ஊர்:திருமருகல்.தி.த-197+மு #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமாணிக்கவண்ணர்(சு), ஸ்ரீரத்னகிரீஸ்வரர் -கிழக்குப் பார்த்த சன்னதி
இறைவி: ஸ்ரீவண்டுவார்குழலி, ஸ்ரீஆமோதாளநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள்வள்ளி,தெய்வானையுடன் ,ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயனார், ஸ்ரீசெட்டிப்பிள்ளை, ஸ்ரீசெட்டிப்பெண். ஸ்ரீஆனந்தக் கூத்தர், ஸ்ரீஞானசம்பந்தர் கூத்தாடும்பிள்ளையாராக ஸ்ரீசுரந்தீர்த்த விநாயகர். ஸ்ரீசந்தான விநாயகர், ஸ்ரீபிராவிடையார்-ஸ்ரீசௌந்திரநாயகி.
5நி.கி.ரா.கோபுரம்-68'
2பிரகாரங்கள்.
தீர்-இலக்குமி தீர்த்தகுளம், மாணிக்க திருக்குளம். சீராளன் குளம்.
தலமரம்-மருகல்-வாழைமரம். வன்னிமரம்
5காலவழிபாடு.
தி.நே-0600-1230,1600-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
மருகல்-ஒருவகை கல்வாழை. கதலி வனக்ஷேத்திரம். கோவிலுக்கு வெளியில் வளர்வதில்லை.
பாம்பு கடித்து இறந்த செட்டிமகனை ஞானசமபந்தர் பதிகம் பாடி எழுப்பி செட்டி பெண்ணுக்கு திருமணம் அருளிய தலம்.
பிரம்மன் படைப்புத் தொழிலில் சிறப்பு பெற தவம் செய்த தலம்.
விஷம் தீண்டா-விடந்தீர்த்த பிள்ளையார் சிறப்பு.சோழ மன்னனுக்கு வெப்ப நோய் தீர்த்த சுரந்தீர்த்த விநாயகர்.
சிலந்திச் சோழன் -கோச்செங்கண்ணன் கட்டிய யாணையேறா மாடக்கோவில்-78-ல் ஒன்று.
அம்மன்மகாமண்டபத்தில் ஸ்தல புராண வரலாறு சித்திரங்களாய்.
குசகேது அரசன் தன் மக்கள் பஞ்சத்தில் வாடுவதைக் கண்டு தான் அரசனாக இருந்து என்னப் பயன் என தூக்கிலிட்டுக்கொள்ள முயற்சிக்க ஈசன் தோன்றி அருள். நீர்,முத்து, மாணிக்கம், நெல் மழை பொழிய குடிகள் அனைவரும் இன்புற்றனர். அரசன் கோவிலில் திருப்பணிகள் செய்தான்.
வைப்பூர் தாமன் தன் ஏழு பெண்களையும் பொருள் விருப்பால் சொற்தவறி முறைதவறி அயலார்க்குப் பெண்டாக்க கடைசிப்பெண் மாமன் எண்ணப்படி திருமணம் செய்ய மாணிக்கவண்ணரை வழிபட்டு அன்றிரவு ஓர்மடத்தில் தங்கியிருக்க மாமனை அரவம் தீண்டி இறந்துவிட்டான். அப்பெண் மாணிக்கவண்னரிடம் அழுது புலம்பியதை அப்போது அங்கு வந்த திருஞானசம்பந்தப்பெருமான் கேட்டு அவள்பால் இரக்கங்கொண்டு பெருமானிடம் பதிகம் பாடி வேண்ட செட்டிப்பிள்ளை உறக்கத்திலிருந்து விழித்ததுபோல் எழ கிணறு, வன்னி சான்றாக இருவருக்கும் மணம் செய்வித்தார்.
சித்திரை பெருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)