தெளிவான முடிவு இறுதியில்!
ஒரு வியாபாரி அவன் செய்த நெய் வியாபாரத்தில் கலப்படம் செய்தான் எனக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதியின்முன் நிறுத்தப்பட்டான். நீதிபதி நன்கு விசாரனைசெய்து அவன் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதற்கு தண்டனையாக அவன் வியாபாரம் செய்த நெய் நீதிபதியின்முன் கொண்டுவரப்பட்டு அன்று உணவிற்குப் பதில் அதையே சாப்பிடவேண்டும் அல்லது 25 கசையடிகள் பெற்றிடவேண்டும் அல்லது 100 தங்க நாணயங்கள் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றார்.
தங்க நாணயங்கள் 100 இழக்க சம்மதமில்லாததால் நெய்யை உண்ணத் தொடங்க கலப்பட நெய்யாதலால் நாற்றம் குடலைப் பிடுங்க சிறிதளவு நெய்க்குமேல் அவனால் சாப்பிட முடியவில்லை. குமட்டிக்கொண்டு வாந்தி வரும் நிலை ஏற்படவே கசை அடிகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்தான். ஆனால் கசை அடைகளை ஒன்று இரண்டிற்குமேல் அவனால் தாங்கமுடியவில்லை. இறுதியில் 100 தங்க நாணயங்களை தண்டணையாகக் கட்டிவிட்டு மன்னிப்புகேட்டு வீட்டிற்கு வந்தான்.
முதலிலேயே நாணயங்களை கட்டி யிருந்தால் கசை அடிகளும், நெய்யை கஷ்டப்பட்டு சாப்பிட்ட அனுபவமும் நேர்ந்திருக்காது. அதைவிட கலப்படம் செய்யாமல் நேர்மையுடன் வியாபாரம் செய்திருந்தால் இந்த நிலையே ஏற்பட்டிருக்காது.
இதைப் போன்றே துன்பங்கள் வந்தவுடனதங்கள் செய்த தவறுகளையும், இறையையும் நினைப்பதில்லை. மேலும் மேலும் தாங்க முடியா இன்னல்களுக்கு ஆளான நிலையிலேயே வேறு வழியின்றி இறைவனே கதி என்று ‘இறைவனைச் சரணடைகின்றனர்