gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-8.பயம்!

Written by

பயம்!

பழம் பயந்தது என்றால் அது முற்றிலும் பழுத்தபின் கீழே விழுந்துவிடுவோமோ என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. முற்றிலும் பழுத்தால் கீழே விழவேண்டும் என்பது நியதி. இடையில் பிற உயிரினங்களுக்கு அது பழுத்தது தெரிந்தால் அவைகள் கீழே விழுமுன் உபயோகிக்கலாம். இது அடுத்த நியதி. இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இதில் பயப்பட என்ன வேண்டியிருக்கின்றது.
குதிரையை நீர்குடிக்க நீர்நிலைக்கு அழைத்து சென்றால், அது நீரில்தன் நிழலைப் பார்த்து நமக்குப் போட்டியாக இன்னொரு குதிரை வந்துவிட்டது, நமக்கு நீர் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சி அதை முதலில் உதைக்கும். இதுபோன்ற பயம் தேவையற்றது. இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கான உணவையும், காற்றையும் யாரும் களவாட முடியாது. உங்கள் கர்மத்தின் பலன்படி, நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும். நீங்கள் அடைவது என நிர்ணயக்கப்பட்டதை அடைந்தே தீருவீர்கள்.
மனம் உற்சாகமாக இருந்தால் எந்தவிதத் தடங்கல்களும் நமக்கு தடைக்கல் இல்லை. தோல்விகளுக்கு பயம் ஒரு காரணம். எல்லாம் இருப்பவனுக்கு ஒருவித பயம்! ஒன்றும் இல்லாதவனுக்கும் ஒருவித பயம்! அளவாக இருப்பவனுக்கும், போதும் என்ற மனம் இருப்பவனுக்கும் பயமென்பது துளியுமில்லை. பயம் விசித்திரமானது. பயம் தோன்ற ஆரம்பித்தால் அதற்கு கை கால்கள் முளைத்து பெரிதாகி நம்மைப் பற்றி ஆட்டிப்படைக்கும். கவலைகூட முடிவில் பயத்தில் முடியும்.  
எதில் விருப்பம் இருக்கின்றதோ அதில் பற்றும் இருக்கும். பயமும் இருக்கும். குற்றமுள்ளவர்கள் அடையவேண்டியது பயம். உண்மையானவன் எப்போதும் பயப்படுவதில்லை. அளவில்லா செல்வமோ, உயர் பதவியோ, அளவில்லா அதிகாரங்களையோ அடைந்தவர் கடந்து வந்த பாதையில் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாக இருக்கும். குற்றம் புரிபவன் தன் செயல் வெற்றிகரமாக நடக்க பயத்துடன் வேண்டுகிறான். குற்றம் புரிந்தபின் தான் செய்த குற்றத்திற்கு பயந்து வேண்டுகின்றான். ஆனால் குற்றங்கள் பற்றி நினையாதவன் யாதொன்றிற்கும் எப்போதும் பயப்படுவதில்லை.
வாழ்வுப் பயணத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் தாங்கள் ஏதோ பெரிய பாவம் புரிந்துவிட்டதாக நினைத்து அவதிப்படுகிறார்கள். ஒருபக்கம் அழுகின்றார்கள். இன்னொரு பக்கம் அழுகிவிடுகிறார்கள். அறியாத வயதில் புரியாத நிலையில் தவறு செய்தவர்களை பயமுறுத்துகிறது இந்தசமூகம். இந்த பயமும், குற்ற உணர்வும் தேவையில்லை.
