ஞானி ஒருவர் புனித பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஓர் மடத்தில் தங்கினார். அன்று இரவு குளிர் அதிமாக இருந்தது. அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த மரத்திலான சிலையை எடுத்து தீ மூட்டி குளிர் காயலானார். தீயின் ஒளியைக் கண்ட மடத்தின் பாதுகாவலர், ஞானி மரச்சிலையை எரிப்பதைக் கண்டு கோபமடைந்து, அவறை திட்டினார். தங்குவதற்கு இடம் கொடுத்தது தவறு எனப் புலம்பினார்.
ஞானி சிலை எரிந்ததும் அதில் எதையோ தேடினார். எரித்துவிட்டு என்ன தேடுகின்றீர்கள் என்றான் பாதுகாவலர். சாம்பலில் எலும்புகள் இருக்கின்றதா எனத் தேடுகின்றேன் என்று கூறியதைக் கேட்டதும், கடுங்கோபம் கொண்ட பாதுகாவலர், நீங்கள் ஒரு முட்டாள். மரச்சிலையில் எப்படி எலும்புகள் இருக்கும் என்றார். அப்படியானால் மற்ற மரச்சிலைகளையும் எடுத்து வாருங்கள், என்னுள்ளே இருக்கும் இறைவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றார் என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கடுங் கோபம் கொண்ட பாதுகாவலர் அந்த ஞானியை வெளியில் துரத்தி விட்டார்.
மறுநாள் காலை பாதுகாவலர் மடத்திற்கு வெளியில் வந்தபோது அந்த துறவி சாலை ஓரத்தில் இருந்த ஒரு கல்லை மலர்களைக் கொண்டு பூசித்துக் கொண்டிருந்தார். பாதுகாவலர் ஆச்சரியமடைந்து பைத்தியகாரனைய்யா நீ, நேற்றிரவு மரச்சிலைகளை எரித்தாய். இப்போது வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார்.
‘பிரார்த்திக்கும் கலை உண்மையாக உங்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் எந்த கோயிலையும் தேடிப்போக வேண்டியதில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் கோவில் இருக்கும். கோவில் அதிர்வுகள் உங்களைச் சுற்றி இருக்கும். அது உங்களுக்கு என ஓர் ஒளி வட்டமாக, மண்டலமாக மாறிவிடும். மனதுக்குள் கடவுள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் சக்தி உங்களுக்குப் புலப்படும். உண்மையான பக்தியுடன் ஒருவன் இருந்தால் அவன் செல்லுமிடமெல்லாம் இறை இல்லம் உருப்பெறும்’ என்று புன்னகையுடன் கூறினார்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
கோவில் இருக்கும் இடம்!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.