gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-3.அழிவு!

Written by

அழிவு!                                                                                                                        

அழிவு என்பது இயற்கையின் இயற்கையான நியதி. எனவே நாம் எதையும் அழித்தல் கூடாது. அந்த உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.
தேவியின் மூலமந்திரத்தில் அழிவை குறிக்கும் கணக்குக்கு சிறிதும் இடமில்லை எனக்கூறப்படுகின்றது. அப்படி என்றால் தெய்வங்கள் எப்படி துரோகிகளை, எதிரிகளை, துன்புறுத்துபவர்களை அழிக்க முடியும். அவதாரங்கள் எல்லாம் உண்மையை உலகுக்கு புரியவைக்க! எத்தகைய செயல்களை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த!
ஆனால் அவர்கள் அழித்ததாகச் சொல்லியிருப்பது பொது மக்களின் பகைவர்களை, விரோதிகளை, கொடியவர்களை, அன்பின் எதிரிகளை. அழித்தல் என்பது அந்த சமூக விரோதிகள், கொடியவர்கள், அன்பில்லாதவர்கள் மக்களின் மேல் வைத்திருந்த காழ்ப்பு உணர்ச்சிகளை, பகைமை எண்ண உணர்ச்சிகளை அறவே அழித்து அவர்களின் செயல்களால் நிகழவிருக்கும் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கும் உண்மை நிலையை உணர்த்துவதேயாகும் அந்த அழித்தல் செயல்.
அதனால் தான் கொடியவர்களான அவர்களின் மிகையாண உணர்ச்சிகள் அழிக்கப்பட்டவுடன், அவர்கள் உண்மைதனை புரிந்து மன்னிக்க வேண்டிய பின் அருள் கொண்டு ஆசி வழங்கி அவர்களுக்கு மன்னிப்புகள் வழங்கப் பட்டுள்ளது.
இப்படி கொடியவர்களுக்கெல்லாம் மன்னிப்பு வழங்கப்படும் போது நல்லவர்களுக்கு மன்னிப்புகள் ஏதுமில்லை. சோதனைகள்தான். மன்னிக்கும் வகையில் ஏதும் செயல்கள் இல்லை. நான் என்ன குற்றம் செய்தேன் என பலர் வேதனைப் படுவதுண்டு. பட்டை தீட்ட தீட்டத்தான் வைரத்தின் ஒளி மிகையாகின்றது. நம் செயல்களை பட்டை தீட்டி உறுதியுடன் வழிமுறைப் படுத்தவே அந்தச் சோதனைகள்.
எதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.
அவர்கள் சொல் செயல் ஏதனாலும் மற்றொருவருக்கு தீங்கு நேராது. சொல்லுமுன், செயலுக்கு முன் சிறிது யோசித்து, ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை யோசித்து சொல்லப்பட்டால், செயல்பட்டால் அந்தச் சொல்லால், செயலால் யார் ஒருவருக்கும் பாதிப்புகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும்.
அப்போது அங்கு அன்பு மலரும்! ஆனந்தம் தோன்றும்! அனைவரும் சந்தோஷமாய் இருக்கலாம்! சந்தோஷத்தை சந்தோஷிக்க வாழ்வு சந்தோஷமயமாகும். இன்னல்களை சந்திக்க, இடர்பாடுகளை உறுதியுடன் தாண்ட நாம் கொண்ட சந்தோஷமே உதவும்.
உந்துதல் அழிவு: நாம் கொண்ட சந்தோஷம் உடலில் பயணித்து எல்லா அவயங்களுக்கும் சென்று ஓர் உந்துதல் நிகழ்வை ஏற்படுத்தும். இந்த உந்துதலின் காலம், அளவைப்பொறுத்து அதன் சக்தி நமக்கு கிடைக்கின்றது. நமது பயணத்தில் ஓர் துக்கம் ஏற்படும் போது இந்த உந்துதல் சக்தி அதைப் போக்க செயல் படுவதால் அதன் சக்தி அளவு குறைகின்றது.