மனிதர்கள் விலங்குகளைப் பார்த்து பயந்தகாலம்போய், மனிதர்கள் மனிதர்களைப் பார்த்து பயப்படும் காலமாகி வருகிறது. உள்ளத்தில் உள்ள காமம், மயக்கம், வெகுளித்தன்மை, கவலைகள் மற்றும் இயலாமை தான் பயத்தை உருவாக்குகின்றன. பொறாமையும், வெறுப்புணர்ச்சியும் பயத்தினை வளர்க்கின்றன. அது நமக்குள் பலவீனத்தை தோற்றுவிக்கின்றது. நம்மீது நாம் வைத்திருக்கும் பற்றே பயத்திற்கு காரணம்.   மனிதனின் தீராத, நிறைவேறாத ஆசைகள் மரணபயத்தை ஏற்படுத்துகின்றது. மரணத்திற்குபின் நமக்கு என்னவாகிறது என்பது புரியாததால் பயம் தோன்றுகிறது. நான், என்உலகம் எனப் பார்க்கும் மனிதனுக்குத்தான் பயம் புரிகின்றது. அதே மனிதனுக்கு தன் இளம்வயதில் அவ்வாறு பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. அதனால்தான் இளங்கன்று பயமறியாது என்கிறோம்.
மாடிப்பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா பயம்! அலர்ஜி! மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன். காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலனிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் தொம் என விழுந்தது. வீட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்ப ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே? என்றார். ஒ! மன்னிச்சிருங்கள்! பழக்கதோஷம்! இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார்.
மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலனியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது. ஆகா! தப்பு செய்துவிட்டோமே! இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலணியை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சத்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான்.
விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான். ''என்னப்பா! ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலனியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதை பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார். இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில், பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பயம், கவலை போன்றவைகளை நீக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் அவைகள் உள்ளத்தில் குடிகொண்டு நாளடைவில் உடல் உறுப்புகளை சீராக செயல்படாமல் கெடுத்து நம் செயல்களுக்கு பங்கம் விளைவிக்கும். அதனால் மூளை, வயிறு போன்றவைகள் அதிகம் பாதிப்படைகின்றன. நமது திறமைகள் குறைந்துவிடும். அதைப் புரிந்து உணர்ந்து செயல் படுங்கள். அறியாமை, அச்சம் நீங்கினால் பயத்திலிருந்து தெளிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அவதாரம்: மின்சாரம் இருக்கும் (+) பாசிட்டிவ் ஒயரும், மின்சாரம் இல்லா (-) நெகட்டிவ் ஒயரும் மின் இழைக் கம்பியில் இணைந்தால் தான் ஒளி. நாராயனர் உள்ளார் என நம்பிக்கை கொண்ட பிரகலாதனும், இல்லை என்ற இரண்யனும் மோதும் நிலையில் நரசிம்ம அவதாரம் நிகழ்வுற்றதாக புராணம் கூறுகிறது. அதைப் போலவே தர்மச் செயல்கள் முழுவதுமாய் குன்றி, அதர்மம் தொடர்ந்து தலை தூக்கும் போது மீண்டும் அவதாரங்கள் தோன்றும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றி ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை - மண்ணின் மகிமையது.
யோக தியானத்தில் இருந்த மாண்டவ்யமுனியை  திருடர்கள் கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்து மன்னரிடம் தகவல் அளிக்க மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார். மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்க நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறியதைக்கேட்ட மாண்டவ்யருக்கு கோபம் உச்சத்தை அடைந்தது. இது அநியாயம். அறியா பருவத்தில் செய்த தவறுக்கு இந்த கடுமையான தண்டனை அளித்த தர்மதேவதை பூமியில் மனிதப் பிறவி எடுக்க சாபம் கொடுத்தார், அதன்படி பூமியில் பிறந்தவரே விதுரர். அவரின் உபதேசங்கள்தான் விதுரநீதி என்பதாகும். அதைபோலவே பூமியில் பல தேவர்கள் பிறந்து தங்களின் சாபங்களை கர்மபலன்களைப் போக்கிக் கொண்டுள்ளனர் எனப் புராணங்கள் வாயிலாக உணரலாம்.
ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். இந்த மண்ணில் பிறந்ததால் நீங்கள் உங்கள் கர்ம பலன்களை நீங்கள் செய்யும் செயல் வழிமூலமாகக் குறைத்து கொள்ள சந்தர்ப்பங்கள் உண்டு. இனி பிறவி வேண்டாம் என்பதற்கும், இம்மண்ணில் நீ தோன்றிய இப்பிறவிமூலமே வழி உண்டு.
