ஊர்: இடையார்பாக்கம்,இடராற்றுப்பாக்கம்,இடையாற்றுப்பாக்கம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருப்பாதமுடையார்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்க்கை
மரம்:
தீர்: தாமரைக்குளம்.
காலை ஒருகால பூஜை. தி.நே-0800-1200
இடர் என்பது துன்பத்தையும் ஆற்றுப்படுத்தல் என்பது நீக்கப்படுதல் என்ற பொருளைக் குறிக்கும். பிறவித் துன்பத்தைப் போக்கும் இடராற்றுப்பாக்கம் நாளடைவில் மருவி இடையாற்றுப் பாக்கம்-இடையார்பாக்கம் எனலாயிற்று. குலோத்துங்க சோழன் தன் ஆலோசகர்களை அழைத்து சிவபிரானின் திருப்பாதம் கண்டவர் யார் என்று கேட்க மார்க்கண்டேயனை காலனிடமிருந்து காப்பாற்ற உயர்த்திய தமது திருவடியினை, திருமாலும் நான்முகனும் தேடியும் கண்டறிய இயலாத அத் திருப்பாதத்தினை உலக மக்களை ஆட்கொள்வதற்காக திருத்தில்லையில் நடனம் ஆடும் விதமாக உயர்த்தி திருப்பாதம் காட்டி அருள் புரிந்திருக்கின்றார், மேலும் கயிலையிலிருந்து வந்தபோது யாரும் அறியாமல் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு செல்பவர் பின்னால் சென்று இளம்பிறைசூடி மலைமகளுடன் அருள்பாலிக்கும் ஐயாரப்பனைத் தரிசிக்கும்போது இதுவரை அறிந்திராத திருப்பாதம் கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர். அப்பெருமானின் திருப்பாத சிறப்பினை உணர்த்தும் விதமாக திருப்பாதமுடையார் என்ற திருப்பெயரோடு கோவில் கட்டத் தீர்மாணித்து கட்டிய கோவில். முதற் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராஜராஜன் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)