பாவம்! யார் கணக்கில் எழுதுவது?
ஒரு செல்வந்தர் யார் பசி என வந்தாலும் அவர் பசியை போக்கி வந்தார். ஒரு திருவிழாவன்று நிறைய பேருக்கு சமையல் செய்து வந்தனர். அப்போது வானில், ஒரு பாம்பை கவ்வி சென்ற கருடனின் பிடியில் தவித்த பாம்பு துன்பம் தாளாது விஷத்தை கக்க அது கீழே தயாராகும் சாம்பாரில் விழுந்தது. அதை யாரும் பார்க்கவில்லை. எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. சப்பிட்ட அனைவரும் இறந்து போயினர். சாம்பாரில் எப்படி விஷம் கலந்தது என யாருக்கும் தெரிய வில்லை. காலம் கடந்தது. சொல்வந்தர் சில நாட்கள் துயரத்திலிருந்து விட்டு சிவன்மீது பாரத்தை போட்டுவிட்டு மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார்.
இந்த அன்ன தானத்தில் எத்தனை உயிர்கள் இறந்துவிட்டன. இந்தப் பாவக்கணக்கை யார் மீது எழுவது என்ற சந்தேகம் சித்திர குப்தனுக்கு. இறைவனிடம் கேட்க இறைவன் நீ யாரை சந்தேகிக்கின்ராய் எனகேட்க, பாம்புதானே விஷத்தை கக்கியது…. என்றபோது அது கருடன் பிடியிலிருந்த அவஸ்தையால் கக்கியது அதற்கு கீழே இருப்பது பற்றி எப்படித்தெரியும் அது வேண்டாம் எனச் சொல்ல.. அப்படியானால் கருடன் மீது எழுதிவிடட்டுமா எனக் கேட்க... கருடன் தன் இறையை கொண்டு சென்றது. அது என்ன செய்யும் எனச் சொல்ல.. அப்படியானல் இந்த அன்னதானத்திற்கு மூலகாரணமான செல்வந்தரின்மீது எழுதி விடட்டுமா என்றான். அவர் பாவம். கொஞ்சநாள் பொருத்திரு, இந்தக் கணக்கை யார் மீது எழுதுவது என்பதை நான் உனக்கு காண்பிக்கின்றேன் என்றார் இறைவன்.
சொல்வந்தர் அன்ன தானத்தை தொடர்ந்து நடத்தி வர வெளியூர் வழிப்போக்கர்களெல்லாம் வந்து உண்டு மகிழ்ந்தனர். ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒரு கூட்டம் அன்னதானம் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியை அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டனர். அந்த அம்மாள் அன்னதானம் நடைபெறும் இடத்தை சொல்லி விட்டு, வீணாக ஒரு உண்மை வதந்தியை சொல்லி புலம்பிவிட்டாள். அதாவது சென்ற வருடம் நடந்த விருந்தில் உணவு அருந்திய அனைவரும் இறந்துவிட்டனர். நீங்கள் உணவு உண்டு திரும்பி வருவீர்களோ இல்லையோ என வதந்தியை கிளப்பிவிட்டாள். எப்போது நடந்த செயலின் காரண காரியங்களை சரியாக அறியாமல், நன்றாக நடைபெறும் ஒர் அன்னதானத்தை மாசுபடுத்தும் வகையில் குறை சொல்லிய அப்பெண்ணின்மீது அந்த பாவக்கணக்கை எழுதும் படி இறைவன் சித்திர குப்தனுக்கு ஆலோசனை வழங்கினார்.
உண்மை தெரியாமல் பழியை யார்மீதும் சுமத்தாதீர்கள். அது உங்கள் பாவக்கணக்காகி விடும்.
#####