ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!
மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!
######
சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!
சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
சிவ அடைப்பு, திறப்பு மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்
அடைப்பு
அங்கம் அடைத்தேன்
அகலம் அடைத்தேன்
சிங்கம் அடைத்தேன்
சிவலிங்கம் அடைத்தேன்
எங்கும் அடைத்தேன்
இனி கிடக்க சிவா!
திறப்பு
அங்கம் திறந்தேன்
அகலம் திறந்தேன்
சிங்கம் திறந்தேன்
சிவலிங்கம் திறந்தேன்
எங்கும் திறந்தேன்
இனி போக சிவா!
#####