gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 01 January 2022 10:44

பிரணாயாமம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

#####

பிரணாயாமம்!

பிரணாயாமம் பழகும் முன்னர் இமயம், நியமம், ஆசனம் போன்றவற்றில் முடிந்தவரை சொல்லப்பட்ட நியமங்களை கடைபிடித்திருக்க வேண்டும். அதன் பின்னரே பிரணாயாமப் பயிற்சியை ஆரம்பிக்கவும். பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்களே பிரணாயாமம் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள். அப்போதுதான் அவர்களது நுரையீரல் இந்த பயிற்சிகளை தாங்கும் நிலையை அடைகின்றது.

பிரணாயாமம் தொடர்ந்து காலை 0530-0630, மதியம் 1230-1330, மாலை 1730-1830 இரவு 2330-0030 என்ற அந்தி சந்தி நேரங்களில் சுமார் 80 பிரணாயமங்கள் வீதம் செய்தால் மொத்தம் 320 பிரணாயாமங்கள் ஒரு நாளைக்கு. குரு ஆசியுடன் இப்படி தொடர்ந்து செய்வதால் வாசியைக் கட்டுப்படுத்தி பல சாதனைகள் செய்யலாம் என்பது சித்தர்கள் கண்டறிந்த முறையாகும்.

பிரணயாமத்தை அதிகாலையில் செய்ய வெறும் வயிற்றுடன் இருப்பது முழு பயனைத் தரும். நா வரட்சி தந்தால் சிறிதளவு நீர் அருந்தலாம். உணவு உண்டபின் பயிற்சியை ஆரம்பிக்கக்கூடாது. உணவு உட்கொண்டால் சுமார் மூன்று மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம். பயிற்சியை குளிர் சாதன அறைக்குள் செய்யக் கூடாது. பயிற்சி முடிந்த ஒரு நாழிகை கழிந்த பின்னரே குளிக்க வேண்டும். அதிக அளவு சுடு நீரில் குளிக்க கூடாது. குளிர்ந்த நீர் சிறப்பு.

அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க முதலில் குருவிடம் தீட்சை பெற வேண்டும். அப்போதுதான் முழுமையான சித்தி கிட்டும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் மானசீகமாக கணபதி மற்றும் யோக தட்சிணாமூர்த்தியை மனதார குருவாக நினைந்து ஏற்று வழிபட்டு சிவன் கோவிலில் வழிபட்டு உண்டியலில் தட்சணை போட்டு பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும். குருவின் ஆசியில்லாத பிரணாயாமத்தின் பலன் குறைவாகவே இருக்கும்.பிராணன்- ஆகாசம்- பிராண சக்தி -பிரணாயாமம்

சித்து பிராணான்-இடகலை-பிங்கலை-நரம்பு ஓட்டங்கள் -ஞானேந்திரிய நரம்புகள் -கர்மேந்திரிய நரம்புகள் சுழுமுனை-“குண்டலினிக் கமலம்” -சுழுமுனை வழி செல்லும் இதை சித்து பிராணன் எனலாம்- -இயல்பாக உண்டாவதைவிட மூச்சை அடக்கும்போது பிராணன்-சித்து பிராணனைக் கட்டுப்படுத்துதல் (பயிற்சிகள்).

பிரணாயாமம் என்பது பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. பிரணாயாமம் பயிற்சியை ஆரம்பிக்குமுன், மூச்சை இழு 2, 3, 4 என மனதில் சொல்லிகொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். பின்னர் அடக்கு 2, 3, 4 என மனதில் சொல்லியவாறு மூச்சை அடக்கிப் பழகுங்கள். இந்த ஆரம்பநிலைப் பயிற்சியில் 1:4:2 என்ற விகிதம் பின் பற்றப்படவில்லை. ஆரம்ப நிலைப் பயிற்சி முடிந்தபின் 1:4:2 என்ற விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயிற்சிகளை செய்யவும்.

ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்கு 21,600 சுவாசம் என்பர்.
ஒருமணிக்கு-21600/24 = 900 சுவாசம்.
ஒரு நிமிடத்திற்கு-900/60 = 15 சுவாசம்.

