ஆற்றங்கரையில் ஓர் பெண் மணல்வீடு கட்டித் தன்தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஓரு பையன் அவ்வழி சென்றான். அவளைப் பார்த்தான். மீண்டும் அவ்வழி சென்றான். அவளிடம் குறும்பு செய்ய நினைத்தான். மீண்டும் அவ்வழி செல்ல விருப்பங்கொண்டு வந்தவன் அந்த மணல் வீட்டின் ஓர் பகுதியில் தன் காலைப் பதித்து சென்றான். மனம் பதைபதைத்தது. ஆனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மனம் குழப்பத்திலும் தன் மணல் வீடு இடிந்ததில் கோபத்திலுமிருந்தாள். வீட்டிற்குச் சென்றாள்.
அந்த பையன் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுக்கு தண்ணீர் கொடுக்கச் சொன்னாள் தாய். நீர் கொடுத்தவளின் இடையை வெடுக்கென்று கிள்ளினான். ஐய்யோ! என அலறல் கேட்டு வந்த அம்மாவிடம், தட்டுத்தடுமாறி அவனுக்கு விக்கியது எனப் பொய் பகர்ந்தாள். அந்த பையனை அன்புடன் இழுத்து தலையை தடவி முதுகைத்தடவி ஆசுவாசப்படுத்தினாள் தாய். அந்தப் பொய்யைக் கேட்டு கண்சிமிட்டி மெல்லச் சிரித்தான் அவன்! இதில் யார் கள்வன்! நேசிக்கின்ற பெண்ணைத்தான் கிள்ளமுடியும். அந்த ஈர்ப்பு இருந்தால்தான் நாவில் பொய் மலரும். நல்லவர்கள் பொய்யர்களாவதும், கள்வராவதும் இதனால்தான்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
கள்வனின் மகன், கள்வன்!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.