ஊர்:திருமுதுகுன்றம்#தி.த41+மு. விருத்தாசலம். விருத்தகாசி. பழமலை. மணிமுத்தாறு கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர், ஸ்ரீபழமலைநாதர்
இறைவி: ஸ்ரீவிருத்தாம்பிகை, ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: 28ஆகமக்கோயில், ஸ்ரீஜம்பு,பஞ்சலிங்கம், ஸ்ரீவிசுவநாத, ஸ்ரீஏகாம்பர, ஸ்ரீசகஸ்வர, ஸ்ரீஅண்ணாமலை லிங்கங்கள் ஸ்ரீசூரிய, ஸ்ரீவருண லிங்கம், ஸ்ரீமுப்பிள்ளையார் ஸ்ரீமயூரமுருகன்-ஆறுமுகம்-ஸ்ரீசக்கரம் 12கரங்கள்.வள்ளி,தெய்வானை, ஸ்ரீபிந்துமாதவப்பெருமாள். ஸ்ரீசப்தமாதர்கள் கன்னி மூலையில் ஸ்ரீமாற்றுரைத்தபிள்ளையார்.
த.வி-ஆழத்துபிள்ளையார்.
7நி.ரா.கோபுரம்4புறமும்+5நி.உள்
5பிரகாரங்கள்
தீர்-மணிமுத்தாறு,அக்னி,குபேர,சக்ர.
மரம்-வன்னி(கற்பகமரம்).
4காலவழிபாடு.
5தேர்திருவிழா.
தி.நே-0600-1230,1530-2100
#04062011-குருஸ்ரீ பகோரா-பயணித்தது
தொலைபேசி-04143-230203
பிரம்மன் பிரபஞ்சத்தை உறுவாக்கும் போது தொடக்கமாய் சிவன் தாமே மலையாக நின்ற பழமலை. விருத்தகாசி. காசிக்கு இனை.
வாழ்வில் நிறைவு கண்டு இங்கு இறப்பவரின் உயிரை தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய இறைவி முந்தானையால் விசிறி இளைப்பாற்றுகிறாள். எப்படிப்பட்ட பாவ ஜென்மத்தின் ஆத்மாவிற்கும் மோட்ச பதவி கிட்டும். பிரமனும், அகத்தியரும் வழிபட்டது.
விருத்தம்-பழமை, அசலம்-மலை-முதுகுன்றம்.
16கால்மண்டபத்தில் 72 வகையான பரதநாட்டியப் பாவனைகள். 28 ஆகமக்கோயில்-முருகன் பூசித்தது. 5 எழுத்தை சிறப்பிக்க கோபுரங்கள், கொடிமரங்கள், மூர்த்தங்கள், பஞ்ச லிங்கங்கள், நந்திகள், தீர்த்தங்கள், தேர்கள், வெளி-உள் மண்டபங்கள் எல்லாம் ஐந்து. பஞ்ச பூதங்களின் இருப்பிடம்-பஞ்சலிங்க வழிபாடு. மாசி, ஆடிபூரம் பெருவிழா. புண்ணியமடுவில் நீராடல் சிறப்பு. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வடக்கு கோபுர வாயில் உட்புற கூறையில் நேராக வெளியிலிருந்து உள்ளே செல்லும்போது அண்ணாந்து பார்த்தால் ஒரு காட்சியும்-பார்வதி பரமேஸ்வரர், திரும்பிவரும்போது அண்ணாந்து பார்த்தால் வேறொரு காட்சியும்-லட்சுமிதேவி யாகவும் தெரியும் வண்ணம் சிறபம் சிறப்பு. 18அடி ஆழ்த்தில் உள்ள ஆழத்து பிள்ளயார் சிறப்பு.
ஈசனைப் பாடாமல் போன சுந்தர மூர்த்தி நாயனாரை வேடர் வடிவம் கொண்டு மடக்கி பொற்கிழிகளை கொள்ளையடித்த முருகப்பெருமான் வேடப்பர் என்ற திருநாமத்தில் கோவில் கொண்டுள்ளார். இதைக் கண்ட விநாயகர் மகிழ்ச்சியில் கூத்தாடினார். விருத்தாசலத்திலிருந்து வேடப்பர் கோவிலுக்குச் செல்லும் வழியில் கூத்தாடும் விநாயகர் கோவில் உள்ளது.
சுந்தரர் பரவையருக்காக பொன் பெற்று மணிமுத்தாற்றி லிட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்தார்.பொருட்களை இழந்த சுந்தரர் திருமுதுகுன்றத்தில் பதிகம் பாடி மீண்டும் பன்னீராயிரம் பொற்காசுகலைப் பெற்றார்.. ஆரூர்வரை பத்திரமாக் கொண்டு செல்ல ஈசனின் உதவியை நாட இங்குள்ள மணிமுத்தாறு நதியில் பொறகாசுகளைப் போட்டு கமலாலயத்தில் மூழ்கி எடுத்துக் கொள் என்றார். சுந்தரர் இங்கு போட்ட பொற்காசுகள் அங்கு எடுக்கும்போது மாற்று குறையாதிருக்குமோ எனக்கேட்க சிவபிரான் இங்குள்ள விநாயகரிடம் கொடு அவர் மாற்றுரைத்து மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் நீ மூழ்கி எடுக்கும் பொன்னை மாற்றுரைத்து தரம் பார்த்து தருவார் என்றார்.- கன்னி மூலையில் மாற்றுரைவிநாயகர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)