பிடிப்பு-பற்றுதல்!
ஒரு பெரியவர் தன் பேரனை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல கொஞ்சம் நேரம் கழித்து பேரன் தாத்தாவின் கையை உதறிவிட்டு அவர் விரலை தான் பிடித்துக் கொண்டு நடக்க முயன்றான். அப்போது பெரியவர் சொன்னார். குழந்தாய்! நீ சிறியவன். உன்னால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், விவேகம் ஆகியன இல்லை. நீ என்கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் எந்தச் சந்தற்பத்திலும் அதிர்ச்சியில் கையை விட்டு விடுவாய். நீ தடுமாறும் போது உடனடியாக என்னால் உன்னை தாங்கி பிடிக்க முடியாது. ஆனால் நீ என் கையைப் பிடித்துக் கொண்டால் நீ தடுமாறினாலும் நான் உன்னைப் பிடித்திருப்பதால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படாது. உனக்குரிய காலம் வரும் வரை நீ என் கையைப் பிடித்து நடத்தல் சிறப்பு என்றார். இதன் உள் இன்னெரு விளக்கமுண்டு. அது என்னவென்றால்.
உயிர்களாகிய நாம் இறைவனைப் பற்ற வேண்டியதில்லை. இறைவன் நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கின்றான் என்று நம்புங்கள். அந்த பிடிப்பே உங்கள் வழ்க்கை முழுவதற்கும் பயன்படும். அதைவிடுத்து சிறு குழந்தைபோல் என்னால் முடியும் என நினைத்து இறைவன் உங்களைப் பற்றியிருப்பதை தவிர்த்து நீங்கள் இறைவனை பற்ற ஆசைப்பட வேண்டாம்!-குருஸ்ரீ
#####