புண்ணியம்: புண்ணியம் என்பது ஓர் ஆன்மா தன் ஸ்தூல சரீரத்தின் மனத்தால் நினைத்து செய்யும் நல்ல செயல்களால் ஏற்படுவது. தீயவழியில் எல்லோரையும் ஏமாற்றி துன்புறுத்தி, அதன் மூலம் நிறைய பொருள் சம்பாதித்து பின் அதில் ஒர் பகுதியை தான தர்மங்கள், உதவிகள் செய்கிறேன் என்று செலவிடுவதால் வராதது புண்ணியம். தங்களுடைய தேவைகளுக்கு மீறீய பொருள் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் பொருள் கொடுப்பது தாங்கள் புகழடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களின் ஆசைமனம் பொருள் குறைந்து விட்டதை கணக்குடன் நினைத்தால், அவ்வாறு தானம் கொடுப்பதில் புண்ணியமில்லை.
தன்னிடம் இருப்பதைக் கொடுப்பவன் வாழ்வில் நம்பிக்கையுடன் இருப்பான். எதையும் இழப்பதில்லை அவன், புகழோ வேதனையோ அடையாமல் தன்னிடம் இருக்கிறது எனக் கொடுப்பவர்கள் நிறைவுடன் வாழ்வர். மரங்களும், செடிகளும் யார் கேட்டும் கொடுப்பதில்லை. அவைகள் நிறைவுடன் மற்ற உயிர்களுக்கு அளிப்பதுபோல் நீங்களும் உங்கள் குலம் தழைத்துவாழ, மனித ஆன்மாக்கள் வாழ இருப்பதை மனமுவந்து கொடுத்து உதவுங்கள்.
நிறைய நன் முறையில் செயல் பட்டு தன் தேவைகளுக்கு ஏற்ப உழைத்து, மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமல் சம்பாதித்து பின் அதில் மற்றவருக்கு என ஓர் பகுதியை செலவழிப்பதே புண்ணியத்தை தரும். எனவே நல்வழி செயல்களால் கிடைக்கும் இன்பமும், புண்ணியமும் சிறப்பு.
நம்மிடம் இருக்கும் செல்வம் இன்று அல்லது நாளை அல்லது பிரிதொருநாள் நம்மை விட்டு போகலாம், என்று அது நடக்கும் என யாராலும் கூறமுடியாது. எனவே செல்வம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி நல்ல காரியங்கள் செய்ய பழகுங்கள். அது உங்களுக்கு என்றும் நிம்மதியைத் தரும். இருக்கும் செல்வம் சென்றபின் அடடா! அதை செய்யலாம் என நினைத்தேன், இதைச்செய்யலாம் எனநினைத்தேன் என்று அங்கலாய்த்தலால் பயனில்லை. துன்பம்தான் மிச்சம். உங்களால் முடிந்த அளவிற்கு செல்வத்தை பயன் படுத்தி நற்செயல்கள் செய்தோமே என்ற மனத்திருப்தியாவது இருக்கும்.
நம்மீது கொண்ட பொறாமையின் காரணமாக நம்மை வசைபாடி நிந்திப்பவர்கள், நாம் செய்த பாவங்களிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, நம் கர்ம பலனின் வேகத்தைக் குறைக்கும் பணியை செய்வதுமட்டுமல்லாமல், அவர்கள் எப்போதோ செய்த புண்ணியத்தின் ஒரு பகுதியை நமக்கு அளிக்கின்றார்கள். எனவே நம்மை நிந்திப்பவர்கள், அதன் காரணமாக நம் கர்மபலனின் பாவத்தின் பகுதியை தங்களை அறியாமலே எடுத்துக்கொள்ளும் அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள். அவர்களை மன்னித்துவிட பழகிக் கொள்ளுங்கள்.
மேலும் அவர்கள் செயலால் உங்களுக்கு, “யார் செய்த புண்ணியமோ, எனக்கு இந்த பலன்” என நாம் சில சமயம் கூறுகிறோமோ அந்த புண்ணியம் உங்களை தூற்றி, நிந்தித்தவர்களால், உங்களை எதிர்ப்பவர்களால், விரோதியால், அல்லது நீங்கள், உங்கள் ரத்த சொந்தங்கள் செய்த நல்ல கர்ம பலனால் கூட இருக்கலாம்.
