சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!
காட்டில் கிளி ஒன்று மரப்பொந்தில் கூடு அமைத்திருந்தது. அதில் முட்டையிட்டு பாதுகாத்து வந்தது. வளர்ச்சியடைந்த முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்த குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்தப் பகுதிக்கு வந்த வேட்டைக்காரன் அந்த கிளிக்குஞ்சைப் பார்த்து அதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தான். காட்டில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்தவந்த முனிவர் வரும் வழியில் அந்த மரத்திலிருந்து இன்னொரு கிளிக்குஞ்சு ஓட்டை உடைத்து வெளிவந்திருந்தது. மரத்தின் கீழ் இருக்கும் கிளிக்குஞ்சை பார்த்து அதை எடுத்துச் என்று வளர்த்து வந்தார். வேடனும் முனிவரும் அந்த கிளிக் குஞ்சுகளுக்குப் பேசவும் கற்றுக் கொடுத்தனர்..
அந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்த அரசன் வரும்வழியில் வேட்டைக்காரன் குடில் அருகில் கிளி இருக்க கண்டார்.. குடிலுக்கு அருகில் வந்தவுடன், டேய்! யார் நீ என்று அதிகாரமாகப் பேசியது கிளி. அதன் ஆரம்ப பேச்சு அரசனுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் அங்கிருந்து விரைவில் கிளம்பி விட்டார். தொடர்ந்து காட்டிற்குள் சென்றவர் பர்ணசாலையைக் கண்டு அங்கே சென்றார். அங்கு இருந்த கிளி வணக்கம். யார் நீங்கள் .என்று அன்புடன் வரவேற்றது. அந்தச் சூழலில் மனம் ஆனந்தம் அடைய மன்னன் மகிழ்ந்தான்.
இரண்டு கிளிகளும் ஒரே கிளியின் குஞ்சுகள்தாம். ஆனால் அவற்றின் வளர்ப்பில் சுற்றுச் சூழலில் வித்தியாசம் தென்படுவதால் அதன் குணாதிசயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
கரு மேகங்கள் தரும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் அது சேரும் இடத்தைபோல் நிறம் கொள்கின்றது. சுவையை அடைகின்றது.
பிறப்பில் அரக்கனாய் இருந்தாலும் இராமருடன் செர்ந்ததால் விபீஷணன் நல்ல மனம், குணமடைந்தான். தர்மவானாகிய கர்ணன் துஷ்டன் துரியோதனுடன் நட்பு கொண்டமையால் அவப் பெயர் அடைந்தான்.
எனவே உயிர்களே சேருமிடம் சேருங்கள்! நலமடையுங்கள்!-குருஸ்ரீ
######