ஊர்: விளங்குளம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர், ஸ்ரீவிளாமுடைய தம்பிரான்
இறைவி: ஸ்ரீஅபிவிருத்திநாயகி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆதி பிருஹத் சனீச்வரர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0830-1230,1630-1930
பூவுலகில்; ஆற்றல் மிக்க இடம் தேடி சிவன் வந்து அமர்ந்த தலம் அட்சயபுரி-விளங்குளம். அபிவிருத்தி தலம். அட்சயபுரி தலம்.
தலபுராணம்-விளாமரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் தன் அண்ணன் யமனால் ஊனமுற்ற காலுடன் வந்து கொண்டிருந்த சனி கால் தடுக்கி அருகில் இருந்த பள்ளத்தில் விழும்போது ஈசனே எனக் கத்திக் கொண்டு விழுந்தார். அப்போது அதுகாறும் அடைபட்டுக் கிடந்த ஞானவாவி மடைதிறந்து வெளியேறி சனியை மேலே கொண்டுவந்து சேர்த்தது, தீர்த்தம் பட்டு கால் ஊனம் நீங்கியது. நீங்கிய ஊனத்தை அங்கிருந்த காகம் ஏற்றுக் கொண்டதால் சனி அன்று முதல் காகத்தை தன் வாகனமாகக் கொண்டார். சிவனை வழிபட்டு மந்தா ஜேஷ்டா தேவியரை மணந்தார். இத்தலத்தில் தேவியருடன் அமர்ந்து ஆதிபிரஹத் சனிபகவான் அருள் புரிந்து வருகின்றார். பூசமருங்கர், சனிப்பாணி சித்தர்கள் வழிபட்ட தலம். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சனிக்கிழமை பிறந்தவ்ர்களும் வழிபட வேண்டிய சனி பரிகரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)