ஊர்:திட்டக்குடி.வித்யாரண்யம், திருவட்டபுரி, வசிஷ்டபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்தியநாதசுவாமி, ஸ்ரீதான்தோன்றிஈசுவரர்,
இறைவி: ஸ்ரீஅசனாம்பிகை,காமகோட்டத்துநாச்சியார்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதேவநாக, ஸ்ரீவருண, ஸ்ரீவாயு, ஸ்ரீநாக, ஸ்ரீஇந்திர, ஸ்ரீசூரிய, ஸ்ரீகாசி, ஸ்ரீ ஈசான்ய லிங்கங்கள். ஸ்ரீவிக்னேஸ்வரர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீபிரம்மா
தவி.:கோடிவிநாயகர்
5நி.ரா.கோபுரம்
தீர்-சக்தி,ஞானவளி,ராம,பரதமுதலிய24
மரம்-வேங்கை.
தி.நே-0700-1200,1700-2000
வசிட்டர் ஆலோசனைப்படி காமதேனு ஆலயம்- வசிட்டர் வழிபட்டது. பங்குனி 11,12,13 சூரியஒளி-பாஸ்கரத்தலம். திட்டக்குடி-வசிஷ்டம்-முக்தி. சப்த துறைகளில் ஒன்று.6ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. "நமச்சிவய" பஞ்சாட்சரம் அருளிய தலம்.
56 சிறந்த தலங்களில் சிறப்பான 3 தலங்களில் ஒன்று. (சிதம்பரம், விருத்தாசலம், வசிஷ்டபுரி) எல்லாத்தலங்களிலும் உய்ர்ந்த தலம் ஏனெனில் விக்னேஸ்வரர், முருகன், விஷ்ணு, காளி, துர்க்கை, பிரம்மா ஆகியோருடன் சிவன் உமையுடன் திருமணக் கோலத்தில் இருந்த தலம்.உயிர்களுக்கு தவம் பெருக சிறந்த தலம். பிரம்மன் வியாக்கிருதி என்ற மாகா மந்திரங்களாஇ ஓதி நினைத்த மாத்திரத்தில் ஐம்பூதங்களையும் ஜீவன்களையும் படைத்தார். அவர் மகன் வசிஷ்டர் எல்லா உயிர்களுக்கும் முக்திவழங்க மந்திரத்தைக் கூறுமாரு தன் தந்தையிடம் கேட்க சிவனின் குற்றமற்ற பஞ்சாட்சரத்தை சொல்லச் சொன்னார். பலத் தலங்களில் சிவபூஜை செய்தும் சிவனைக் காணமுடியாமல்விஷ்ணுவிடம் ஆலோசனைக் கேட்க அவர் இங்குள்ள வைத்தியநாதசுவாமிச் சொல்லி தெய்வலோகத்திற்கு வாசல்படியாக இருக்கும் இங்குவர பலமுனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க கண்டனர். பிரம்மன் ஒரு மன்வந்திரம் தவம் செய்தான். பின் 10 அசுவமேதயாகங்களைச் செய்தான். மகிழ்ந்த ஈசன் தோன்ற பிரம்மனும் சரஸ்வதியும் வசிஷ்டருடன் வீழ்ந்து வணங்கினர். தன் மகன் வசிஷ்டருக்கு ஞான பிரசாதமான பஞ்சாட்சார குருமந்திரத்தை உபதேசம் செய்யச் சொன்னார். சரீர சுத்தியடைந்த வசிஷ்டருக்கு 'ஓம் நமச்சிவய' மந்திரத்தை உபதேசித்து மறைந்தார்.
சூரியகுல மனுச்சக்ரவர்த்தி தன் குலம் காக்க ஓர் குரு இருந்தால் நல்லது என நினைத்து தேவகுரு பிரகஸ்பதியை நாட அவர் தான் மானிடருக்கு குருவாக இருக்க முடியாது என்றும் இந்த வனத்தில் உள்ள வசிஷ்டரைக் கேள் என அனுப்பினார். மனு வசிஷ்டரை அனுகி கேட்க தன் ஞானதிருஷ்டியில் உணர்ந்தவர் சாதாரண மானிடராகிய உனக்கு அதை உபதேசிக்கமுடியாது என்றார். மனந்தளராது மனு அங்கு ஓர் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டான். சிவன் வசிஷ்டரிடம் மனுவுக்கு மந்திரம் உபதேசிக்கச் சொல்ல பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தார். சந்தோஷத்துடன் 3 வருடங்கள் மனு அங்கு தங்கியிருந்தான். வசிஷ்டரின் விருப்பப்படி சிவனுக்கு ஓர் ஆலயம் அமைத்தான். சுற்றிலும் குடியிருப்புகள் அமைத்து நகர் உருவாக்கினான். உற்சவங்களை ஏற்படுத்தினான். விசித்திரமான நந்திகேஸ்வரரை அமைத்தான். அஷ்ட பைரவர், நவக்கோள்கள் அமைத்தான். ஈசன் உமையுடன் அவனுக்கு காட்சி. அவன் குலத்தில் பிறப்பவர்கள் கீர்த்தியுடன் இருக்க அருள். வசிஷ்டருக்கு அருந்ததியை கன்னிகாதானம் செய்ததலம்.- திருமணத்தலம். விக்னேஸ்வரர்-ஆவணி சதுர்த்தி, முருகன்-பூசம், விஷ்ணுஆனி உற்ச்சவம், காளி சித்திரை பவுர்ணமி மற்றும் தேர் திருவிழா சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)