உரோமரிஷி சித்தர்
புசுண்ட மாமுனிவரின் சீடராவர். உடல் முழுவதும் ரோமம் இருந்தபடியால் உரோமமுனி எனப்பட்டார். இவர் உடலிருந்து ஓர் ரோமம் உதிர்ந்தால் அதுபிரம்மாவின் ஒரு வாழ்நாளாகும். அவ்வாறு மூன்றரைக்கோடி ஆண்டுகள் பிறகுதான் இவருடைய வழ்நாள் முடியும்.
கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கியிருந்து தவம் செய்து தாடி வழியே பொன் வரவழித்து மக்களுக்கு கொடுத்து வந்தார். ஒருநாள் தாடிவழி பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கி இறைவனை வழிபட நீராடாமல் கோவிலை அடைந்தார். நீராடாமல் வந்த உரோமரிஷியை விநாயகரும் முருகரும் தடுத்தனர். முனிவர் வருத்தமுற்று கோபுர வாயிலில் நின்றார். புறத்தூய்மையைவிட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் உரோமரிஷிக்கு சிவபெருமான் கோவிலுக்கு வெளியிலேயே தரிசனம் தந்தார். கயிலை சென்றார்.
வைத்தியம் 1000, சூத்திரம் 1000, ஞானம் 50, பெருநூல் 500, குறுநூல் 50, காவியம் 500, முப்பு சூத்திரம் 30, இரண்டடி 500, ஜோதிட விளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
உரோமமுனி சித்தர் தியானப்பூசைக்கு
“கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை,
சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை
அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில்
தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் ஸ்ரீ உரோமரிஷி திரு உருவப் படத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், ஜாதிமல்லிகை மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி
காலத்தை கடந்தவரே பொற்றி
காகபுஜண்டரால் பூசிக்கப்படுபவறே போற்றி
கைலாயத்தில் வாசம் செய்யும் உரோமரிஷியே போற்றி
சங்கீதபிரியரே போற்றி
சந்திரனை தரிசிப்பவரே போற்றி
சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி
சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி
மகாலட்சுமியின் அருள் பெற்றவரே போற்றி
முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி
தடைகளை நீக்குபவரே போற்றி
தெய்வீகச் சித்தரே போற்றி போற்றி
நிவேதனமாக இஞ்சி இல்லா மிளகு, சீரகம் கலந்த பொங்கல், பழங்கள் இவற்றுடன் வெள்ளை வஸ்திரம் வைத்து திங்கள்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் சந்திர கிரக தோஷங்கள் நீங்கும். மன வியாதி, மன அழுத்தம், மனப் புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். முடிவெடுக்கமுடியாத குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி நிலவும். படிப்பிலும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும்.
“ஓம் கைலாய வாசி ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்