ஊர்:திருநின்றியூர்.தி.த-73
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாலட்சுமீசர்,ஸ்ரீலஷ்மிபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீலோகநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜமதக்னீஸ்வரர், ஸ்ரீபரிகேஸ்வரர்-ஸ்ரீபரசுராமர்லிங்கம்.ஸ்ரீமகாவிஷ்னு, ஸ்ரீகஜலட்சுமி.
3நிலைராஜகோபுரம்
2காலவழிபாடு.
தீர்-லட்சுமி,நீலிமலர்பொய்கை
மரம்-விளா.
தி.நே-0630-1200,1700-1900
தஞ்சை மன்னன் கோச்செங்கன் பரிவாரங்களுடன் சிதம்பரம் சென்று தரிசனம் செய்து அடுத்தநாள் காலை திரும்பி வந்து விடுவது வழக்கம். ஒரு நாள் நடராஜரின் அர்த்தஜாம பூஜைக்காக அடர்ந்த காடாக இருந்த இந்த ஊரைத் தாண்டிச் செல்லும்போது கொண்டுவந்திருந்த தீவட்டிகள் அனைந்து விடவே கூட வந்தவர்கள் அடுத்தநாள் அவருடன் வர பயந்தனர். நடராஜர் தரிசனம் முடிந்து கண்ணயர்ந்த கோச்செங்கன் கனவில் மகாலட்சுமி தோன்றி என்னைக் கவனியாமல் நான் இருக்கும் ஊரை நீ தாண்டி சென்றதால் தீவட்டிகள் அணைந்தன என்றார். தீவெட்டியின் திரிகளை நிறுத்திவிட்டதால் திரி நின்றவூர் என்பது திருநின்றவூர் என்றானது.
மகாலட்சுமி தினமும் சிவனை வணங்கியதால் காட்சி- பெருமாள் மார்பில் இருக்கும்படி வரம் பெற்றார்- மகாலட்சுமிபுரீஸ்வரர். வானத்திலிருந்து ஒரு பசு தினமும் வந்து சிறிது நேரத்தில் மீண்டும் வான்வழி சொல்வதைப் பார்த்த மன்னர் அந்த இடத்தில் விருப்புடன் கோயில் கட்ட தோண்டியபோது குருதி-லிங்கம் கண்டு கோயில். இடித்த இடி லிங்கத்தின் உச்சியில் குழி. லிங்க மேனியிலிருந்து பெருக்கெடுத்த குருதி மூன்று குளங்களில் தேக்கம்.
ஜமதக்னி ரிஷியின் மனைவி வானத்தில் சென்ற கந்தர்வன் கர்த்தவீர்யார்ஜுனன் உருவத்தை கீழே இருந்த நீரில் பார்த்தனால் பூஜைக்குரிய கைகரியங்களை அவரால் செய்ய முடியாதுகண்டு மகன் பரசுராமரைக் கூப்பிட்டு தன் மனைவியின் தலையை வெட்ட சொல்ல அவ்வாறே பரசுராமர் செய்ததால் இருவரையும் தோஷம் பற்ற திரு நின்றவூர் குளத்தில் நீரடி இறைவனை வழிபட்டு தங்கள் பாவம் நீக்கினர் இருவரும். இருவருக்கும் காட்சி தந்த- ஜமதக்னீஸ்வரர், பரிகேஸ்வரர்.
அகத்தியர். இலக்குமி, பரசுராமர், அகத்தியர், இந்திரன், ஐராவதம், காமதேனு வழி பட்டது. ருத்ராட்சைப் பந்தல். இந்திரன் அனுஷ நட்சத்திரத்தில் வழிபட்டு தன் இன்னல்கள் தீரப்பெற்றதால்-அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
மனைவியின் மனம் புண்படும்படி பேசுவது, அடுத்தவரை ஏளனமாக பேசி எள்ளி நகையாடுவது, தாய் தந்தையரை பேணாதிருப்பது, சகோதர்களுக்கு செய்யும் துரோகம், வியாபாரத்தில் பொய் பேசுவது ஆகியன ஏற்படுத்தும் தோஷங்களுக்கு உலகநாயகியிடம் மன்னிப்புகேட்டு வேண்டிக்கொள்ளல் தோஷங்கள் விலகி நற்பேறு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)