gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

2-4.உண்மைப் பூக்கள்!

Written by

உண்மைப் பூக்கள்!


உண்மை சக்தி வாய்ந்தது. ‘சத்தியம் ஜெயிக்கும். வாய்மையே வெல்லும்’. யாரும் உண்மையை மறைக்க முடியாது. காலத்தால் அழியாதது. சூழ்நிலையில் அப்போது மறைந்தாலும், காலப்போக்கில் பிறிதொருநாள் வெளிப்படும் அதிசயமானது உண்மை! உண்மை எப்போதும் இனிமையானது அல்ல! கசப்பானதும் கூட!

அந்த உண்மையை ‘சத்யா’ -‘நியாயம்’ என்கின்றது மனுதர்ம சாஸ்திரம். நேர்மையும் நாணயத்தையும் கொண்ட பண்பே சத்தியமாகும். உண்மை அழிவற்றது. எல்லாவற்றிலும் உயர்ந்தது, எப்போதும் மாறாதது என்கிறது உபநிடதம். சத்யமே பரம்பொருள் என்கிறது வேதம். சத்யத்தைத்தேடி தெரிந்துகொண்டு அங்கேயே நிலைத்துவிடு என்கின்றன புராணங்கள்.
சத்யத்தை கடைபிடிப்பவன் எப்படியும் வாழ்வின் நிறைவை அடைவான். சத்தியமில்லா அசத்திய வாழ்வு ஆன்மாவிற்கு அல்லலைத்தான் தரும். இன்றைய சூழல் பொய்யின் பிரதிபலிப்பாக உள்ளது. பொய்யின் கலப்பு எங்கும் தெரிகின்றது. எல்லா இன்னல்களுக்கும் பொய்யே மூலகாரணம். சத்யத்தின் மூலம் அரிச்சந்திரனும்,  இராமனும், நல்லறத்தினால் தர்மரும் உயர்வடைந்துள்ளதாக புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
உண்மையை பேசுங்கள். அவைகள் மற்றவர்களை காயப்படுத்தவேண்டாம். சில உண்மைகள் உங்களுக்கோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ பல இடங்களில் இனிமையானதாக இருக்காது என்ற நிலையில் அதைத் தவிர்ப்பதே சாலச் சிறந்தது. உண்மையைச் சொல்லாமலிருப்பதா? மறைத்து விடுவதா? என்பது போன்ற  குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உண்மைபேசிய பிதா காந்தியின் உயர்வு அனைவருக்கும் தெரிந்தது. உண்மையை நேசிப்பவன் சமூகத்திற்கு அற்புதமானவன்.
நீங்கள் கூறும் உண்மையினால் பல சிக்கல்கள் தீரும் என்றால் அதை எல்லா இடத்திலும் எப்போதும் கூறலாம். அதுவே பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றால் அதன் தாக்கம் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் அந்த உண்மையை வெளிப்படுத்தாது மறைத்தலே அப்போது செய்யவேண்டிய செயல். பொய்யை நிமிர்ந்து நிற்கச்செய்ய 1000 காரணங்கள் வேண்டும். ஆனால் உண்மைக்கு ஒன்று போதும்.
மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதைச் சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது. உண்மை அரியது, சிறப்பானது, இனிமையானது என்பதற்காக எல்லா நேரத்திலும் எல்லாரிடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கவும் கூடாது. கசப்பானது, சுடும் என்பதற்காக சொல்லாமலும் விட்டு விடக்கூடாது. தேவையானவற்றை தேவையான போதுதான் பயன் படுத்தவேண்டும்.
இயற்கை ஒர் பிரம்மாண்டமான உண்மை. நீ அதன் செயல்களில் நாட்டம் கொண்டு ஏற்றுக் கொள்கின்றாயோ இல்லையோ, அது உனக்கென்று இல்லாமல் பொதுவாக தன் கடமையைச் செய்யும். இது நிஜம்! நம்மால் எதையும் மாற்ற இயலாது. அதன் விருப்பப்படி நம்மைச் சுற்றி நிகழ்வுகளை செயல்படுத்தி நம்மை சூழ்நிலையின் கைதியாக இயங்க வைப்பது எதுவோ அதுவே சத்தியமானது! விதி! கர்மா! இயற்கை! எல்லாம். அந்த நியதிகளுக்கேற்ப நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை பழகிக் கொள்ள வேண்டும்.
உண்மையை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வேண்டும். நீ செய்த செயல் உனக்குச் சரியானதாக படலாம். மற்றவர்கள் அதை தவறு என்றபோது, உங்கள் பிடிவாதம் தளர்த்தி நிதானமாக, உங்கள் நிலையிலிருந்து விடுபட்டு, மற்றொருவன் அதை செய்திருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றமுறையில் சிந்தித்தால் உங்கள்செயல் எவ்வாறு மற்றவர்களுக்கு தவறாக தோன்றுகிறது என்பது புரியும்.
அப்போதும் தவறு தெரியவில்லை, உங்கள் பக்கம் நியாயம் இருகின்றது என்றால் சரி. நீங்கள் செய்தது தவறு எனச்சிறிது சந்தேகம் வந்தாலும். அது புரிந்தவுடன் அக்கணமே அல்லது அடுத்துவரும் நிகழ்வுகளில், உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு செயல்பட்டால் மனமே நீ வெற்றியடைந்துவிட்டாய்.
இனிவாழ்வில் இதுபோன்ற ஒருதவறு நீங்கள் மீண்டும் செய்யமாட்டீர்கள். எவ்வளவு பெரிய அனுபவம் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் வாழ்வில். உண்மைகளை, தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த மனப்பக்குவம் உடல் நலத்திற்கு ஏற்றது. வாழ்வில் பொறுமையாக நல்லமுடிவுகளை நிதானமாக எடுத்து வெற்றிகாணும் நிலை உருவாகும்.
