gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

4-2.ஆனந்தப் பூக்கள்!

Written by

ஆனந்தப் பூக்கள்!                                                                                                        

அழகிய உடல் கொண்ட ஆன்மாவைப் பார்த்தாலும், அழகு நிறம்பிய எதைப் பார்த்தாலும், இளம் பெண்ணைப் பார்த்தாலும், குழந்தைகளைப் பார்த்தாலும், மழலை அல்லது பருவத்து குறும்புகளைப் பார்த்தாலும் கேட்டாலும், ஒருவருக்கு உதவி செய்வதாலும், உதவி ஒருவருக்கு நன்மை பயத்து அதை அவர் நம்மிடம் சொல்லும் போதும், இயற்கையின் ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து ரசிக்கும் போதும், நீரின், உயிர்களின் பலப்பல ஓசைகளைக் கேட்கும்போதும், இயற்கையின் அசைவுகளை கானும் போதும், நீராக ஒடி நீர்வீழ்ச்சியாகும் அழகைக் கானும் போதும், மரம் செடி கொடிகள் முளைக்கும் போதும், வளர்ந்து மொட்டு பூவாகப் பூக்கும் போதும், காயாகிக் கனியாகும்போதும், கல்லிலே கலை வண்ணம் கானும்போதும், சிந்தனை கவரும் செயல்களையும், சிற்பங்களை பார்க்கும் போதும், சுவைமிக்க வார்த்தைகளை கேட்கும்போதும், ஒருவரை ஏமாற்றி விட்டேன் என்று அவரை ஏமாற்றியவிதம் பற்றி அவரிடமே கூறி ஒருவர் வர்ணிக்கும்போது அவரின் வெகுளிதன்மையைக் கண்டபோதும், நண்பர்களுடன் உரையாடும் போதும், நேரங்களை அவர்களுடன் கழிக்கும்போதும், பழய பசுமை எண்ணங்களை நினைக்கையிலும், சுத்தமான ஜில்லென்ற காற்றை நுகரும் போதும், மழைச்சாரல் பொழியும்போதும், நம் செயல் நம் சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, மற்றவர்களுக்கு ஆனந்தம் தரும் என்ற நினைவிலும், நம் செயலால் அவர்கள் ஆனந்தம் அடைந்ததைப் பார்த்தபோதும், இனிப்பு, விரும்பிய உணவு வகைளை உண்ணும்போதும், இனிய மனதை மயக்கும் பாடல், இசை, ஒலி கேட்கும்போதும், மனதைக் கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகளைக் காணும்போதும், நல்ல பண்புள்ள செயல்களைக் கானும்போதும், செய்யும்போதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்போதும் என்று வரிசைப்படுதிக் கொண்டே போனால்..

