gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-2.ஆன்மா!

Written by

ஆன்மா!                                                                                                                           

ஆனந்தமான முகமும் ஆரோக்கியமான உடலும்தான் ஓர் ஆன்மாவிற்கு தேவை! ஓர் குழந்தை தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து ஒர் பொருளைப் பெற்றுக் கொண்டவுடன் அந்த பொருளின் தன்மை அறியாமலேயே அதன் முகத்தில் ஓர் மலர்ச்சி, ஆனந்தம், ஓர் புன்முறுவல், சந்தோஷம் தோன்றுகிறது. இதைப் போன்றே என்ன! ஏது! என்று ஏதும் அறியா நிலையில் இந்தப் பூவுலகில் ஆன்மாவிற்கு ஓர் உடல் கிடைத்து உயிர் மூச்சை சுவாசிக்க ஆரம்பிக்கும் போது குழந்தையாகத்தான் தோன்றுகிறது.
இதுபோன்றே ஒர் பொருளை மூடிவைத்தால் அதைக்காண, அதைப்பற்றி அறிந்துகொள்ள நாம் மிகுந்த ஆவாலாய் இருப்பது இயற்கையான இயல்பு. இந்த உள்ளுணர்வு எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. இந்த உணர்வுதான் நம் உள்ளே மறைந்திருக்கும் ஆன்மாவையும் தேட ஆரம்பிக்கும்.
அந்த உணர்வு ஆன்மீகத்திற்கு அடிகோலும். நடந்த ஒரு நிகழ்வை மறந்துவிட்டு, அதைப்பற்றிய விபரங்களை நினைவுக்கு கொண்டு வரமுடியாமல் விட்டு விட்டாலும், நமது உள்ளுணர்வு செயல்படத் தொடங்கி, அந்த நிகழ்வு பற்றிய செய்திகளை நமக்கு பிறகு தெரியப்படுத்துதலை நாம் பலதடவை அறிந்திருப்போம். அன்று ஞாபகம் வரவில்லையே என நினைத்திருப்போம்.
இதுபோன்றே ஆன்மா தனது ஆன்மீக எண்ணங்களை என்றாவது ஓர்நாள் உள்ளுணர்வுகள் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கும். அன்று அது ஆன்மீக உணர்வாகப் புரியும். அதுமுதல் உங்கள் தேடல் தொடரும். ஆன்மாவின் பசியை தீர்க்க முயலுவீர்கள்.
ஒரு குழந்தை மட்டுமே எப்போதும் காரண காரியமின்றி சிரிக்க முடிகின்றது. என்ன செய்கின்றோம் என அறியாமல் விளையாட முடிகின்றது. துள்ளி குதிக்க முடிகின்றது. தன் வாழ்நாளில் நிகழ்காலத்தை புரியவில்லை என்றாலும் ஆனந்தமாக ரசித்து மகிழ்கின்றது. சந்தோஷப்படுகின்றது. ஆனந்தமடைகின்றது. இதுதான் வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
அந்தக் குழந்தையின் நிலையில் உங்களை இறுத்திப் பாருங்கள். சந்தோஷப்படுங்கள். இவ்வுலகில் இயற்கையாக பல்வேறு விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் கண்டு அனுபவிக்க, சந்தோஷிக்க நிறைந்துள்ளது. அவைகளை கண்டு ஏற்று ரசித்து அனுபவித்து சந்தோஷப்படுங்கள்.
நாளை என நினைத்து, அன்று அந்த பொழுதில் கிடைக்கும் சந்தோஷத்தை விட்டு விடாதீர்கள். பின் எப்போதும் அந்த வேளை கிடைப்பது எப்படி அரிதோ, அப்படியே அந்த சந்தர்ப்பம், சந்தோஷம் கிடைப்பதும் அரிது.
நீங்கள் குழந்தையாயிருக்கும் போது கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை உங்களுக்கு ஒரு குழந்தை உங்களின் மேற்பார்வையில் வளர்ப்பில் வந்தால், அதன் வாழ்க்கை முறைகளை கட்டளையிட்டு, கண்டிப்புகாட்டி, சட்ட திட்டங்கள் போட்டு இருட்டடிப்பு செய்து விடாதீர்கள்.
