ஓம்நமசிவய!
முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை வசுக்கள்
வழிபடவேண்டிய பைரவர் தலம் பலிபீடமூர்த்தி-அஷ்டபைரவர்,சீர்காழி
வழிபடவேண்டிய தெய்வம் பிரம்மஞானபுரீஸ்வரர்-புஷ்பவல்லி. கொற்கை,குடந்தைஅருகில்.
பலன்கள் சனி பிரதோஷ நாளில் சூக்கும நிலையில் பிரம்மா-சரஸ்வதி வழிபாடு.
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் புஷ்பவனேஸ்வர்ர்-திருப்பூந்துருத்தி (கண்டியூர்), விருத்தகிரீஸ்வரர்-விருத்தாசலம், மருந்தீசர்-திருவான்மியூர், அக்னீஸ்வரர்-திருக்காட்டுப்பள்ளி(திருவையாறு), அக்னீஸ்வரர்-திருக்கொள்ளிக்காடு(கச்சனம்), வேதபுரீஸ்வரர்-திருமறைக்காடு(வேதாரண்யம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு)
வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்
நட்சத்திரத்திற்குரிய மரம் மகிழம்
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்- சக்ரபாணி
வழிபட வேண்டிய சித்தர்கள் அவிட்டம்1,2 (மகரம்);
அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
வழிபடவேண்டிய நாயன்மார்கள் தொகை அடியார்கள் ஒன்பது பேர்கள்( தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய் பணிவர்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தை சிவன்பால் வைத்தார், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார்(ஆதிசைவர்), முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்த அடியார்.
$$$$$