எனவே மீண்டும் மீண்டும் நம்மிடையே உந்துதல் ஏற்பட்டு அதன் சக்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஏற்படும் பாதிப்பு நிகழ்வுகளால் அழியும், குறையும் உந்துதல் சக்தி அழியாமல், உந்துதல் அழிவின் பாதிப்பு நிகழாமல் இருக்கும்.
உதிர்தல்: மரங்கள், செடிகள் பூக்களை மலர்வித்து தங்கள் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த அழகை, மணத்தை எல்லோரும் பார்ப்பதுமில்லை. கவனம் செலுத்தி ரசிப்பதும் இல்லை. இருப்பினும் இயற்கை தன் கடமைதனை செய்கின்றது.
எல்லாப் பூக்களும் சூல் கொண்டு காய்களாவதில்லை. காய்கள் ஆன எல்லாம் கனிகளாவதில்லை. நாம் நினைக்கலாம், எல்லா மலர்களும் காயாகி கனிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று. நீங்கள் நினைக்கும் இந்த நியதி நடப்பதில்லை. நிறையப் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சுகளும், காய்களும்கூட உதிர்ந்து விடுகின்றன. எஞ்சியவையே கனியாகின்றது.
இந்த நியதி யாருடையது. அது கர்மபலன்களின் செயல். சூரியன் ஒளிகண்டு குளத்தின் மலர்கள் அல்லி, தாமரை எல்லாம் மலர்வதில்லை. அன்று அப்போது தயாராக இருப்பவை மட்டுமே மலர்கின்றன. மற்றவை நாளை. அல்லது அடுத்த நாள் என்று நியதி உண்டு. இதுபோன்றே மனிதனுக்கும் நியதி உண்டு. கர்மபலன்களுக்கேற்ப நடக்கும் நிகழ்வுகளை ஏற்க பழகிக் கொள்ளவேண்டும்.
நான் திடீர் என்று இறந்துவிட்டால், உயிர் உடலிலிருந்து நீங்கிவிட்டால் என் கணவன்/மணைவி என்ன ஆவாள்! என் குழந்தைகள் என்ன ஆகும்! நான் நினைத்தது, செய்யவிருந்தது எல்லாம் என்ன ஆகும்! என நீங்கள் நினைத்தால் ஒன்றும் ஆகாது என்பதுதான் பதில். எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும். இது போன்ற புலம்பல்களால்தான் குழப்பங்கள் துன்பங்கள் நிகழ்கின்றன.
ஓர் பிறப்பிற்கு சந்தோஷப்படும் நாம், ஓர் இறப்பிற்கு பலவித எண்ணங்களை கொண்டுள்ளோம். வயது முதிர்ந்த இறப்பு என்றால், எல்லாம் அனுபவித்து விட்டார், கடமைகளைச் செய்துவிட்டார் இனிஎன்ன! நல்ல சாவு என்கின்றோம். ஒரு ஆன்மா உடல் நோய்வாய்பட்டு துன்பத்திலிருந்தால் அதைப் பார்க்கச் சகியாத பலர், அவர் இறந்தால் பறவாயில்லை என பிரார்த்தனை செய்வதுமுண்டு. செய்த பாவங்களுக்கு அனுபவிக்கிறது எனவும் சொல்வோர் உண்டு. அகால மரணம் என்றால், அந்த ஆன்மாவைப்பற்றி தெரிந்தவையெல்லாம் சொல்லி அவைகளையெல்லாம் அனுபவிக்காமல் சென்று விட்டாயே என வருத்தமுறுகின்றோம்.