இயற்கை பலப்பல இனிப்பான செய்திகளை, செயல்களை தன்னுள்ளே பொதிந்து வைத்துள்ளது. அவ்வப்போது அதைப் பெறமுயற்சி செய்து, அதைப் பெற்று தன் வாழ்வில் மலர்ச்சி, ஆனந்தம், சிரிப்பு, சந்தோஷம் ஆகியவற்றுடன் மகிழ்வுடன் வாழ்நாட்களை சிறப்பாக அமைத்து வாழ வேண்டும். அதுவும் ஆன்மாவின் வாழ்நாள் முடியும் வரை என்பதே இறையின் நியதி.
இதைப் புரிந்து கொள்ளாமல் சட்ட திட்டங்களை ஏற்படுத்தி மூடத்தனமாக வெறியுடன் பின்பற்றிக் கிடைக்கும் இனிய சந்தர்ப்பங்களை வீணடித்து விட்டு மிகுதியான வாழ்நாட்களில் சந்தோஷ சாயல் சிறிதுமின்றி உலவும் உடல்களே, உடலின் உயிரே, ஆன்மாவே உனக்கு.... உன்சிந்தனைக்கு... உன்செயல் பாட்டிற்கு....
ஆன்மா-மேல்நிலை: இயற்கை தோற்றுவித்த பொருட்கள், உயிர்கள் அனைத்திற்கும் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயற்கையான குணம், விசேஷம் உண்டு. அது அவ்வப்போது வெளிப்படுகின்றது. இவ்வாறு எல்லாப் பொருட்களும், மரம், செடி, கொடிகள், உயிர்கள் எல்லாம் தம் தம் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. இவைகள் ஒன்றுக்கொன்று சந்தித்தும், விலகியும் பரம்பிக்கிடக்கின்றன.
உலகில் தோன்றிய உயிர்களுக்கும், உடலின் ஆன்மாவிற்கும், கர்மத்தின்படி குணநலன்கள் இருக்கும். எப்படியிருப்பினும் பிறப்பிற்குபின் ஏற்படும் சூழல்காரணமாக, படிப்பு, நட்பு, பழக்கம் ஆகியவற்றால் அவற்றின் குணநலம் மாறவாய்ப்புண்டு. தவறு செய்யப் போகின்றோம் என்றால் நம்மை நாமே தடுப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. இதை நாம் மனத்தின் சாட்சி அதாவது    ‘மனச்சாட்சி ’ என்கிறோம்.
தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகின்றோம். நமக்குள்ளே இருக்கும் பல நல்லவைகளை பாதுகாக்கவேண்டும். இடை பழக்கவழக்கங்களால் அதைமாற்ற நினைத்து மனம் பேதலித்து மாறிவிட விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
ஆகாயம் என்பது வெளியாகும். அதிலும் வஸ்து இருக்கின்றது. ஒரு குடத்திற்குள் வேறு பொருள் இல்லையென்றால் அதனுள் ஒன்றுமில்லை என அர்த்தமில்லை. அந்த குடத்தினுள் ஆகாயம் வெளி இருக்கின்றது. அந்த குடத்தினுள் உள்ள வெளியானது எப்படி  அண்டைவெளியான ஆகயத்தில் கலக்கின்றதோ அதே மாதிரி நம்முள் இருக்கும் ஜீவாத்மாவை பரமாத்மாவில் ஒன்றச் செய்யவேண்டும். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை மோனத்தில் புரியும்.
கண்ணுக்கு புலப்படாத ஆன்மா, மனம் ஒன்றின் மூலமாக உடலை இயக்கி பலன்களை அனுபவிக்கின்றது. ஆத்மா சக்தி மிகுந்தது. தன்னை மறந்து உடலில் ஐக்கியமாகியுள்ளது. தன் நிலை உணர்ந்து இந்த உடல் சிறைக்குள்ளிருந்து மீளும்போது ஞானம் பெற்றதாக இருக்க வேண்டும்.
அதற்காக உடலுடன் இருக்கும்போது அதன் செயல்பாடுகளால் ஞானம் அடைய முயலவேண்டும். ஆத்மா விழிப்படையவேண்டும். நமது விருப்பமும், செயல்பாடுகளும் இணக்கமுடன் இருக்கவேண்டும். சரீரம் தன் செயல்பாட்டிற்கு அளிக்கப்பட்டது என ஆன்மா நினைத்து செயல்படும் போது மனத்தை சமநிலையில் இருத்தி வைக்கமுடியும்.
