நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்!
மோசமான நிலையில் இருக்கும் இரு நோயாளிகள் அந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பெற்றிருந்தனர். ஒருவருக்கு ஜன்னல் ஓரம் படுக்கை. மற்றவருக்கு அவர் அருகில். இருவருக்கும் இடையில் ஓர் திரை. ஜன்னல் ஓரம் இருக்கும் நோயாளியை தினமும் மாலை வேலையில் சாய்ந்திருக்க அனுமதித்திருந்தனர். மற்றவரால் அசையக்கூட முடியாத நிலை. இரு நோயாளிகளும் ஒருவருக்கொருவர் பேசி பழக ஆரம்பித்தனர். தங்களின் வாழ்க்கையில் பார்த்த கேட்ட சந்தித்த நிகழ்வுகளை இருவரும் பரிமாறிக் கொள்வர். மாலை வேளையில் ஜன்னலருகே இருந்தவர் தான் பார்ப்பது எல்லாம் பற்றி மிகத் தெளிவாக கூறுவார். அதை அப்படியே தாம் பார்ப்பதாக பக்கத்து படுக்கைகாரர் உணர்வார்.
பக்கத்து படுக்கைகாரர் தினமும் மாலைப் பொழுது எப்போது வரும் தன் பக்கத்து படுக்கை நண்பர் வெளி உலகில் நடப்பதை பார்த்துச் சொல்ல அதைக் கேட்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஜன்னலுக்கு வெளியில் எவ்வளவு பரந்த உலகம், அதில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் ஆனந்தத்தை அவருக்குத் தருவதாகவும் அமைந்தது. இயற்கையின் விநோதங்களை நண்பரின் வாயிலாக கேட்டு செவி இன்பம் அடைந்தார். மனதிற்கு இதமும் ஆறுதலும் கிடைத்தது.
ஒருநாள் காலை செவிலியர் வந்து பார்த்தபோது உறக்கத்திலேயே ஜன்னல் அருகில் இருந்தவர் அமைதியாக இறந்துவிட்டது தெரிந்தது. அந்த ஜன்னல் நண்பரின் இழப்பை பக்கத்து படுக்கையில் இருப்பவரால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அவரின் படுக்கை ஜன்னல் ஓரத்திற்கு மாற்றப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு கைகளை ஊன்றி தலையைத் தூக்கி ஜன்னல் வெளியே பார்க்க முறபட்டார். நண்பர் சொல்லித் தான் மகிழ்ந்த அந்த வெளி உலகக் காட்சிகளை நீண்ட நாட்களுக்குப்பின் தன் கண்ணால் கண்டு அனுபவிக்கப் போவதை நினைத்து அவருக்குள் அளவிடமுடியாத ஆனந்தம் ஏற்பட்டது. கடும் முயற்சிக்குப்பின் வெளியே பார்த்த அவருக்கு பெரிய அதிர்ச்சியாயிருந்தது. அங்கே ஒர் பாழடைந்த வீடுதான் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றும் இல்லை வறண்ட நிலங்களாகத் தெரிந்தது.
அப்படியானால் தன் நண்பர் தினமும் பார்த்து பார்த்து சொல்லியது எல்லாம் அவரது கற்பனையான இயற்கையா! இல்லாதன பற்றி தத்ரூபமாக விளக்கி கூறினாரே! அதன் அவசியம் என்ன! குழம்பினார் நண்பர். செவிலியரைக் கூப்பிட்டு நண்பர் தான் கேட்டு ரசித்தவையெல்லாம் சொன்னார். அப்போது அந்தச் செவிலியர் அந்த நோயாளிக்கு கணபார்வையில்லை. போரில் அவரது கண் பறிபோயிற்று. எதையும் அவரால் பார்க்க முடியாது. கண் பார்வை இருந்தபோது தான் பார்த்த சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வுகளை இயற்கையின் அழகை யெல்லாம் உங்களுடன் பகிர்ந்து உங்களை ஆனந்தத்தில் மூழ்கடித்திருக்கின்றார். சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிக்கும்போது தமக்கு ஏற்படும் இன்பம் பெரிது. பல்வேறு காரணங்களால் அதை இழந்தவர்களுக்கு அளிப்பது மேலும் சிறப்பு.