ஊர்:திருவாவடுதுறை.தி.த-153+மு. நவகோடி சித்தபுரம், கோகழி, அரசவனம், நந்திசேத்திரம், மகாதாண்டவபுரம், துறைசை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமாசிலாமணீஸ்வரர், ஸ்ரீகோமுக்தீஸ்வரர், ஸ்ரீபூகைலேசுவரர், ஸ்ரீகோகழிநாதர், ஸ்ரீமுக்தியாசர், ஸ்ரீமாசிலாமணிநாதர், ஸ்ரீஅணைத்தெழுந்தநாயகர், ஸ்ரீமகாதாண்டவேசுவரர், ஸ்ரீபுத்திரதியாகர், ஸ்ரீபோதியம்பலவாணர், ஸ்ரீஅர்த்ததியாசர், ஸ்ரீசிவலேகநாயகர்
இறைவி: ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை, ஸ்ரீஒப்பிலாமுலையம்மை,
தாயார்
உற்சவர்: ஸ்ரீஅணைத்தெழுந்தநாயகர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்- வள்ளி, தெய்வானை. ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீதிருமூலர்,ஸ்ரீதிருமாளிகைத்தேவர்,
த.வி.துனைவந்தவிநாயகர்
5நி.ரா.கோபுரம்.
3பிரகாரங்கள்.
தீர்-கோமுகி,பத்ம,கைவல்ய,
மரம்-படர்அரசு.
தி.நே-0900-1200,1700-2000
தொலைபேசி-04364-232021
நந்திதேவரிடம் ஆசிபெற்று சுந்தரநாதன் வானில் திருவாவடுதுறை வரும்போது பசுமேய்ப்பவன் மூலன் இறந்துகிடக்க பசுக்கள் வாடியிருப்பதுகண்டு மூலனின் உடலில் பர்காயம் செய்து புகுந்தார். புசுக்கள் சந்தொஷமடைய அவைகளுடன் ஊருக்குள் சென்றார். மூலனின் மனைவி அவர் வந்தது கண்டு சந்தோஷப்பட தான் உண்மையான மூலன் இல்லை எனக்கூறி வீட்டிற்குச் செல்லாமல் மண்டபத்தில் தங்கினார். ஊர் மக்களுக்கு உண்மையை விளக்கிட தன் உடல் மறைத்து வைக்கப்பட்ட மரப்பொந்தை அடைந்தபோது அது அங்கிருக்கவில்லை. ஈசன் செயலால் அது மறைக்கப்பட்டது. அருகிலிருந்த திருவாவடுதுறை படர் அரசின் கீழ் யோகநிலையில் 3000 ஆண்டுகள் அமர்ந்து ஆண்டிற்கு ஒன்றாக 3000 பாடல்கள் (திருமந்திரம்) அருளினார். திருமாளிகைத்தேவர் போகரின் சீடர். தீர்த்தமும் பூவும் பூஜைக்கு எடுத்துச் செல்லும் போது வழியில் சவ ஊர்வலம் வர தன் பூஜைக்கு அபவாதம் ஏற்படும் என்றெண்ணி வானில் வீசி அது அங்கேய நிற்க செய்தார். பின்னர் விநாயகரை வணங்கி திரும்ப அதைப் பெற்றார். அவர் வானில் வீசிய தீர்த்தமும் பூவும் சவத்தின்மேல் பட்டதால் அச்சவம் உயிர் பெற்றது. குழந்தையில்லா மகளிர் தேவரை வணங்கி ஆசிபெற ஆசிபெற்ற அனைவருக்கும் தேவரைப் போன்றே குழந்தை பெற்றனர். கணவன்மார்கள் தேவரின்மேல் பழி சுமத்தி அரசரிடம் சொல்ல அவர் தேவரை கைது செய்ய ஆட்களை அனுப்ப இறையருளால் அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே கட்டுண்டனர். அரசன் 4வகை சேனையுடன் போரிட வர தேவர் அம்பிகையை வணங்க அம்மை நரசிங்க மன்னனை கைது செய்ய நந்தியம்பெருமானுக்கு ஆணை யிட்டாள். கைதான மன்னன் தன் தவறை உணர்ந்தான். மன்னிப்புக் கோர அருள். நந்திதலம். திருமூலர், திருமாலிகைத்தேவர் சமாதிகள். நவகோடி சித்தர் தலம். இறைவி பசுவடிவில் வழிபட்டது. ஞானசம்பந்தர் பெற்கிழி பெற்றது. சுந்தரர் உடற் பிணி தீர்ந்தது. திருவிடைமருதூரின் நந்தி பரி வாரத்தலம். தேவர்கள் படர்அரசு ஆக இறைவன் எழுந்தருளியது. தியாகராசரை இந்திரனிடமிருந்து பெற்ற முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளியது. தரும தேவதை இறைவன் வாகனமானது. சேரமான் பெருமான் நயனார், விக்ரம பாண்டியன் வழிபட்டது. நந்தி மிகப் பெரியது. இறைவன் வீரசிங்க ஆசனத்திலிருந்து சுந்தரநடனம் ஆடி மகாதாண்டவம் புரிந்த தலம். ஆ+அடுதுறை= கோமுக்திபுரம். திருவிடை மருதூர் பரிவாரத் தலம்- நந்தி-7/9. 31/63-மூலன்-திருமூலர் நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)