மனதில் இணக்கம் கொண்டால் வெளியில் நல்லிணக்கம் ஏற்படுவது இயல்பாகிவிடும். பிரச்சனையின் காரணங்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும். மேலும் காரணங்களைச் சேர்த்து பிரச்சனையின் தன்மையை கடினமாக்கி விடக்கூடாது. தயாராகும் எல்லா பூட்டுகளும் சாவியுடன்தான் தயாரகின்றது. அதைப்போன்றே எல்லாக் காரணங்களும், பிரச்சனைகளும் நிவாரணம், தீர்வு காணக்கூடியவைகளே! மனதின் மானசீக சக்தி அந்த காரணங்களுக்கு தீர்வுகாணும்.
ஆன்மாவின் உடலுக்கு உறவுகள் இருப்பதைப்போல ஆன்மாவிற்கும் உறவுண்டு. அதுதான் ஆன்மீக உறவு. அதை ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். அது ஆன்மாவிற்கு நன்மையான உறவாகும்.
இந்த உறவை வாழ்வின் காலத்தில் சிலர் புரிந்தும், சிலர் புரியாமலும் நெருங்க முயலுகின்றனர். எப்படியிருந்தாலும் எல்லா ஆன்மாவும் இந்த உடலைவிட்டுச் செல்லுமுன் கண்டிப்பாகத்தன் ஆன்மாவின் உறவை நினைத்துக் கொள்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.
நீங்கள்யார்! உங்களின் அடையாளம் என்ன! என்றால் அனைவரும் ஏதாவது ஒன்றை சொல்வீர்கள். ஆனால் எல்லாமே ஒருநாள் குழந்தை, இளைஞன்/இளைஞி, ஆண்/பெண், கணவன்/மனைவி, தாத்தா/பாட்டி என மாறூதலுக்குட்பட்டது.
ஆனால் ஆன்மா என்றுமே ஒன்றுதான். அதுதான் நிலையானது. அது உன்னுள்ளே உள்ளது. இதைச்சொன்னால் தத்துவம் பேசுவதாக சொல்வார்கள். உண்மையில் ‘தத்துவம்’ என்பதில் உள்ள ‘தத்’ என்றால் அது என்றும் ‘த்வம்’ என்றால் ‘நீ’ என்றும் அர்த்தம். எனவே தத்துவம் என்றால் ‘நீயே அது’ எனப் பொருள்.
நீங்கள் யார்! என்ற கேள்விக்கு இன்னார் பேரன், இன்னார் மகன், தாய் தந்தையர் இவர் என்றுதான் கூற முடிகிறதே அன்றி உங்கள் உடம்பில் உள்ள ஆன்மா எங்கிருந்து வந்தது எப்படிவந்தது! ஏன் வந்தது! யாருடைய மகன்/மகள் எனக் கூற முடியுமா! முடியாது! இப்படி எதுவும் சொல்ல முடியா ஆத்மா எவ்வளவு நாள் உடலை இயக்கும், எப்போது அது செல்லும் எனவும் கூறமுடியாது
அப்படி எதுவும் ஆன்மா பற்றி அரிதியிட்டுக் கூறமுடியா நிலையில், அது உடலில் இருக்கும் காலம் இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதே அருளாளனின் அவா! இந்த இனிமை கர்மத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இயங்கும் தன்மையுடையது.
கர்மத்தின் தாக்கங்களை குறைத்து, இருக்கும் இனிமைக்கு வளமை சேர்க்க முயல வேண்டும். அதுவே அந்த ஆன்மாவின் கடமை. தன் நிரந்தர உறவின்முறை நினைத்து தற்காலிக உறவின்முறையை வழிநடத்தப் பழகவேண்டும். படைப்பின் பகுதியாகிய ஆன்மாவின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.
எல்லா பரிமாணங்களுக்கும் மேற்பட்ட ஓரு உச்ச பரிமாணத்தை, நிலையை அடைவதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறப்பு. அந்த ஆன்மாதான் உடலின் இயக்கத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
புராணங்களில் பலருக்கு ஒர் நிலையில் அவரவர்கள் விரும்பியது வேண்டியது நடந்துள்ளது என்ற உண்மைதனை உணருங்கள். அது எதனால் நடந்தது! எப்படி நடந்தது! அவர்களின் வழிபாட்டு முறையினாலா! அப்படியென்றால் இன்னல்களின்போது எப்படி வழிபடமுடியும்! அப்போது எப்படி நிகழ்வுகள் நடந்தது என கேள்விகள் எழலாம்!