எதுவாயிருந்தாலும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உங்களிடம் உண்மையன்பு நிறையும். கனிவு பிறந்து அன்பு தோன்றும். நீங்களும் பிறரை நிந்தித்து பாவம் செய்து உங்கள் புண்ணிய பலன்களின் பகுதியை இழந்து விடாதீர்கள். உங்கள் மூலமாகவோ உங்கள் முன்னோர் மூலமாகவோ உங்களை அடைந்திருக்கும் கர்மபலனின் புண்ணியங்கள் உங்களுக்கோ, அல்லது உங்கள் சந்ததிக்கோ மிகவும் உதவி புரியும்,
சுலபான வாழ்க்கையை சூழ்ச்சி, சுயநலமிகுந்ததாக ஆக்கிவிடாதிருக்கப் பழகுங்கள். “மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.
நீதி நேர்மை தவறாத அரசன் ஒருவன், மிகுந்த இரக்க குணம் கொண்டவன். மக்களின் நன்மைக்காக வாரி வழங்கினான். பிறர் மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழ்ந்தான். அவன் ஆயுட்காலம் முடிந்ததும் எமதூதர்கள் வந்து அழைத்துப் போயினர். அந்த அரசன் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்திருந்ததால் அந்த ஜீவனை நரகத்தின் செயல்பாடுகளை கண்டு பின் சொர்க்கம் அழைத்துச் செல்ல ஆணையிட்டான் எமதர்மன்.
அவ்வாறே அவன் செர்க்கம் செல்லும் வழியில் நரகத்தின் செயல்பாடுகளை பார்க்க அனுமதித்தனர். நரகத்தில் ஜீவன்கள் படும் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினான். அரசன் செய்திருந்த தவறுக்கு அதுவே தண்டனை என்பதால் அவனை அங்கிருந்து சொர்க்கம் கொண்டு செல்ல முனைப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜீவன்கள் மன்னா, உங்கள் மேனியை தழுவிய காற்று, துன்பத்தில் இருக்கும் எங்களை அடையும்போது இதமாக இருக்கின்றது, எனவே இன்னும் சிறிது நேரம் இங்கிருங்கள் என வேண்டினர். மன்னர் அப்படி இதமான காற்று என்னால் உங்களுக்கு கிடைக்கிறது என்றால் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்றார். தூதர்களின் நிலை தர்ம சங்கடமானது.
எமதர்மனுக்கும், இந்திரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மன்னா அவர்கள் செய்த பாவம் அவர்கள் அனுபவிக்க வேண்டியது என்றனர். நான் இங்கு தங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதைவிட எனக்கு மகிழ்வு வேறில்லை. அப்படியில்லையெனில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தந்து விடுகிறேன் என்றான் மன்னன்.
அந்த புண்ணியத்தால் அனைவரும் சொர்க்கம் சென்றுவிடவே அங்கு இருந்த மன்னனிடம், அரசனே, கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே அன்றி குறையாது. நீங்கள் உங்கள் புண்ணியங்களை தானம் செய்ததால் வந்த புண்ணியமும் உங்கள் கணக்கில் சேர்ந்திருப்பதால் நீங்களும் சொர்க்கம் சொல்லாம், வாருங்கள் என அழைத்துச் சென்றனர்.
தர்மம்: தர்மத்தினை உடலாலும், வாயாலும், மணத்தாலும், பணத்தாலும் செய்யலாம். ஆனால் ஆன்மாவிற்காக செய்யும் தர்மமே உனக்கு வரவு. மற்ற தர்மங்களெல்லாம் செலவுதான். நான் நிறைய பாவம் செய்திருக்கின்றேன், அதனால் தானதர்மங்கள் செய்கிறேன் என நினைக்கக்கூடாது. எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் ஓர் நிலையில் அவைகளை உணர்ந்து தன்னை தன் செயலை மாற்றிக் கொண்டுள்ளவர்கள் ஏராளம்.
