gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

3-1.வேதம்!

Written by

வேதம்!


வேதம் என்பது கடைபிடிக்கமுடியாத ஒன்றும், செயல் படுத்த முடியாதது ஒன்று மில்லை. உயரத்தில் உள்ளது, எட்டிப்பிடிக்க முடியாதது, இருக்கும் இடம் தெரியவில்லை, கண்டுபிடிக்க முடியாதது என எதையும் நினைக்கக்கூடாது. எதையும் சாதிக்க முடியும், எட்டிப்பிடிக்க முடியும், கண்டு கொள்ள முடியும் என்ற உறுதி வேண்டும்.

ஒன்றை வேறொன்று என புரிந்துகொண்டபோது, அதை ஆரய்ந்துபின் உண்மையில் அது என்னவென்று தெரிந்துகொள்ள, நமது அறியாமையை அகற்றும் வெளிச்சமாகத் திகழ்வது வேதம். சாதாரண கயிறுகூட இருட்டில் பாம்பாகத் தெரிவது, விளக்கை ஏற்றியபின் உண்மைதனை அறிகிறோம். இந்த உண்மைகளை விளக்கி அச்சம், பயம் நீக்கும் பணியை வெளிச்சம்போல் வேதம் செய்கின்றது.
எந்த இதிகாசத்திலும், புராணத்திலும் நல்ல சிந்திக்கும் திறன் கொண்டவன், தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவன், பாசமும் நேசமும் கொண்டவன், மன உறுதியுடன் செயல் படுபவன் கொண்ட லட்சியங்கள் தோற்றதாக இல்லவே இல்லை.
அதற்கான மன உறுதி, முயற்சியை செயலாக்கும் திறன், கொஞ்சம் கர்மபலன் இருந்தால் வெற்றிக்காண வழி கிடைக்கும். அந்த பாதையில் செயலாக்கம் நடந்தால் சிறப்பாகும். நமது ஆன்மா சிறப்பானது, தூய்மையானது. ஞானத்துடன் சிந்தித்தால் எல்லாம் சிறப்பாகும். பிரபஞ்சத்தின் முந்தைய ஆற்றல்களெல்லாம் நம் முன்னோர்கள் உறுதியுடன் செயல் பட்டது.
நம்மைச்சுற்றி இருள் ஏதுமில்லை, நீங்கள் பிரகாசித்தால். நம்மில் யாரும் எதிலும் பலவீனமானவர்கள் இல்லை. எல்லா வகையிலும் திடகாத்திரமானவர்களே! தவறு என நீங்கள் நினைப்பதை, மற்றவர்கள் அவ்வறு சொல்லக்கூடும் எனத் தோன்றினாலும் செய்யாதீர்கள். திறன் உங்களிடம் இல்லை என்ற நினைவை கொள்ளாதீர். அந்த தீய கருத்தை உங்களுள் பரவாமல் முற்றிலும் அழித்து விடுங்கள்.
நல்லது செய்ய உண்மையில் விரும்பினால் தான் நமக்கு நிறைய சிந்தனைகள், செயல் வழிமுறைகள், காலம் எல்லாம் கிடைக்கும். பல லட்சியங்களை மனதில் கொள்ளலாம். நாம் செய்யும் தவறுகளை கண்டு ஒன்றும் சொல்லாமல், நமக்கேன் என என்னும் உறவினர்கள், நண்பர்களை நாம் பெற்றததுதான் நமது கர்ம பலன். முதலில் ஒன்றைச்சொல்லி அடுத்து அதை சூழ்நிலைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக மாற்றிச் சொல்லும் ஆன்மாக்கள் நம்மைச்சுற்றி அதிகம்.
நமது லட்சியத்திற்கு இவைகள் இலக்கணமானது இல்லை. எனவே நடைமுறை வாழ்க்கையில் நமது லட்சியத்தை இனைக்க வேண்டும். அந்த ஒன்றை எப்போதும் சிந்தித்தால் சிறப்பாகும். நமக்கு இருப்பது ஒரே உலகம், ஒரே வாழ்க்கை, ஒரே லட்சியம் வெற்றி கொள்வதுதான், சந்தோஷப்படுவதுதான், எல்லாமே சந்தோஷம் என்ற ஒன்றுக்குத்தான் நாம் செயல் படுகின்றோம். செயல் படவேண்டும்.
வேறுபாடுகள் தோன்றினாலும் உயர்ந்த நோக்கில் வேறுபாடுகள் களையப்பட்டு மறைந்தே தீரும் என்பது திண்ணம். உயர்ந்த லட்சிய நோக்கில் எல்லாமே வேறுபாடுகளற்றுத் தெரியும். வானிலிருந்து பார்த்தால் மலையும் மடுவும், மரமும் புல்லும், மாடியும் குடிலும் உயர வேறுபாடுகளின்றி தெரியும்.
