45. திருநீலநக்கநாயனார்
நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் உள்ள சாத்தமங்கையில் நீலநக்கர் பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இறைவன் அயவந்திநாதர், அம்பிகை மலர்கண்அம்மை. அடியவர்களை போற்றுவதும் பெருமானை அர்ச்சிப்பதுமே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்தார்.
திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்கு உரிய நாள். 27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருஆதிரை இரண்டும் சிறப்பானது. சிவனுக்கும் அடியவர்க்கும் உகந்தநாள் ஆதிரை. இந்த நாளில் சிவபூஜை செய்ய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு கோவிலில் பூஜை செய்தார். இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வலம் வந்தார். அப்போது இறைவன் மேல் ஓர் சிலந்தி விழுந்தது. அதைக் கண்ட அம்மையார் சிலந்தியினால் இறவனுக்கு பங்கம் எனநினைத்து வாயினால் ஊதித் தள்ளினார். சிலந்தி கீழே விழுந்தது. இதைக் கண்ட நீலநக்கர் அறிவில்லாமல் நீ இப்படி செய்து இறைவன் மேனியை எச்சில் செய்தாயே என வருந்தி இனி உன்னை நான் துறந்தேன். இனி உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்றார். சென்றார். மாலையாயிற்று. அம்மையார் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. கோவிலிலேயே தங்கினார். நீலநக்கருக்கு உறக்கத்தில் ஓர் கனவு தோன்றியது. அவந்திநாதர் தோன்றி நீல நக்கரே, உன்மனைவி ஊதி அவள் எச்சில் பட்ட இடம் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. எனக்கூறி திருமேனி காட்டி உண்மையைக் கூறினார். விடிந்தது. நீலநக்கர் பெருமானை வணங்கினார், அம்மையாரை விட்டிற்கு கூட்டிவந்தார்.
ஞானசம்பந்த பெருமான் காலத்தவர். அவருடன் நெருங்கிப் பழகியவர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தைக் கண்டு களிக்க திருப்பெருமணநல்லூர் அடைந்து திருமணத்தை நடத்திவைத்தார்.
ஞானசம்பந்த பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்து ஐக்கியமானார்.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******