gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 07 September 2017 19:04

கிராதகர்-கிராத மூர்த்தி-வேட்ருவர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மகா கணபதி போற்றி!
மங்கள கணபதி போற்றி!
மந்திர விநாயகா போற்றி!
மணக்குள விநாயகா போற்றி!


கிராதகர்-கிராத மூர்த்தி-வேட்ருவர்!

 

துரியோதனால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள் நாடு நகரம் இழந்து கானகம் சென்றனர். அங்கு எழுந்தருளிய வியாச பகவான் தனக்கு ஏற்படும் பாதகங்களை எல்லாம் ஒருவன் சாதகமாக மாற்றிக் கொள்ளவேண்டும். அறிவாளிகள் சோர்வு கொள்ளாமல் செயலாற்றிக் கொண்டே இருப்பார்கள். கால வித்தியாசத்தால் மன்னாதி மன்னர்களும் துயரத்தை அடைந்திருக்கின்றார்கள். காலம் வரும்வரை பொருமை காத்தல் சிறப்பு என்று ஆறுதல் கூறி காட்டில் இருக்கும் காலத்தில் உங்களை நீங்கள் பலப் படுத்திக் கொள்ளவேண்டும். அர்ச்சுனா நீ சிவபெருமானைக் குறித்து தவம் செய்து பலம் வாய்ந்த அஸ்த்திரங்களைப் பெறுவாய் என ஆலோசனை கூறினார்.
வியாசமுனிவர் ஆலோசனைப்படி வெள்ளிமலையின் மேற்புறத்தே சிவனை நோக்கித் ஒற்றைக்காலில் நின்று கடுந்தவமிருந்தான் அர்ச்சுனன். அவன் தந்தை இந்திரன் ஊர்வசி, இரம்பை முதலிய ஆடலரசிகளை அனுப்பியும் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை. நேரில் தோன்றிய இந்திரன் தன் மகனைப் பாராட்டி சிவபெருமான் வருவார் உனக்கு அருள் புரிவாரென்று ஆசிவழங்கினான்.
தோழியர்கள் வாயிலாக அர்ச்சுனன் தவத்தைக் கேட்ட உமை சிவனிடம் அர்ச்சுனனுக்கு அருள் புரிய வேண்டினாள். தவமியற்றும் அர்ச்சுனனைக் கொல்ல பங்காளி துரியோதனன் முகாசூரனை அனுப்பியுள்ளான். அவன் வந்து தொல்லை கொடுக்குமுன் யாம் அங்கிருப்போம் என்று நந்தி தேவரை அழைத்து யாம் பன்றி வேட்டைக்குச் செல்லவிருக்கின்றோம் நீங்கள் அதற்குத்தக்கவாறு உருமாருங்கள் என்றார். உமை வேட்டுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும், வேதங்கள் வேட்டை நாய்களாகவும், பூதகணங்கள் வேடுவர்களாகவும் மாறிச் சென்றனர்.
முகாசூரன் உறுமல் கேட்ட அர்ச்சுனன் பன்றியின்மீது அம்பைத் தொடுக்க அது பன்றியின் முகத்தில் பாய்ந்து பின்புறமாக வெளியேறி அர்ச்சுனனிடம் வந்தது. அதேசமயம் அங்கு தோன்றிய சிவனும் பன்றிமேல் அம்புவிட அது பன்றியின் பின்புறம் புகுந்து முன்புறமாக வெளிவர பன்றி இறந்தது.
யார் பன்றியைக் கொன்றது என்பதில் வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் வாக்கு வாதம் எழுந்து முற்றி சண்டையில் ஆரம்பித்தது. வேடன் அர்சுனனின் வில்லின் நாணை அறுக்க அர்ச்சுனன் அந்த வில்லால் வேடன் தலையில் அடிக்க அந்த அடி அனைத்து உலக உயிர்கள்மீதும் பட்டது. சிவபெருமான் சினங்கொண்டவர் போல் நடித்து மல்யுத்தம் செய்தார். சிறிது நேர விளையாட்டிற்குப்பின் தெவர்கள் சூழக்காட்சிதந்து முகாசூரனால் உனக்கு தீங்கு நேரக்கூடாது என வேடனாக வந்தேன் என்று அருள்புரிந்து அர்ச்சுனன் கேட்டபடி சக்திவாய்ந்த பாசுபத அஸ்த்திரத்தை அளித்து அதை உபயோக்கிக்கும் முறையைச் சொல்லி நடக்க இருக்கும்போரில் வேற்றி பெறுவாய் என ஆசி வழங்கினார். சிவனைக் கண்டு அவரைத் தொட்டு மல்யுத்தம் புரிந்த ஒரே மானிடன் அர்ச்சுனன். அவனின் சிறப்புப் பெயர் ‘சவ்வியாசி’- என்றால் இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை பெற்றவன்
 இறைவன் நான்கு /இரு திருக்கரங்களுடன் வில்லையும் அம்பையும் கொண்டு காணலாம்.
அருச்சுனன் தவம் செய்கையில் அவனைக் கொல்ல துரியோதனன் அனுப்பிய முகாசூரனை கொல்ல வேட்டுருவம் கொண்ட சிவன் கிராதக மூர்த்தி எனப்பட்டார்.. காட்சி: பாசுபதம் பெற்ற முதன்மைத் தலம் திருவேட்களம், திருவேட்டக்குடி, கும்பேசுவரர் ஆலயம் (குடந்தை), திருவைகாவூர்

#####

Read 6460 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 19:16
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27078859
All
27078859
Your IP: 3.135.217.228
2024-04-25 19:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg