ஊர்:திருபுவனம்#+மு, திருபுவனவீரபுரம்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரம்பகரேஸ்வர்
இறைவி: ஸ்ரீதர்மசம்வர்த்தினி ,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி நான்கு கரங்களுடன்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை.
ஏழுநிலை ராஜகோபுரம், மாடக்கோயில்
5நி.+3நி.உள்கோபுரம்
மரம்: 13தளங்கள் கொண்ட அரியவகை வில்வம்,
தீர்: சரப தீர்த்தம் உளபட ஒன்பது தீர்த்தங்கள்.
தி.நே-0600-1200,1700-2100
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
சரபேஸ்வரர்-யாளிமுகம்(காளி, சிவன், துர்க்கை, பெருமாள்) -8கரங்கள் இறக்கைகளுடன்.
ராகு காலத்தில் வழிபாடுசிறப்பு -காரியவெற்றி பில்லி சூன்யம், பகை, திருமணத்தடை, பேறின்மை அகலும்.
கம்பகேஸ்வரர்-நடுக்கம் தீர்த்த பெருமான், சுவாமி சன்னதி யாணை இழுத்து வருவது போன்ற ரத அமைப்புடன்.
இராமாயண, மகாபாரத கதைகளை விளக்கும் சிறபங்கள் கோவிலில் நிறைய உள்ளன.
அஸ்வக்கிரீவன், விருஷபக்கிரீவன், வியாளக்கிரீவன், பிரமன், இலக்குமி, சுகோஷன், மாந்தாதா, நாரதர், வரகுணர் வழிபட்ட தலம்.
வடநாட்டில் தான் பெற்ற வெற்றியில் கிடைத்த செல்வங்களைக் கொண்டு மூன்றாம் குலோத்துங்கனால் கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின் வந்த மன்னர்களால் தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்டது.
சரபேஸ்வரர்- வழிபடுதல் பில்லி சூன்யம் எதிரிகள் பயம் நீங்கும். 11வாரம் தீபம், 11வலம் வருதல் சிறப்பு. சிவன், விஷ்ணு,பிரத்தியங்கராதேவி, சூலினி துர்க்கை ஆகிய நான்கு பேரின் அம்சம் சரபேஸ்வரர். வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடல் சிறப்பு.
தலவரலாறூ:வரகுணபாண்டியன் போர்களத்தில் தவிர்க்கமுடியாமல் ஒர்ர் அந்தணனை கொன்றுவிட்டதால் அவரை பிரம்ஹத்தி தோசம் தொடர புத்தி கலங்கி நிலைதடுமாறி திருவிடைமருதூர் கோவிலுக்குள் வந்ததும் அந்த பிரமஹத்தி தோஷம் விலகி சுய நினைவு வந்தது. முன் வாசல் வழி சென்றால் தோஷம் பற்றிக் கொள்ளும் என்ற நினைப்பாலும், தொடர்ந்து ஓடிய நிலையில் நடுக்கம் நிற்கவில்லை. திருவிடைமருதூர் கோவில் பின்வாசலிலிருந்து நேர் கோட்டில் இருக்கும் திருபுவனம் முன்வாசலுக்குள் புகுந்து கம்பகேஸ்வரை வழிபட்டார். அப்போது அவரின் நடுக்கம் நின்றிருந்தது. உடலில் பழைய தெம்பும் வலுவும் மீண்டும் வந்தது- கம்பகம்-நடுக்கம். அதை போக்கிய ஈஸ்வரன் கம்பகேஸ்வரர்.
தானே கடவுள் என்று திரிந்த இரண்யகசிபுவை நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்று அவனின் இரத்தத்தை குடித்த விஷ்ணுவை அவனுடைய அசுர ரத்தம் ஆட்கொண்டது. அதனால் நரசிம்மரின் உக்கிரம் குறையாதிருக்க உலக உயிர்களும் தேவர்களும், இலட்சுமியும் அச்சம் கொண்டு சிவனை வேண்ட எட்டு கால்கள், நான்கு கைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள், பற்களுடன் யாளிமுகம் கொண்ட சரபேஸ்வரராக ஈசன் உருக் கொண்டார். பாதி அகோர பறவையாகவும் பாதி அகோர மிருகமாகவும் தோன்றிய உருவத்தைப் பார்த்ததும் நரசிம்மர் கோபம் போய் பயத்துடன் சரபேஸ்வரரைத் தாக்க முற்பட்டு அவரைத் தொட்டவுடன் நரசிம்மர் மறைந்து விஷ்ணுவாக மீண்டார்-
வரை படம்: விரிவாக்கு(enlarge)