காந்த ஊசியானது அதன் ஈர்ப்புத் தன்மையினால் வடக்கு நோக்கி திசை காட்டுவதுபோல அருளால் ஈர்க்கப்பட்டிருக்கும் ஆன்மாவின் மனம் உலக வாழ்வில் திசை தப்பி போகாது சரியான பாதையில் செல்லும். அதாவது அவர்களின் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஓர் நிலையில் அந்த வழிபாடுகள் வேண்டுதல்கள் ஓர்முனைப்பட்டு மையமாக குவிந்திருந்த காலம் அவர்கள் வேண்டியதை பெற்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களது சக்தி என்ன! உங்களுக்குத் தெரியாது. ஆன்மாவின் பலம் என்ன! புரியாது. ஆனால் உங்களிடம் உள்ள விழிப்புணர்வு மனதையும் உணர்வுகளையும் ஒரு நோக்கில் செலுத்தி மையப்படுத்தப் பழகுங்கள். நீங்களும் அதைப் போன்ற வெற்றியை, வேண்டியதை ஓர்நாள், நீங்கள் மையப்படுத்தும் நாளன்று பெறுவீர்கள்.
உங்கள் உணர்வுகள் அகலக் கால் வைப்பதுபோல் இருக்கக்கூடாது. பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு எண்ணங்கள் சிதறுண்டு போகக்கூடாது. இது செயல், யோகம், தியானம் எல்லாவற்றிற்கும் பொதுவானது.
பாவபுண்ணியத்திற்கு அப்பாற்பட்ட நிலையையடைந்த ஆன்மாவும் வெற்றி, தோல்வி, தூற்றுதல், போற்றுதல், சாதனைகள், வேதனைகள், நடந்த நடந்துகொண்டிருக்கும் வாழ்வு, நடக்கவிருக்கும் சாவு ஆகிய யாதொன்றாலும் எந்த ஆன்மா சமநிலையை கொள்கின்றதோ அந்த ஆன்மாதான் உண்மையான மேன்மைநிலையை உணரமுடியும்.
அடைந்த மேன்மைதனை கெடுக்கவோ, எடுக்கவோ முடியாது. மேலும் மேலும் வளர்த்து தன் உறவிடம் ஒப்படைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள சக்திகளால் நீங்கள் யாரென்று தீர்மானிக்க முடியாத நிலை உங்களின் மேன்மைநிலை. உலகின் உயிர்களை அந்த நிலையில், உங்களில், உங்களின் உணர்வின் ஒரு பகுதியாக பார்க்க முடிவது அந்த மேன்மைநிலை. அதுவே ஆன்மாவின் மேல்நிலை.
பலர் வழ்வில் ஏற்பட்ட துயரங்கள், சலிப்புகள், வேதனைகள், கசப்புகள் இவற்றிலிருந்து விடுபட ஆறுதல் வேண்டி ஈடுபடுகின்றனர். ஆன்மீக நிலை கேலிக்கூத்தாக மாறக்கூடாது. வாழ்வின் மிகஉயர்ந்த பரிமானம் ஆன்மீகம். ஆன்மீகத்தின் பேரால் ஆறுதல் தேடக்கூடாது. உண்மையை புரிந்து உணர்வுகளுடன் ஆன்மா மேன்மையடைய ஆன்மீகத்தை நாடவேண்டும். பல வருடங்கள் உண்மையாக உழைக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடந்துவிடாது. உழைப்பிற்கு பதில் காலம் சொல்லும்.  
ஒருவர் நாய்க்கு உணவிடும்போது தடியால் அதை அடிப்பது வழக்கம். அந்த நாய் வலியின் மிகுதியால் நாளை உணவருந்தக்கூடாது எனநினைத்தாலும், அடுத்தநாள் அந்த நேரம் வந்தவுடன் வாலையாட்டி அங்குவந்து அடியுடன் உணவருந்தி செல்கின்றது. அடியின்றி உணவில்லையா என நாய் சிந்திப்பதில்லை.
