ஞனியிடம் வந்த செல்வந்தர் தனக்கு நிம்மதியில்லை என்றார். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கலாமே என்றார் ஞானி. செல்வந்தர் எனக்குத் தேவை மகிழ்ச்சி அதை எப்படி வாங்கமுடியும் என்றார்.
ஞானி அவரை ஓர் விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தார். பலர் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஞானி ரசித்தார். செல்வந்தர் பந்து என்னைப்போல உதை படுகின்றது எனக் கவலை கொண்டார்.
ஞானி, செல்வந்தரை ஓர் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார் அங்கு புல்லாங்குழலின் நாதம் இசையாக அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தது. சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. நிகழ்ச்சி முடிந்தது இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். ஞானி செல்வந்தரைப் பார்த்து பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் என்ன வித்தியாசம் என்றார். செல்வந்தர் அது பந்து, இது புல்லாங்குழல் என்றார்.
பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் தேவை காற்றுதான். பந்தின் உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் அது உதை படுகின்றது. புல்லாங்குழலில் அது அவ்வப்போது வெளியே வந்து விடுவதால் அது இனிமையைத் தருகிறது. மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது என்றார்.
செல்வந்தருக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. செல்வந்தர் நினைத்தார். பந்தின் காற்றுபோல் செல்வம் நம்மிடம் இருந்தால் அதில் இன்பங்களைவிட துன்பங்கள்தான் அதிகம். புல்லாங்குழல் காற்றுபோல் செல்வம் அவ்வப்போது வெளியேறினால் அது நிம்மதியும் இன்பமும் தரும் என்பதை உணர்ந்தார்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
மகிழ்ச்சி, நிம்மதி!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.