30. சண்டேசுவரநாயனார்
வேதங்களைத் தானம் ஈதல் ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும் ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர்கள் வாழும் ஊரான சேய்ஞலூரில் எச்சத்தச்சன்- பவித்திரை தம்பதிகளின் மகனாகப் விசாரசர்மா பிறந்தார். ஐந்து வயதினிலேயே வேதங்களின் உட்பொருளில் ஈடுபாடு கொண்டார். உள்ளத்தில் இருந்து சிவாகம உணர்வு வெளிப்பட்டது. ஏழு வயதில் உபநயனம் நடந்தது. வேதம் ஓதுப் பயிற்சியில் ஆசிரியர் கூறுமுன் அதன் பொருள் இவருக்கு விளங்கியது.
ஒருநாள் தன் நண்பனுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு பசுங்கன்றை ஈன்ற பசுவானது ஆயனை முட்டியது. சினம் கொண்ட அவன் அதை பிரம்பால் அடித்தான். அதனைக் காணப் பொறுக்காத விசாரசர்மா பசுவினைக் காத்தார். கருணையில்லாமல் பசுவை அடிக்கின்றாயே. இனிமேல் நானே மேய்க்கின்றேன் என்று தினமும் மேயவைத்து நீர்பருகச் செய்து மாலை அவரவர் இல்லத்தில் சேர்த்தார். பசுக்களும் நிறைய பால் கொடுத்தன. ஆநிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் மகிழ்வு அடைந்தனர்.
பசுவின் பாலைப் பார்த்ததும் சிவபூஜை செய்ய ஆசை ஏற்பட்டது, மண்ணியாற்றங்கரையில் வெண்மணலால் லிங்கம் அமைத்தார். மலர்களைச் சேகரித்து பசுவின் பாலால் திருமுழுக்காட்டி மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டார், இது நாளும் நடக்க ஒருவன் பார்த்து அந்தணர்களிடம் சொல்லிவிட்டான். ஊர்ச்சபை கூடியது. எச்சதத்தனிடம் அதைக் கூறி நடவடிக்கை எடுக்க முடிவுசெய்தனர்,
வழக்கம்போல் விசாரசர்மா மாடுமேய்க்கப் புறப்படார். எச்சதத்தன் பின் தொடர்ந்தார். விசாரசர்மா தன்னை மறந்து உலகியல் உணர்வு இன்றி வழிபட்டுக் கொண்டிருந்தார். மலர் பொய்து பால் ஊற்றி வழிபட்டார். எச்சதத்தன் தனது மகனை அடித்து பால் குடத்தையும் உடைத்தார், மணற் லிங்கத்தை உதைத்தார்.
உலக நினைவற்று வழிபட்ட அச்சிறுவர் சிவபூசைக்கு ஊறு விழைவித்ததைச் சகியாமல் அருகிலிருந்த கோலை எடுத்து வீச அதுமழுவாக மாறி அவர் தந்தையின் காலை வெட்டியது. சிவபெருமான் விடைமீது தோன்றி, ‘நம்பொருட்டு ஈன்ற தந்தையென்றும் பாராது மழு எறிந்தாய், நமே அடுத்த தந்தை, நாம் உண்பனவும் உடுப்பனவும் உனக்கே உரியது. உமக்கு சண்டீசன் எனும் பதம் தந்தொம்’ என அருள் செய்தார்.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******