அந்த பாவங்களுக்கு பிராயசித்தமாக தர்மங்களை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இதை இறையருள் ஏற்றுக்கொள்கின்றது. தவறு செய்தவன் உணர்ந்து திருந்தினால் அவனுக்கு மன்னிப்பு உண்டு. மீண்டும் அந்த தவறு செய்யாமலிருக்க வேண்டும். தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதால் தான் ஒருவனுக்கு பெருமை கிடைக்கிறது. அந்த பெருமை முற்றிலும் இறைவனுக்கே!
அளவில்லா பெருமை கொண்ட அந்த இறைவன், பாவம் செய்தவர்களை மன்னித்து அடைக்கலம் தந்ததாக புராண நிகழ்வுகள் நிறைய உள்ளது. செய்யக்கூடாது என மனதிற்கு தோன்றுவது பாவம். செய்வது நல்லது எனத் தோன்றுவது புண்ணியம்.
புண்ணியம் செய்வதனால் மனம் கஷ்டமின்றி சுகமாக இருக்க விரும்புகின்றது. மனம் சாந்தமடைகிறது. புண்ணியத்தினால் ஆனந்தமாக இருக்க விழையும் மனம், சிந்திப்பது செயல்படுவது பாவமான நிகழ்வுகளை. பாவம் பண்ணுவது தவறு என நினைத்தாலும் அவனின் கர்மபலன் அதை செய்யதூண்டுகிறது. மனதை ஓர்முகப்படுத்தி ஆசைகளை விட்டு ஒதுக்கி செயல்பட்டால் பாவம் செய்ய வாய்ப்பில்லை. பாவங்கள் ஆசையின் பிறப்பிடம்.
எந்த காரியங்களாயிருந்தாலும் ஆசையின்றி செய்ய விழையவேண்டும். நம் சுய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஆசையைவிட்டு தர்மத்திற்காக செய்தால் அதுவே புண்ணியம் தரும்.
மனதினால் உடம்பினால் நல்லகாரியங்களைச் செய்யவேண்டும். உன்னைப்பற்றிய கணக்கெடுப்பில் நீ எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளாய் என்று பார்ப்பதில்லை! என்னென்ன நல்ல காரியங்களும், தர்மங்களும் செய்திருக்கின்றாய் என்பதே உதவிக்கு வரும். செல்வமிருந்தும் தானம் செய்ய மனமில்லை என்றால் அடுத்த பிறவியில் பிச்சை எடுத்து வாழ்வான் என்கிறது பவிஷ்யபுராணம்.
இறை ஆன்மாக்களை சோதனை செய்வதற்காகவே எல்லாவற்றையும் அளிக்கின்றான். ஏதும் செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு நல்ல இதயங்களையும், செய்ய விரும்பாதவனுக்கு மற்றவைகளையும் வாரி வழங்குகின்றான்.
பெரியவர் ஒருவர் மேடையில் பேச தயாராகிக் கொண்டிருந்தார். அங்குவந்த பணக்காரர் அவரிடம், ஐயா, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டு ஒரு முறை சொல்லுங்கள் என்றார்.
பேச்சாளரும் இவர் பெரிய சமுத்திரம், அள்ள அள்ளக் குறையாத கடல் மாதிரி. பெரிய செல்வந்தர், சமுத்திரம்னா சமுத்திரம்தான், ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை. என்ற பாராட்டை கேட்டு மகிழ்ந்த பணக்காரர் அங்கிருந்து சென்றபின் பேச்சாளரின் சீடர் தயக்கத்துடன் "இந்த ஆள் பெரிய கஞ்சன். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவியது இல்லை, அவரை உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படி பொய்யாக பாராட்டலாமா?” எனக் கேட்டார்.