இவ்வாறு எல்லாவற்றையும் சொல்லி புலம்பி வழியனுப்பும் நாமும், ஓர் நாள் மற்றவர்கள் புலம்பலுக்கிடையே வழியனுப்பப் படுவோம் என்பதை ஒவ்வொரு ஆன்மாவும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
நடப்பன எல்லாம் கர்மபலன் என்ற உணர்வுவேண்டும். அப்போதுதான் உதிர்வு/மறைவு நிகழ்வுகளும் ஓர் நியதிக்குட்பட்டது என்ற உண்மை புரிந்து அதன் தாக்கம் உங்களை பாதிக்காது. இல்லையெனில் இழப்பின் வேதனை மிக அதிகமாகி நிலைகுலையச் செய்துவிடும். உங்கள் கைகளில், எண்ணங்களில் ஏதுமில்லை, கர்மத்தின் முடிவுதான் என்றாலும், நல்ல எண்ணங்கள், நல்செயல்கள் கர்மத்தின் தாக்கம் அதிகம் பீடிக்காமல் இருக்க உதவும். சிந்தியுங்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
தேடல்: நமக்கு தெரிந்த நிகழ்வுகள் பிறருக்கு பயனுள்ளவையாக மாற மற்றவருக்கு சொல்வதும் நமக்கு தெரியாத நிகழ்வுகளை மற்றவர்களிடமிருந்து தெரிந்து நடப்பதில்தான் வாழ்க்கையின் ஆரோக்கியம் அளவிடமுடியாத அளவிற்கு இருக்கின்றது. ஆகவே தேடலும், பரஸ்பர பகிர்வு மனப்பான்மையுமே வாழ்க்கையின் சிறப்பு.
மனிதா! நீ சுவாசி! அப்போதுதான் உனக்குத் தேவையான பிராணணைக் காக்க வாயு கிடைக்கும்! மனிதா! நீ தேடு! அப்போதுதான் உனக்கு நீர் கிடைக்கும்! மனிதா! நீ சுறுசுறுப்பாகு! வேலைசெய்! உனக்கு உணவு கிடைக்கும்! மனிதா! மற்றவர்களை மகிழ்வித்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்!
இது எல்லோருக்கும் புரிந்த ஒன்று, ஆனால் தேடினால்தான், நாடினால்தான், செயல் பட்டால்தான் அன்பு கிடைக்கும். இதற்கும் நீ ஒன்று செய்ய வேண்டும். ஒன்று செய்தால்தான் அந்த மற்றொன்று கிடைக்கும். உன் முயற்சி, செயலின் தன்மை, ஆழம் இதைப் பொறுத்தே நீ தேடும் பொருளின் மதிப்பீடு அளவிடப்படும்.
எனவே உண்மையாக தேடு, உள அன்போடு தேடு, மனித நேயத்துடன், மாசற்ற உள்ளத்துடன் தேடு. தேடி விரும்பியதை அடையும் வரைத் தேடு. தேடல்...அன்பைத் தேடல் ஓர் சுகமான முயற்சி.. வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் செயல்.
மனதை அடக்கியவர்கள், மயக்கத்தைக் கொன்றவர்கள், நிஜத்தில் நிற்பவர்கள், எங்கும் நிறைந்திருப்பவர்கள்- சித்துவேலை தெரிந்த சித்தர்கள், மனிதர்களில் மேம்பட்ட மகான்கள், அரசர்களை ஆட்கொண்ட ரிஷிகள்,  முற்றும் துறந்த முனிபுங்கவர்கள், பீடங்களை தலைமையேற்கும் மடாதிபதிகள், சுவாமிகள் -இவர்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால் அவர்கள் சிந்தனை தவ வாழ்க்கையாகத்தான் இருக்கும்.  உயர்ந்த சிந்தனையுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, அதிலிருந்துதான் அவர்களின் தேடல், தெய்வ சிந்தனைகளைத் தொடங்குகின்றனர்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879341
All
26879341
Your IP: 34.228.7.237
2024-03-19 09:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

சந்தோஷப்பூக்கள்