அந்த வேறுபாடற்ற உயரத்திற்கு உங்கள் லட்சியங்கள் உயரவேண்டும். உயர்ந்த லட்சியங்கள்கொண்டு நோக்கின் எல்லாவற்றையும் வேறுபாடின்றி பார்க்கமுடியும். இதுவே வேதத்தின் கூற்று. முதலில் தாவரங்களும் பின் மனித இனமும் தோற்றிவிக்கப்பட்டது என்கின்றது வேதம். தாவரங்களின் தோற்றம் ஜீவராசிகளுக்கு உணவாவதே! அதாவது உணவை படைத்தபின் உண்பவனை தோற்றுவித்தவனின் அருள் அது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்குமுன் அதற்கு தாய்ப்பால் தயாராகிவிடும் என்பது வேதங்கள் கூறும் உண்மை.
மனதிற்கு மனம் எண்ண வேறுபாடுகளிருந்தாலும், உடலின் ஆன்மா, ஆன்மாவின் உடல் ஓர் அற்புதம். அதன் உழைப்பு சிறப்பு. அதன் செயல் பாடுகள் சிறப்பு. உழைப்பின் அருமை புரிந்தால்தான் வெற்றியின் சந்தோஷம், மழையின் அருமை வெய்யிலும், வெய்யிலின் அருமை மழையிலும் தெரிவதுபோல் தெரியும். புரியும். சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். நம் பெற்றோர்கள் ஒற்றுமையில், உழைப்பில் உறுவான இந்த உடலின் அருமை நமக்கு புரிய வேண்டும். அதன் உள்ளே உள்ள ஆன்மாவை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் அதன்வழி சென்று அதன் செயல்களை நன்முறைப் படுத்த முடியும்.
புராண, இதிகாச, இலக்கியங்களை, நீதி நூல்களை, இலக்கணங்களை படிப்பதால் வாழ்வில் உன்னத நிலைக்கு வரமுடியாது. இதைத்தான் வாசக ஞானத்தால் சுகம் வருமோ? என்றார் தாயுமானவர். எல்லாவற்றையும் படித்தலின் மூலம் நம்மை நாமே படிக்கவேண்டும். உன்னை அறிந்துகொள் என்பதே ‘உபநிடதங்களின் அடிப்படை உபதேசம்’.
தனிமை: என்ன என்ன சொல்லி ஊட்டமளித்து ஊக்கத்துடன் பெற்றோர்கள் வளர்த்த உடல், அந்த உடலின் ஆன்மா இது. அவர்களிடம் ஒன்றி வளர வேண்டும். வளர்ந்த பின்னும் ஒன்றிப் போகவேண்டும். அப்போதுதான் தனிமை என்ற எண்ணம் எந்நாளும் தோன்றாது, ஓர் நம்பிக்கையான தன்னம்பிக்கை கிடைக்கும். ஆதரவான அரவனைப்பு எல்லா நிலையிலும் எல்லா சுற்றத்திலிருந்தும் கிடைக்கும். ஒவ்வொரு ஆன்மாவும் தன் பயணத்தில் தன்மீது படிந்துள்ள எல்லா அடையாளங்களிலும்- தந்தை, தாய், கணவன், மனைவி, நடுத்தரவயது ஆண்/பெண், இளைஞன், இளைஞி ஆக எந்த அடையாளத்திலும் அந்த அரவனைப்பைப் பெறமுடியும்.
தெடரும் சந்தோஷம்: மனமும் உடலும் ஆக்க சக்தியைத்தான் வெளிப்படுத்தும். உங்கள் சிந்தனை அதன் வழி சென்றால் அந்த சக்தி வெற்றி சக்தியாக மாறவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு மனமும் உடலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மனது சந்தோஷப்பட்டால் உடலும் சந்தோஷிக்கும்.
அதற்கு நாம் நம் வாழ்வில் இதற்கு முன் நமக்கு சந்தோஷம் கிடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்தால், அதன் மூலம் ஓர் ஊமை சந்தோஷம் மனதிற்குள் தோன்றி அது உடல்வழி பரவி, உடலும் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிடும். அதே போன்று சந்தோஷங்களை ஏற்படுத்தும் விஷயங்களை திட்டமிடுங்கள், செயல் படுங்கள். பிறகு எங்கும் எப்போதும் சந்தோஷம், சந்தோஷம் என்ற ஆனந்தம் என்றும் நம்முடன் தொடரும். நாம் நாடுவது சந்தோஷம்தான்.
ஆனாலும் நாம் எதிர்பார துன்பங்கள் இடைஇடையே வரும். அப்போதுதான் சந்தோஷத்தின் அருமை தெரியவரும். தொடர் சந்தோஷங்களும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் துயரமாகிவிடும். எதிர்பார்த்து கிடைக்காமல் துயரங்களுக்கிடையே நாம் தேடியடைந்த சந்தோஷங்களே நிறைவான சந்தோஷத்தை தொடர்ந்து தரும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879153
All
26879153
Your IP: 54.172.169.199
2024-03-19 08:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்