அதற்கு பேச்சாளர், அதைத்தான் நானும் சொன்னேன். புரியலையா? சமுத்திரம் ரெம்பவும் பெரிசு, ஏகப்பட்ட தண்ணீர் வெச்சிருக்கு, ஒருவாய் தண்ணீர் ஒருவருக்கும் குடிக்க பயன் படாது. எவருடைய தாகத்தையும் தணிக்காது. இந்த நபர் சமுத்திரம் மாதிரி எவ்வளவு பணம், பெருள் வைத்திருந்தாளும் ஒருவருக்கும் பயன் பட உதவமாட்டார். என்றுதான் கூறினேன் என்றார். எங்கும் நீர் பஞ்சம். கடலில் நீர். என்ன பலன்! செய்ய முடிந்தும் யாருக்கும் எதுவும் செய்யாமலிருப்பவனின் உடைமைகள் எதாவது ஓர் முறையில் அழிவை தேடும். தானதர்மங்களைச் செய்யாதவனின் அடுத்த தலைமுறையினர் அந்த சொத்துக்களை சரியான முறையில் அனுபவிப்பதுமில்லை.
தர்மங்களை இரண்டு வகையாக கொள்ளலாம். ஒன்று ஆன்மாவின் உயிர் தன்னுடைய தாய், தந்தை, குரு ஆகியவரின் ஆலோசனைகளை ஏற்று செய்வது என்பது சாதாரணவகை தர்மமாகும். அவர்கள் தமக்கு நல்லது சொல்வார்கள் என்றும், அவர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்றும் செயல்படுவது நமது கடமையாகும்.
ஆனால் இதை மீறி மாதா, பிதா, குரு ஆகியோர் விருப்பங்களை தெரிவித்தாலும், ஆலோசனை கூறினாலும், அதை ஏற்காமல் தாங்கள் மதிக்கும் தர்மத்தை நிலைநாட்ட செயல்படுவது மற்றொருவகை சிறப்பு தர்மமாகும்.
மகாபாரதத்தில் பரதன், தன் தந்தையின் உயிர் பிரிவதற்கு தாயே காரணம் என்றும், அவரின் மறைவுக்குப்பின் குலதர்மத்தின்படி அண்ணன் ஸ்ரீராமனே ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்று நினைத்து, தன்னை பட்டம் சூட்டிக்கொள்ள அனைவரும் கூறியும் கேளாது, மரபும், சாஸ்திர தர்மமும் காக்க, தன் தமையனின் பாதுகையை அரியாசனத்தில் வைத்தது சிறப்பான தர்மமாகும்.
கர்ணனிடமிருந்து கவச குண்டலங்களைப்பறிக்க முயற்சி நடப்பதை அவனின் தந்தையாகிய சூரிய பகவான் கூறியும் கேளாமல், யாசித்ததை தருவதே தர்மம் என கர்ணன் நினைத்து செயல் பட்டது சிறப்பாகும்.
தன் குரு எச்சரித்தும் கேளாமல் மகாபலி, வாமனருக்கு தானம் தந்ததும் சிறப்பு ஆகும். தர்மம் என நீங்கள் நினைத்தால், உள்மனது சொன்னால், அதன் பொருட்டு எதையும் மீறி தர்மம் செய்யலாம்.
பிச்சை ஒருவன் யாசித்தபின் அளிப்பது. சமூகத்தின் தேவையறிந்து யாரும் கேளாமல் தருவது பகிர்ந்தளித்தல் ஆகும். தன்னிடமிருப்பதை தேவைபடுபவர்களின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிதல் சிறப்பான தர்மம். தானம் செய்ததை சொல்லிப் புகழ்வதும், தானம் கொடுத்துவிட்டு நொந்து கொள்வதும், தானம் செய்வதைத் தவிர்ப்பதும் தர்மமாகாது. புகழ், புண்ணியத்திற்காக அன்றி இல்லாதவனுக்கு உதவுவதே இருப்பவனது கடமை என நினைத்தலே உண்மையான தர்மமாகும்.  
தர்மம் சொல்லிவிட்டோம். தர்மசங்கடம் என்றால்... இரண்டு அறமான நியாயங்கள் சமநிலையில் மோதும்போது தர்மத்திற்கு ஏற்படுவதே சங்கடம், தர்மசங்கடம். புறா தன்னை காப்பாற்ற சிபு மன்னனிடம் வேண்டுகோள் விடுத்தது. துரத்தி வந்த பருந்து, விலங்குகளும், பறவைகளும் ஒன்றை மற்ற ஒன்று உணவாக கொள்வது என்பது இயற்கையின் தர்மம். இன்று இயற்கை எனக்கு அளித்த உணவு இந்த புறா. அது எனது பிறப்புரிமை. எனக்கு கொடுத்துவிடுங்கள் என அறத்தைக் கூறியது.
