ஓம்நமசிவய!
வக்கிர துண்ட விநாயகா போற்றி!
வாதாபி கணபதியே போற்றி!
விகட கணபதியே போற்றி!
விக்கின விநாயகா போற்றி!
சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்!
நான்முகனின் மகன் தக்கன்-தட்சன். தன் 27 நட்சத்திரப் புதல்வியரை சந்திரனுக்கு மணம் முடிக்க சந்திரன் அந்த 27-வரில் ரோகினி, கார்த்திகை ஆகிய இருவரிடம் மட்டும் காதல் கொண்டிருந்தான். மற்ற பெண்கள் இதனை தன் தந்தையிடம் சொல்ல அவன் சந்திரனுக்கு தேய்ந்துபோக சாபமிட்டான். சந்திரன் சிவனிடம் சரணடைந்தான். எத்தனை பாவங்கள் செய்தாலும் மன்னிப்பு வேண்டினால் மன்னித்து அருளும் சிவன் காலில் விழுந்த சந்திரனை தன் தலையில் சூடிக்கொண்டார்.
இந்த வடிவம் 1.கேவல சந்திரசேகரர், 2.உமாசகித சந்திர சேகரர், 3.ஆலிங்கன சந்திரசேகரர் என மூவகைப்படும்.
1.கேவல சந்திரசேகரர்- உமை அருகில் இன்றி சிவன் மட்டும் பிறைசூடிய நிலை இதுவாகும். கேவல என்றால் தனித்து நிற்றல் என்பதாகும். நான்கு கரங்கள். வலக்கரங்கள் இரண்டிலும் டங்கமும், அபயமும் கொண்டிருப்பார். இடக்கரங்களில் மானும், வரதமும் விளங்கும். வலப்புறம் / இடப்புறம் தலையில் பிறை திகழும்.
2.உமாசகித சந்திர சேகரர்- நின்றகோலத்தில் பின் இருகரங்களில் மான் மழு ஏந்தி, முன் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகள் திகழக் காட்சி. இடப்பக்கம் உமா நின்ற கோலத்தில் வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இடக்கரத்தை தொங்கவிட்டவாறு காட்சி.
3.ஆலிங்கன சந்திரசேகரர்- 1.சந்திர சேகரரின் இடது கை தேவியின் இடது மார்பகத்தின் அருகில் தழுவியபடியும், தேவியின் வலது கையில் சிவந்த தாமரை மலர் இருக்கும். 2.தேவியின் வலக்கரம் சிவனின் வலது மார்பகப்பகுதியை தழுவியபடியும் இடது கரம் தமரை மலருடனும் அல்லது 3.சிவன் உமை இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் மூன்று நிலைகளில் இருக்கும். எல்லா நிலைகளிலும் இறைவன் பிறை சூடி இருப்பார்.
பொருந்திருவிழாக்களில் காலையில் சந்திர சேகரரும் இரவில் சோமாஸ்கந்த மூர்த்தியும் உலா வருவார். கொடியேற்றம் இல்லாத விழாக்களில் சந்திரசேகர் வலம் வருவார். முன்வினை அற்றுப்போகச் செய்பவர் சந்திர சேகரர். காட்சி: மதுரை, திருவாவடுதுறை, மருதாந்த நல்லூர், கோயிலூர்
&&&&&