இவ்வுலகில் அளவிடமுடியா எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவையாக அமைந்துள்ளது. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம்! சந்தோஷம்! ஆனந்தம் நிரம்பிருக்கும் இடத்தில்தான் அன்பும் கருணையும் இருக்கும். பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும். அந்த மிருதுவான உணர்ச்சி ஆன்மாவிற்கு ஓர் புதிய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கக்கூடும். வளமுடன் வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது எனப்பொருள். வளமுடன் என்பது உங்களிடம் என்னென்ன உள்ளது என்பதில் இல்லை! எப்படி இருக்கின்றீர்கள் என்பதில்தான் இருக்கின்றது.
நம் எல்லாவகைச் செயல்களும் நமது ஆனந்தத்தைக் குறிவைத்தே! ஒவ்வொரு நாளும் படுக்கைக்குமுன் இன்று எவ்வளவு ஆனந்தத்தை அனுபவித்தீர்கள் என நினையுங்கள். ஏன் இன்று இல்லை. அல்லது நேற்றைய தினத்தைவிட எப்படி குறைந்தது என யோசியுங்கள். விடைகாணுங்கள். அடுத்தநாள் முழு ஆனந்தத்தை அடைய முற்படுங்கள். ஆனந்தவாழ்வின் தாரகமந்திரம்இதுவே!
இப்படி அளவில்லா வளமுள்ள ஆனந்த சந்தோஷத்தை தரும் நிகழ்வுகளைப் புறக்கணித்து துன்பத்தில் துவளாமல், இந்த இனிய சந்தோஷத்தை அடைய எல்லோரும் அவரவர் எண்ணங்களை உணர்வுகளை பதப்படுத்திக் கொண்டு ஆனந்த சந்தோஷமடைய முயலுங்கள்.
வாழ்வில் பணம், புகழ், கௌரவம், வசதி வாய்ப்புக்கள்தான் முக்கிய நோக்கங்கள் என்று ஆக்கிக்கொண்டவர்களுக்கு ஆனந்தம் தொலைந்துவிடும். வாழ்வு சந்தோஷம், அமைதி, அன்பு என்பதை நினையுங்கள். ஆன்மா ஆனந்தத்தின் உயிராக வளரவேண்டும். அதற்கு முயற்சியுங்கள். வாழ்வியலில் இதுவரை என்னென்ன சேர்த்தீர்கள் என்பது முக்கியமில்லை. அனுபவிக்க ஏகப்பட்டது இருந்தும் கிடைக்காத ஒன்றிற்காக ஏக்கம் கொண்டு செயல்பட ஆரம்பித்த மனநிலைதான் நம் துயரங்களுக்கு காரணமாகிவிடும். எவ்வளவு சந்தோஷமான ஆனந்த வாழ்கையை அனுபவித்து மகிழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியமான ஒன்றாகும்..
எல்லா உடலின் ஆன்மாக்களுக்கும் இவ்வுலகில் சந்தோஷத்தை தேட உரிமையுண்டு, ஆனால் கவலையை பரவச்செய்ய யாருக்கும் உரிமையில்லை. எனவே சந்தோஷத்தைத் தேடுங்கள்! ஆனந்தத்தை ஏற்படுத்தும், உள்ளமும், உள்ளத்தின் உணர்வுகளும், உடலும், உடலின் ஆன்மாவும் ஆனந்தத்தால் சந்தோஷமடையும். இந்த சந்தோஷம் எல்லா நிலையிலும் நிதானம், பொறுப்பு, சீரிய சிந்தனைகளை வழங்கி வாழ்வில் வெற்றியை காண வழிவகுக்கும். எனவே எல்லோரும் இந்த ஆனந்த நிலையடைதலே சந்தோஷத்தின் சந்தோஷம்.
ஓர் ஆன்மாவுடைய உடல் இன்னொரு ஆன்மா உள்ள உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது ஒரு பெரியதானம் அளிப்பது போன்றது. ஓர் ஆன்மா மலர்ந்திருந்தால் அதனுடைய உடலின் முகம் மகிழ்வோடு காணப்படுவதை கண்ணுற்ற மற்ற உதடுகளிலும் ஓர் புன்னகை தவழும். இந்த புன்னகைகள் கஷ்டமான வேலைகளை மிகமிக எளிதாக்கிவிடும். அது உங்களுக்கு மகிழ்வு, மற்றவர்களுக்கும் ஆனந்தம். ஆனந்தம் கொண்ட உயிராக நீங்கள் இருந்தால் ஓர் அற்புத அழகு மிளிரும். மனித உயிர்கள் என்றன்றி உலகத்தின் எல்லா உயிர்களும் கவரப்பட்டு உங்களை நோக்கிவரும்.
சந்தோஷத்தை மற்றவர்களுக்கு அளிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் ஆனந்தம் பெரிது. அதுவும் ஒருசில காரணங்களால் மறுக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அதை நீங்கள் அளித்தல் என்பது ஓர் உன்னதமானச் செயல்.
நிகழ் வாழ்வின் இனிமைதனை சுவைக்க கடந்தகால கசப்புகளை மறக்கப் பழகுங்கள். உங்கள் செயல் வெற்றிபெற அதில் கவனம் செலுத்துங்கள். அது அடுத்தவர் பற்றி வேண்டாத எண்ணங்கள் தோன்றி தேவையற்ற செயல்களால் உங்களைச் சோர்வடையச் செய்யாமலிருக்கும். மனதிற்கு இஷ்டமான செயல்கள் உங்களை புத்துணர்ச்சியுடன் இயக்கும் தன்மை கொண்டவை. புத்துணர்ச்சியிருந்தால் நீங்கள் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். எந்த சூழலிலும் ஓர் நிலைப்பாட்டில் சமநிலையில் இருக்க பழகவேண்டும். அது ஆனந்தம்.
ஆனந்தம் அடைய ஓர் வழி, உழைக்க வேண்டும். உடல் உழைப்பு செய்தால்தான் வாழ்வின் முழுச் சந்தோஷத்தையும் உணரமுடியும். உழைக்கத் தெரியாதவனுக்கு மகிழ்வின் சுகம் புரியாது. உழைப்பு உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் செயலாகும். அதிலும் அவரவர் வேலையை அவர்களே செய்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. உழைப்பு உற்சாகத்தையும் இளமையையும் தரும் ஒப்பற்ற தன்மையுடையது. உழைப்பதால் ஒருவரது சக்தியேதும் விரையமாதில்லை. உடலும் மனமும் பலமடைந்து பொலிவுடன் விளங்கும். அது அளவில்லா ஆனந்தம் தரும்.