சராசரியான மனிதர் அனைவருக்கும் நான்கு விநாடிக்கு 1 சுவாசம். இப்படிச் செய்வதால் 120 ஆண்டுகள் வாழ்க்கை வழலாம். வாழ்நாளை அதிகப்படுத்த சுவாசித்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் அதற்காண பயிற்சியே பிரணாயாமம்.

#####

ஓம் கம் கணபதியே நம
ஓம் ____________ குலதெய்வமே நம
ஓம் குருதட்சிணாமூர்த்தியே, __________சித்தரே நம (உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்)
ஸ்ரீ தண்டஹி நம! ஓம் கிலீம் லிம் ஹிரீம்

ஓம் ஹ்ரீம் கணபதியே நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் இடது நாசியை மூடியவண்ணம் ஓம் ஹ்ரீம் கணபதியே நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சர ஹணபவ நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் வலது நாசியை மூடியவண்ணம் ஓம் சர ஹணபவ நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சிவய நம!
ஓம் வசிய நம!
ஓம் யவசி நம!
ஓம் யசிவ நம!
ஓம் வயசி நம!

ஒன்பது முறை உரு கொடுக்கவும்.

காலனில்லை! கல்லப்பா தேகமது!
ஓங்….ரீங்….அங்….உங்….
(பதினாறு உருகொடுத்தால் கணபதி பிரகாசிப்பார்.)
சுழுமுனையில் அவரைப் பார்த்து நுண்மையுடன் கீழ்வுள்ள
மந்திரம் ஜபித்தால் பிரமந்திரி சனமுமாம்.

ஓம் நமசி வய!

முழு மனதுடன் கீழேயுள்ள ஐந்தெழுத்து மந்திரம் ஓதி
திருநீறு நெற்றியில் தரிக்கவும்- இதயத்தில் நிலையில்லாத
தூல சடலம் நிலைக்கும் ஆதாரம் சித்தியாகும்.

ஓம் ந ம சி வ ய!
ஓம் நம சிவ ய!
ஓம் நமசி வ ய!
நமசிவயநம! வய நமசி! வய நமசி!
நமசிவய சிவய நம! சிவய நம!
சிவ நம! சிவ நம! நமசிவய!
நமசிவயநம!
ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் ந ம சி வ ய ஓம்

கலையறிந்து அந்தந்த நிலையில் இருந்து பக்தியுடன் ஆதார சூட்சம் சித்தி.
கண்ணடங்கி விண்ணென்றூணி நிலையறிந்து பிராணாயஞ் செய்தால்
காலனில்லை! கல்லப்பா தேகமது! வியாதி காணாதோடும்.

ஓம் கிலி அங்…
அங் கிலி நங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி வங்…
வங் கிலி யங்…
அங் கிலி மங்…
வங் கிலி சிங்…
அங் கிலி சிங்…
அங் கிலி மங்…
மங் கிலி ரீங்…
ரீங் கிலி ஓம்!

சோதியுடன் சுழுமுனையில் மணக்கண் சார்த்தி விபூதி தரித்துக் கொள்.

ஓம் கிலி ரீங்…
ரீங் கிலி மங்…
மங் கிலி சிங்…
மங் கிலிங்…
சிங் கிலி மங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி மங்…
மங் கிலி நங்…
நங் கிலி யங்…
மங் கிலி ஓம்!

மூலாதாரத்தில் கணபதியையும் பிரமந்திரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் உயர நகர்த்தி
சுவாதிஷ்டானத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
மணிபுரகத்தில் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
அநாகதத்தில் ருத்திரனையும் பார்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
விசுத்தத்தில் மகேஸ்வரனையும் மகேஸ்வரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஆக்ஞேயத்தில் சதாசிவனையும் மனோன்மணியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஸஹஸ்ராரமில் உள்ள ஒன்றுசேர்ந்த ஐக்கியமாகிய
பரமசிவன்,பராசக்தியை வழிபடு.

பின் பிராணாயாமம் செய்க.

