புலிப்பாணி சித்தர்
போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால் புலியை வசியப்படுத்தி அதன் மீதேறி சென்று வெறும் கையாலேயே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். புலிமேல் சென்று பாணி- நீர் கொண்டுவந்ததால் புலிப்பாணி எனப் பெயர் வந்தது. இவர் போகரின் சீடர் ஆவார்.
பழனி மலை சிலை செய்ய போகருக்கு மிக உதவியாக இருந்தவர் இவர்தான். நவபாஷான மூலிகைகளை புலிமீதேறிச் சென்று பறித்து வந்தார். போகர் சமாதிக்கு செல்லுமுன் தண்டாயுதபணி பூஜைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். போகர் முருகன் சிலையை செய்து முடித்ததும் சீனா சென்று தன் தவ வலிமைகளை இழந்துவிடவே புலிப்பாணியார் அவரை முதுகிலே சுமந்து வந்து பழனியில் வைத்து அவருக்கு தவ வலிமைகளை மீண்டும் அளித்தார். வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் திறமையானவர்.
புலிப்பாணி வைத்தியம் 500, ஜோதிடம் 300, ஜாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூஜாவிதி 50, சண்முகபூஜை 30, சிமிழ்வித்தை 25, சூத்திரஞானம் 12, சூத்திரம் 9 ஆகிய நூல்கள் எழுதினார்.
புலிப்பாணி சித்தர் தியானப்பூசைக்கு
“மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரி
சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே எம்
கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பாம்பாட்டியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து ரோஜா, செவ்வரளி, சாமந்தி பூ, அரளிப் பூ, ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
உலகம் முழுவதும் சஞ்சரிப்பவரே போற்றி
எளிதில் மகிழ்ச்சி அடைவரே போற்றி
கம்பீரமான தோற்றம் உடையவரே போற்றி
சித்த மருந்துகளின் தலைவரே போற்றி
சூலாயுதம் உடையவரே போற்றி
தெய்வயானையுடைய புதல்வா போற்றி
புலி சொரூபரே போற்றி
மிருகங்களால் பூசிக்கப்படுபவரே போற்றி
முருகப்பெருமானை வழிபட்டவரே போற்றி
ஐஸ்வர்யங்கள் அளிப்பவரே போற்றி
வனத்தில் வாசம் செய்பவரே போற்றி
ஞானம் வரம் கொடுப்பவரே போற்றி
நிவேதனமாக கமலா ஆரஞ்சு கொட்டை நீக்கி உரித்த சுலையாய், தக்காளி விதை எடுத்து உப்பு தூவி, தயிர் சாதம் உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து சிவப்பு வண்ண வஸ்திரம் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக செவ்வாய் தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் தீரும். சொந்த மனை வீடு கிட்டும். வியாபாரிகளுக்கு தடை நீங்கி வெற்றி கிட்டும். திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும். இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அரசியல் வெற்றி கிடைக்கும்.
“ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தர் பெருமானே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்