ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#*#*#*#*#
சிவ நிர்வாணாஷ்டகம்!
மனமும் நானல்ல!
புத்தியும் நானல்ல!
நான் என்ற அகங்காரமும்
நானல்ல! உடலின்
அங்கங்களும் நானல்ல!
ஆகாயமும் பூமியும் நானல்ல!
ஜோதியும் நானல்ல!
காற்றும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
உச்சுவாச நீச்சுவா மூச்சினால்
ஆனவன் அல்ல! நான்.
கப, பித்தம் முதலிய
ஏழு தாதுக்களால்
ஆனவனுமல்ல! பஞ்ச
கோசத்தால் ஆனவனும்
அல்ல! வாக்க நான் அல்ல! கை
கால்களும் நான் அல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
துவேஷம் எனக்கில்லை!
ராகமும்-அன்பும் எனக்கு இல்லை
லோபமும் எனக்கில்லை!
மோகமும் எனக்கில்லை!
மதமும் எனக்கில்லை!
மாச்சர்யமும்-சினம் எனக்கில்லை!
தர்மத்துக்கு தொடிசு இல்லை
சம்பத்துக்கும் சம்பந்தமில்லை
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
புண்ணிய பாவமும் எனக்கேது!
ஓதுவது தீர்த்தாடனம் எனக்கேது!
வேதம் வேள்வி எனக்கேது!
சுகம் ஏது!
துக்கம் ஏது!
ஹவிஸ் நானல்ல!
அனுபவிக்கிறவனும் நானல்ல!
அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
மிருத்யு(மரணம்) விடம் பயமில்லை!
ஜாதி வித்தியாசம் எனக்கில்லை!
தகப்பனும் இல்லை! தாயும் இல்லை!
பிறவியும் எனக்கில்லை!
பந்துவும் இல்லை!
சினேகிதனும் எனக்கில்லை!
ஆசானும் இல்லை!
சிஷ்யனும் எனக்கில்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
சஞ்சலம் இல்லாதவன்!
உருவங்களால் கட்டுப் படாதவன்!
இந்திரியங்கள் அனத்தையும் ஜயித்தவன்!
பற்றை அறவே துறந்தவன்!
எனக்கு முக்தியே!
பந்தமோ விஷயமோ இல்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
சொல்லும் பொருளும் போல்
இணைபிரியாத ஜகத்தின் தாய்
தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை
நான் வணங்குகின்றேன்!
சொல்லும் அதன் பொருளும் நான்
நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
ஆதிசங்கரர் சிவவழிபாட்டின் உன்னதநோக்கம் பற்றி எழுதிய பாடல் வரிகள்.- குருஸ்ரீ பகோரா
#####