காவல்பணி செய்து கொண்டிருந்தவனுக்கு தோட்டத்தில் சப்தம் கேட்கவே, அவசரமாக அங்கு வந்தவன் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்க கண்டான். அதை பிடித்து கட்டிப்போட முயன்றான். மாட்டைபிடிக்க முடிவில்லை. கையில் வால்தான் சிக்கியது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த மாடு இவனை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து பின் பறக்க ஆரம்பித்தது. விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அது அவனை கயிலாயம் கொண்டு சென்றது. சிவனைக் கண்டவன் அவரிடம் மாட்டைப்பற்றி முறையிட்டான். தோட்டத்தில் விளைந்த பயிரெல்லாம் நாசம் என்றவனிடம், சிவன் அதற்கு ஈடாக பொற்காசுமுடிச்சு ஒன்றை தந்தார். நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்தான். அவனுக்கு ஒருசந்தேகம் தோன்றியது. உண்மையில் அந்த மூட்டை முழுவதும் தங்கம்தானா என்று.
ஒரு காசை எடுத்துக்கொண்டு நண்பனிடன் சென்றான். அதை சோதித்த அவன் அது சொக்கத் தங்கமாக இருக்கக் கண்டான். இருந்தாலும் நண்பனுக்கு எப்படி அது கிடைத்தது என அறியும் ஆவலில், இது பித்தளை உனக்கு இதை யார் கொடுத்தது என்று கேட்டான். நடந்ததைக் கேட்டவன் அன்று இரவு நண்பனின் தோட்டத்தில் பதுங்கியிருந்தான். நந்தி வந்தது. பித்தளை கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே இது சரியா எனச் சிவனிடம் கேட்க நினைத்து நந்தியின் வாலைப் பிடித்தான். அது விர்ரென்று உயர கிளம்பியது. மறைந்திருந்த நண்பன் இவன் காலை இறுக்கிப் பிடிக்க இருவரையும் மேலே கொண்டு சென்றது நந்தி.
அப்போது காலைப்பிடிந்திருந்த நண்பன் உனக்கு எப்படி இவ்வளவு காசுகள் கொடுத்தார் என்றான். ஆர்வமிகுதியில் இவ்வளவு என்று இருகைகளையும் விரித்துக் காட்டினான். கைகளை விரித்ததால் வாலைப்பிடித்தபிடி நழுவ இருவரும் பூமியில் விழுந்தார்கள். அடிபட்டார்கள்.
உண்மையைச் சந்தேகப்பட்டவன் வாலைப்பிடிக்க, பேராசை கொண்டவன் காலைப் பிடிக்க இருவருக்கும் உடலில் காயம், துன்பம், துயரம். எனவே உண்மையை எப்போதும் சந்தேகப்படாதீர்கள்.
ஞானி ஒருவர் மரத்திலிருந்து இலைகளை பறித்து கையில் இலைகள் அதிகமா! மரத்தில் அதிகமா! என்றார். மரத்தில் அதிகம் என்றவர்களைப் பார்த்து, மரத்தின் இலைகளின் அளவு உண்மைகள் பூமியில் இருந்தாலும், என் கையில் உள்ள அளவிற்கு நீங்கள் உண்மைகளை அறிந்து கொண்டாலே துன்பங்களிலிருந்து விடுபடமுடியும். உண்மையைப் பொறுத்த வரையில் நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரமே வாழ்வின் விடியல். எனவே இயல்பாக, எளிமையாக இருங்கள் என்றார்.
எளிமை சிக்கனம் என்றதும் காந்திஜி பற்றி ஒர் நிகழ்வு. தன் ஆசிரமத்தில் காந்திஜி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பஞ்சு சுருள் ஒன்று இருக்கக் கண்டார். அன்று அவர் மௌனவிரதம். தன் கூட வருபவர்களிடம் அதைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றுப்புறத் தூய்மை குறித்து குறிப்பிடுகிறார் என நினைத்து உடன் வந்தோர் அந்த பஞ்சை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
மௌன விரதம் முடிவுற்றபின் காந்திஜி அந்த பஞ்சு பற்றி கேட்டார். குப்பையில் போட்டவர் பதறிவிட்டார். இதுவே காசாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா எனக்கேட்டார். பருத்தி பயிரிடுவதிலும் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகி இருக்கின்றது தெரியுமா! அந்த உண்மையை புரிந்து முதலில் பஞ்சை தேடி எடுத்துவா என்றார். பஞ்சை திரும்ப பெற்றதும், பஞ்சு அழுக்கானால் நூல்நூற்று அழுக்கை அகற்றலாம் எனக்கூறியவரின் எளிமை மற்றும் சிக்கனத்தை ஆசிரமத்தில் உள்ளோர் தெளிவாக புரிந்தனர்.  உண்மை உழைப்பின் அருமையை உழைத்தவர்தான் உணர்வர். உண்மையில் அவருக்குத்தான் எளிமையும் சிக்கனமும் கைவரும்.
தன் நெஞ்சம் அறிய, ஒரு நிகழ்வு குறித்துப் பொய் சொல்லாமல் உண்மை பேசவேண்டும். அப்படிப் பேசுபவன் அனைத்து ஆன்மாக்களினாலும் பேசப்படுவான். பொய் இல்லா வாழ்வில் எல்லாப் புகழும் வந்து சேரும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879690
All
26879690
Your IP: 3.235.199.19
2024-03-19 10:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்