காலனில்லை.கல்தேகம்.
பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும்.

#####

பயிற்சி- உள் கும்பகம்

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித்துளையை வலதுகட்டை விரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள். சில நொடிகள் காற்றை உள்ளே நிறுத்துங்கள். இரு நாசித் துவாரங்களையும் விரல்களால் மூடவும்.

3.அப்பொழுது மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள். அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். அந்த நினைவை அப்படியே அங்கு சிறிது நேரம் வைத்திருந்து பின் அந்த நிலை நிறுத்திய நரம்பு இயக்கத்தை மேலே வலது நாசித் துளைக்கு மெதுவாக இழுப்பதாக நினைக்கவும்.

4.சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை வெளியில் விடுங்கள்.

5.உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 1 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 4 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 2 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும். இடது வலது மாற்றிச் செய்யவும். பின் படிப்படியாக அதிகரித்து 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பழகவும்.

6.இறுதியாக உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 4 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 16 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 8 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும்.

இடது வலது மாற்றிச் செய்யவும். இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம்.

பின்னர் படிப்படியாக 1:4:2 என்ற விகிதத்தில் அதிகரிக்கவும். கீழே கொடுத்தவாறு அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கும்போது வாசியை- மூச்சுக்காற்றை வங் என்று சொல்லி உள்ளே இழுத்து நேர எண்ணிக்கையை ஆரம்பித்து 16 நொடிகள் கழிந்த பின்னர் அங் என்று சொல்லி வாசியை கும்பகம் செய்ய ஆரம்பித்து ஓம் என்று சொல்லி 64 நொடிகள் உள்ளே பயனிக்கவும். பின்னர் சிங் என்று சொல்லிகொண்டு வாசியை வலது நாசிவழியாக வெளியே 32 நொடிகள் முக்கியம் மிக மிக மெதுவாக விட்டு பழகவும். இப்படி ஒரு வேளைக்கு 80 பிரணாயாமம் (மொத்தம் 320) ஆசனத்தில் இருந்து செய்து பழகவும். நான்கு அந்தி சந்திகளிலும் செய்யவும். நான்கு அந்தி சந்திகளில் செய்ய முடியாதவர்கள் மூன்று அந்தி சந்திகளிலும் 108 முறை வீதம் செய்து மொத்தம் 324 பிரணாயாமம் செய்யவும்.

#####

பயிற்சி- வெளிக் கும்பகம்.

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித் துளையை வலது கட்டைவிரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்பும் பொழுது (பூரகம்) மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள்.

3.முதலில் 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பின்னர் படிப்படியாக அதிகரித்து வரவும்.

4.அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். இதற்கு 4 நொடிகள்.

5.பிறகு சுண்டுவிரல், மோதிரவிரல்களால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை உடனே வெளியில் (ரேசகம்) 8 நொடிக்கு அனுப்புங்கள்.

6.பிறகு இடது நாசித் துளையைச் சுண்டு விரல், மோதிர விரல்களாலும், வலது நாசித்துளையை கட்டை விரலாலும் அடைத்துக்கொண்டு வெளியில் காற்றை 16 நொடிகள் நிறுத்தவும் (கும்பகம்). இடது வலது மாற்றிச் செய்யவும் இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

மேல் பயிற்சியில் கும்பம் உள்ளே நிகழ்ந்தது. அடுத்த பயிற்சியில் கும்பம் வெளியே நடைபெறுகிறது. காற்றை உள்ளே சுவாசப்பையில் நிறுத்திவைக்கும் பிராணாயாமத்தின் எண்ணிக்கையை அதிகமாகச் செய்யக்கூடாது.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம். நன்கு பழகிய பின்னர் அதிகரிக்கலாம். உள் கும்பகத்தில் இறுதியில் சொல்லப்பட்ட மந்திர உச்சரிப்புகள் இதற்கும் பொருந்தும்.

#####

Read 2211 times Last modified on சனிக்கிழமை, 01 January 2022 11:05
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879800
All
26879800
Your IP: 3.236.111.234
2024-03-19 11:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg