பிடித்தது யார்!
நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர். ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்தான். நீச்சல் தெரிந்தவன் ஆனதால் அருகே சென்று கம்பளி மூட்டைப் பற்றினான். அப்போது அக்கம்பளி மூட்டை அவனை பற்றி இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன் கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான்.
அப்போது கம்பளிமூட்டையை பற்ற நினைத்தவன் சொன்னான் இது கம்பளி மூட்டையல்ல. கரடி. நான் விட்டாலும் அது என்னை விடுவதாக இல்லை எனக் கூக்குரலிட அவனை கரடியிடமிருந்து மீட்கச் சென்றான் நண்பன்.
இப்படித்தான் ஆத்மாக்கள் பொருள்களின்மீது ஆசை வைத்து அவற்றைப் பற்றிப் பிடிக்க முயன்று அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். அப்போது அவர்கள் . ஆசையை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை. புரிந்து கொள் மனமே!