அதுபோல வாழ்வும், துக்கமில்லா இன்பம் என்றில்லாமல், துக்கத்திற்குப்பின் இன்பம் என மாறிமாறி வரும் தன்மையுடையது. துயரமில்லா ஆனந்தவாழ்விற்கு ஏங்கும் மனம் கடைசியில் தான் ‘ஆன்மீக வாழ்க்கை’ என்ற உண்மையை உணருகின்றது.
ஆன்மீகம் பற்றி பேசுவது, யோசிப்பது, உணர்ச்சி வசப்படுவது எல்லாம் உடனடியாக நடக்கக்கூடியது. இன்று அற்புதமானதாக தோன்றியது ஓர்நாள் மிக மிக அல்பமானதாக தோன்றும். புத்திசாலித்தனமான செயல் சிந்தனை என்பது சிறிது காலத்திலேயே முட்டாள்தனம் நிறைந்ததாகத் தோன்றும். காலத்திற்கு இந்த சக்தியுண்டு. அந்த சக்தியை அடைந்த ஆன்மாவே மேல்நிலையை உணரமுடியும்.
நீங்கள் உணர்வது சிந்திப்பது முக்கியமல்ல. உலக வாழ்க்கைக்கு உங்கள் சிந்தனை, உணர்வு உறுதுணையாக இருக்கலாம். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நீங்கள் நினைக்கும் சிந்தனைகள் உணர்வுகள் உங்களை எங்கும் கொண்டு சொல்லாது. உங்கள் சிந்தனைகள் பாதைகள் வகுக்கலாம். அங்கே செல்ல நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
ஓர் நிலை கொண்டு சக்தியை அடைய முயல வேண்டும். அது நீங்கள் உருவாக்கியது இல்லை. எப்போதும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நம்மைச் சுற்றியுள்ள சக்தி நிலைகளை ஈர்க்க வேண்டும். அவைகளை கிரகித்து சக்திநிலை கொண்டு நம் சிந்தனைகள் செயல்படும்போது நாம் எல்லா எல்லைகளையும் கடந்து பரிமாணத்தை உணரமுடியும்.
அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது மட்டுமல்ல. அவர்களுக்குள் சலனமற்ற தன்மை உணர்ந்திருக்க வேண்டும். உள் நினைவுகளிலோ, வெளி நினைவுகளிலோ சிக்கி சலனத்துடன் செயல்படக்கூடாது. உங்களால் கிரகிக்கப்பட்ட, உங்களுக்குள் ஏற்பட்ட சக்தி நிலையை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
உண்மையைச் சொன்னால் மனித குலத்தின் மேலான குணநலன்கள் நாளுக்கு நாள் தாழ்வுகொண்டு குறைந்து வருகின்றன. அவ்வாறு குறைந்து வருவதன் எதிரொலியாக உலகின் நிலையும் அதில் பயனிக்கும் மனிதர்களின் நிலையும் அவ்வாறே இருக்கின்றது. உண்மையான சுகங்களும், மனச்சாந்தியும் இல்லை. ஒவ்வொரு ஆன்மாவும் சந்திக்கும் பிரச்சனைகளும், துன்பங்களும், துயரங்களும் கண்டு, இதற்கு காரணம் எல்லோரிடமும் குறைந்துவரும் மேலான நற்குணநலன்களே காரணம் என்பதை உணரமுடியும்.
இதைக்கண்டும், அனுபவித்தும், ஆன்மாக்கள் வெறுப்பின் எல்லையை அடைகின்றனர், அவைகளை களைவதற்கு முற்றிலும் நீக்குவதற்கு யாராவது வரமாட்டார்களா! என மனம் ஏங்குகின்றது. அது தவறாகும். உங்கள் சகஆன்மாக்களால் ஏற்பட்ட சம்பவங்கள் அதன் விளைவுகள், அதன் தாக்கங்கள் உங்களையும் சார்ந்தவர்களையும் பாதிக்கும்போது அவரவர்களே அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். அது தங்களால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
எவருக்கும் இவ்வுலகில் பரிசுத்தமான சாந்தியை உருவாக்கும் திறமையும் ஞானமும் இல்லை, அருள் ஒன்றைத்தவிர. ஆன்மாவின் உறவைத்தவிர. எனவே ஆன்மாவின் உறவின் மீது நம்பிக்கை வையுங்கள். செயல் படுங்கள். அந்த ஆன்மீக உறவே உங்களை காப்பாற்றி கரையேற்றும்.
