்பால் குத்திக் கிழிக்கப்பட்ட இரண்யாட்சணின் சக்தி படிந்திருந்த வராகத்தின் கொம்பை முறித்து மாலையாக அணிந்து கொண்டார் பூவரகரின் ஆவேசம் அடங்க சிவனை வணங்கி திருப்பதி சென்றார். திருப்பதி வராக சேத்திரம் ஆனது. ஆவேசம் அடங்கிய பூவராகர் சிவனை வணங்கிய இடம் தாமல். சிவன் பூவராகரை தழுவியதால் இங்கே இருவரும் அருள் பாலிக்கின்றனர். அதனால்தான் லிங்கத்தின்மேல் விஷ்ணுவின் சங்கு மற்றும் சக்கரம் உள்ளது.
திருமால் வராக(3) அவதாரத்தின்போது வழி பட்டது. திருமால் நரசிம்ம(4) அவதாரத்தின்போது வழிபட்டது. நரசிம்மத்தின் உக்ரம் தணிக்க சரப அவதாரம். சரபேஸ்வரருக்கு கேது பகவனுக்கான பரிகாரங்கள் -கேது பரிகாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)