ஆனந்தம்பற்றி தெரியாமல் இருப்பது நம் உள்ளே என்ன இருக்கின்றது என்ற அறியாமைதான். வெளியே இருப்பவைகள்தான் நம் உணர்வுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாம் செய்யும் செயலுக்கு அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணங்களால், வெளி மனித உலக ஆக்கிரமிப்பால் நம்மால் விரைவில் முடிவு எடுத்து செயல்பட முடிவதில்லை. வெளிமனிதர்கள் எதையும் சொல்லலாம். ஆனால் செயல்பாடு, பாதிப்பு என வந்தால் அவர்கள் ஒதுங்குவர். அப்படியிருக்கும்போது நாம் ஏன் அவர்களை நினைத்து நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும்.
நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு நாமே எஜமான். அதனால் அடையும் பலாபலன் நம்முடையதே! அதை சிந்தித்து நாம் செயல்பட வேண்டுமே ஒழிய, அடுத்தவரின் நிலைக்காக, வேண்டுதலுக்காக, குறிக்கோளுக்காக நம் செயலை மாற்ற முடியாது, ஒருமனித ஆன்மாவிற்கு உட்புற நிகழ்வுகள் நிகழ்ந்தால்தான்  உண்மையான ஆனந்தம் உணரமுடியும்.
அது எல்லையற்ற உணர்வுகளுடையது. சூழ்நிலைக்கேற்ப நம்மை பதப்படுத்திக் கொள்வது உண்மையான ஆனந்தம். பிறஆன்மாக்களிடம் அன்புடனிருப்பது, துயரத்தில் துடிப்பவர்களுக்கு ஆறுதலலிப்பது, பரிதாபத்துக்குரியவர்களை பரிவுடன் கவனிப்பது, பொதுவாக மனிதநேயத்துடன் செய்யும் இதயபூர்வமான செயலாக்க சேவை ஆனந்தமானது.
உலகத்தின் இன்பங்களை எல்லாம் நுகர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட நினைக்கும் ஆன்மாக்களே! தனு என்ற உடல், கரணம் என்ற உடற்கருவிகள், புவனம் என்ற அந்தந்த ஆத்மாக்கள் வாழும் உலகம், போகம் என்ற அனுபவம் என இந்த நான்கும் குறைவின்றி ஓர் ஆன்மாவின் உடலின் உயிருக்கு கிடைத்தால்தான் அந்த ஆன்மா ஆனந்தப் படமுடியும். அளவற்ற முறையற்ற இன்பம் துன்பத்தைதான் தரும். அளவுடன் முறையுடன் அனுபவிப்பவனுக்கே இன்பங்கள் நீடித்து இருக்கும்.
நாம் ஆசைப்பட்டதை அடைவதில், அடைந்ததில் ஆனந்தப்படுகின்றோம். உண்மை என்ன வென்றால் இதுகாறும் மனதில் உழன்றுவந்த, உங்கள் எண்ணங்களில் திரண்டிருந்த, கண்மூடித்தனமான ஆசை, மனதிலிருந்து பல தடங்கல்களுக்கிடையே வெளியேறி மனது நிம்மதி அடைந்ததால் ஏற்பட்டதே அந்த ஆனந்தம்.
என்றும் ஆசைப்படுவதில் ஆனந்தமில்லை. ஆசையை விடும்போதுதான் அமைதி ஏற்பட்டு ஆனந்தம். ஆனால் மனித ஆன்மாக்களுக்கு ஆசைப்படத்தான் தெரிகிறது. ஆசைகளை விட்டுவிடத் தெரிவதில்லை. எப்படியிருப்பினும் மனம் ஆனந்தத்தை மட்டும் தேடிக்கொண்டிருக்கின்றது.
அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயில்விக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார். எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக ஆனந்தத்துடன் விளையாடி மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர்.
இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விளாயாட்டாக விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான்.
ஓர் யோகிடம் மூன்று வரங்கள் பெற்றான் ஒருவன். அவைகளை ஒருமுறைதான் உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் எதை விரும்பினாலும் உடனே நடக்கும் என்பது வரம். வீட்டிற்குச் சென்றான். அன்று அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து மோதல் அதிகமாயின. மனம் வெறுத்து இனி இவளுடன் வாழ்வது சரியில்லை என நினைத்தான். அவள் இறப்பதேமேல் என நினைத்தான். அந்த வரத்தின் படி அவள் இறந்துவிட்டாள். ஊரார் கூடி அவளின் பெருமைகளைப் பற்றி பேச தான் அவசரப்பட்டு விட்டோமோ எனநினைத்து வருந்தினான்.
அவள் மீண்டும் உயிருடன் வந்தால் போதும் என நினைத்தான். அப்படியே வரத்தின்படி அவள் உயிர் பிழைத்தாள். அப்போது இன்னும் ஒருமுறைதான் வரம் கேட்க வேணும் என்ற நினைவு வந்தது எதைக் கேட்பது, ஒன்னும் புரியவில்லை.
ஆனாலும் அவன் மனம் இறைவா, வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் கிடைக்க, வரம் எனக்குத் தா என்றான். இறைவன் சொன்னான் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழக் கற்றுக்கொள். ஆனந்தத்துடன் வாழ்வாய் என்றார்- உயிர்களே போதும் என்பதே பொன் செயும் மருந்து என எப்போதும்  நினைவுகொண்டு இருக்க ஆசிகள்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879515
All
26879515
Your IP: 100.25.40.11
2024-03-19 10:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

சந்தோஷப்பூக்கள்