அதற்கு ஒவ்வொரு ஆன்மாவும் 1.நம்பிக்கையுடன், 2.சிந்தனை, செயல்முறை, நடைமுறைகளை சீர்படுத்தி, 3.தன்னைச்சுற்றியுள்ள அதிர்வுகளை கிரகித்து, 4. அந்த அதிர்வுகளை மேன்மைப்படுத்தி, 5. மேன்மையான அதிர்வுகளை ஓர் முகப்படுத்துதலே!  வேண்டியதை வேண்டியபோது வேண்டிய நிலையில் அடைய வாய்ப்பாக அமையும்.
உடலின் இயக்கத்திற்கு காரணமான உணர்வுபூர்ணமான உயிர்சக்தியை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து நடக்கவேண்டும். அதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும். உண்மையான சந்தோஷத்தையும் சாந்தியையும் அனுபவிக்கமுடியும்.
பிறந்த உடலின் ஆன்மா தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கூற்றைக்கேட்டு உறவுமுறை கண்டு, உறவுகளை, உரிமைகளை புரிந்து கொள்கின்றது. ஓர்நிலையில் வளர்ந்த ஆன்மா தன் தற்கால உரிமைகள் இது என்பதை புரிந்து நிரந்தர உறவு தன் ஆன்மாவிற்கு எது என சிந்தித்து அந்த உறவின் பிறப்புரிமைகள் முழுத்தூய்மையையும், சாந்தியையும் புரிந்து வழிநடந்து பூர்ண சுகம் பெறமுடியும்.
இதில் நாம் முதலாவதாக முழுமையான நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கைதான் அச்சானி. நம்பிக்கை இருந்தால்தான் வெற்றிகிட்டும். நீங்கள் என்பது இந்த உடல் மட்டுமல்ல (அது செயல்படும் கருவி) ஆன்மாதான் நீங்கள் என உணரவேண்டும்.
இந்த உடம்பு ஓர் நாள் மறையும். ஆன்மாவின் உறவின் முறையில் என்னிடம் முழுமையான தூய்மையும், முழுசாந்தியும் உள்ளன என ஆன்மா என்னும் வகையில் செயல்பாடுகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அது புகழுடம்பாக இருக்கும். இதுகாறும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகள் தீங்குகள் எது என்பதை உணர்ந்து, அது சம்பந்தமான உணர்ச்சிகள் என ஆன்மாவுடன் இனியும் ஒட்டியிருக்க விடமாட்டேன் என எண்ண வேண்டும்.
மீதமிருக்கும் வாழ்நாட்களை பிரகாசிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையற்றவைகளில் நாட்களை வீணாக்க முயலமாட்டேன் என உறுதியுடன் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்து ஆனந்தமடைய வேண்டும். பலகாலம் வீணடித்து விட்டோம். அழியும் உடலுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு வாழ்வின் பலபகுதிகள் வீணாகிப்போனதை புரிந்து கொள்ளுங்கள். ஆன்மா மேன்மையடைய உங்களுக்கும் ஏனையோர்க்கும் நன்மையானவற்றை செய்ய முற்படுங்கள்.
இந்த உண்மையை, உணர்வுகளை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர்த்துங்கள். மற்ற உடல்களையும் ஆன்மாக்களாக பாவித்து பழகுங்கள். சொல் செயலில் முழுமையான கவனம் செலுத்துங்கள். எச்சரிக்கையாக கையாளுங்கள். அப்படியில்லை என்றால் எல்லாம் கெட்ட சொற்கள், செயல்களாகிவிடும். பலன்கள் எப்படியிருப்பினும், அதில் அதிக நாட்டமின்றி தள்ளி இருப்பது சிறப்பு. அப்போதுதான் அதன் தாக்கம் ஆன்மாவை அதிகம் பாதிக்காது.
சரியான செயல்கள் சந்தோஷம் அளித்தாலும், தவறான செயல்கள் கர்மபலனை நிச்சயம் ஏற்படுத்தும். தவறான செயல்கள் எனத்தெரிந்தால் தெரியாமல் நடந்தவற்றிற்கு வருத்தமுற்று மீண்டும் அதை செய்யாமலிருப்பதுதான் ஆன்மாவிற்கு சிறப்பு. செயல்கள் செய்யும்போது நான் செய்கிறேன், என்னுடையது என்ற நினைவுகள் அற்று ஆன்மா செயல்படுகின்றது, இது என் நிலை என உணர வேண்டும். சந்தர்ப்பங்கள் சூழ்நிலை சரியில்லை எனக்கு அனுகூலமாக நடக்கவில்லை நான் என்ன செய்வது! என சொல்லித் திரிவதுகூடாது.
பல பழக்க வழக்கங்களுக்கு அடிமையான நாக்கும் உடம்பும் அவ்வப்போது அதே பழக்க வழக்கங்களை, நேரம் காலம் தவறாது கடைபிடிக்கும்போது, மனத்திற்கும் ஆன்மாவிற்கும் நேரம் ஒதுக்கி பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆழ்ந்த சிந்தனை என்பது அகம்- உள்ளே நோக்குதல் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சரீரத்திற்குள் இருப்பது ஆன்மா என்பதை உணரமுடியும். ஆத்மாவின் மேன்மைக்கு செவிமூலமாக ஞானம், கண்மூலமாக ஞானம், வாய்மூலமாக ஞானம் பெறலாம். தீமைகள் செய்தாலும், குரோத எண்ணத்துடன் யார் செயல்பட்டாலும் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவன் அதை பொருட்படுத்தமாட்டார்.
ஆழ்ந்த சிந்தனை தீயவற்றை சிந்திப்பதுமில்லை, கேட்பதுமில்லை, சொல்வதுமில்லை. இக்குணம் சகிக்கும் தன்மை, பொறுமை, பணிவு, எளிமை, இனிமை, மனவலிமை முதலிய பண்புகளை அளிக்கின்றது. ஆத்மாவிடமிருந்து நற்குணங்களையே மற்றொரு ஆத்மா கிரகிக்க வேண்டும். கெட்ட குணங்களுக்கு ஏற்ப கர்மபலன் மூலம் தண்டனைகள் இருக்கும்போது அதை ஏன் கிரகித்து தண்டனையை அடையவேண்டும். எல்லா ஆன்மாவும் இனியத் தன்மை உடையதாக வேண்டும்.
நல்சிந்தனைகள் மனதிற்கு உணவாகும். புதிய எண்ணம் உணவாகுவது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை தருவதாக இருக்கவேண்டும். குழப்பமும் சச்சரவும் நிறைந்த வாழ்வில் அவை நீங்க மனம் தேவையான பலத்தினைப் பெற்றிருக்க வேண்டும். நம்முடைய அறிவு சொல்கிறபடி மனம் கேட்கவேண்டும்.
மனம் குதிரையாக இருக்கவேண்டும். அறிவு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். அதுதான் சுகமான வாழ்க்கை. ஆனால் பலரின் அறிவு குதிரையாக இருக்க மனம் அதன் முதுகில் ஏறி சவாரி செய்கின்றது. இது சரியில்லை.
ஓர் ஆன்மா மேன்நிலையடைய அஞ்சாமை, தூய்மை, ஈகை, புலனடக்கம், நேர்மை, உண்மை, கோபம் தவிர்த்தல், அமைதி, பற்றற்று இருத்தல், உயிர்களிடம் இரக்கம், இனிமையான குணம், நாணம், சலிப்பின்மை, சாஸ்திர தெரிவு, சலிப்பின்மை, வலியவனாக இருந்தும் பிறரை தண்டிக்காமல் இருப்பது, கர்வமின்மை, வஞ்சகமின்மை ஆகிய இயல்புகளுடன் ஞானம் கொண்டவனாகவும், பகட்டு, தற்பெருமை, கோபம், கடுகடுப்பு, திமிர், அகங்காரம், அஞ்ஞானம் ஆகிய அசுர குணங்கள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
தெய்வீக குணங்கள் நாம் செல்லும் பாதைகளை சீர்படுத்தி வெற்றி இலக்கை அடைய உதவும். அசுர குணாதிசயங்கள் நம்மை துன்பத்தில் சிறைபடுத்தக் கூடியவை-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879441
All
26879441
Your IP: 3.229.122.112
2024-03-19 09:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்