என்னை பருந்துக்கு இரையாக்கிவிடாதீர். உங்களை அடைக்கலம் தேடி வந்தேன், என்னைக் காப்பதே சிறந்த அறம் என புறாவும் தர்மம் கூறியது. இந்த இரண்டு அறத்திற்கிடையே சிபியின் தர்மம் சங்கடமான நிலையை அடைந்தது. யாருக்கு சாதகமாக கூறினாலும் ஒருவருக்கு அறம் தவறாகிவிடும்.
உயிர்வாழ வேண்டும் என்பது அனைவரின் அவா. ஆசை. தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என புறா நினைப்பதும் சரியே. புறா காப்பற்றப்பட்டு, அதே சமயம் பருந்தும் பசியாறுதல் சிறப்பு. உலகின் உயர்ந்த அறமானது உண்மையும், கருணையும் ஆகும். எனவே புறாவிற்கு பதிலாக தன் தொடையின் பகுதியை தரமுன்வந்து தர்மங்களை நிலைநாட்ட முனைப்பட்டவர் சிபி சக்ரவர்த்தி என வரலாறு பகர்கின்றது.
சிபி போன்று நீங்கள் செயல்பட வேண்டாம். அதற்காக தர்ம சிந்தனைகள் இன்றி செயல்பட வேண்டாம். பிற உயிர்கள் படும் துன்பங்களை உணர்ந்தால், நேயம் கொண்டு செயல்படுங்கள் என்பதே தர்மத்தின் நோக்கம்.
கர்ணணைப் போல் தான தர்மங்கள் செய்து தானும் கொடையாளி என்றபெயரை, புகழை அடைய நினைத்த துரியோதனன், தன் அரண்மனை வாயிலில் “இங்கு யார் வந்து என்ன கேட்டாலும், ‘இல்லை’ எனச் சொல்லாமல் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தான். அவன் உளமார தர்மம் செய்ய முன்வராமல் வெறும் பெயரை அடையவே இவ்வாறு செய்கிறான், என்பதை அவனுக்கு உணர்த்த கிருஷ்ணர் எண்ணங் கொண்டார்.
நல்ல மழைக்காலம் அது. அப்போது அந்தணர் வேடமேற்று சென்ற அவரை வரவேற்ற துரியோதனனிடம், தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அப்போது உணவு தயாரிப்பதற்காக காய்ந்த விறகுகள் 100 வண்டிகள் தந்து உதவ வேண்டும் எனக் கேட்டார். கேட்ட துரியோதனன் பேய்மழையில் எப்படி காய்ந்த விறகுகள் அதுவும் 100 வண்டிகள் எனச் சலித்துக் கொண்டான்.
அவ்வளவு கிடைக்குமா என விசாரித்து விறகு இல்லை என்று கூற அந்தனர் வாயிலில் உள்ள தகவல் பலகையை சுட்டிக் காண்பித்து அதை அகற்றிவிட வேண்டினார். இருப்பதைத்தானே கொடுக்கமுடியும், இல்லாததைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும், இந்த சூழலில் காய்ந்த விறகை யாரேனும் கொடுத்தால் பலகையை அகற்றி விடுகிறேன் என்றான் துரியோதனன்.
அடுத்து கர்ணனின் அரண்மனைக்கு சென்ற அந்தணருக்கு அங்கும் விறகு இல்லை எனதெரியவந்தது. அப்போது கர்ணன் அந்தனரை பக்கத்தில் உள்ள ஓர் வீட்டிற்கு சென்று பேச அழைத்தான். சிறிது வேளையில் அந்தணர் கேட்ட 100 வண்டிகள் நிறைய காய்ந்த விறகுகள் தயாராக இருந்தன.
எங்குமே காய்ந்த விறகு இல்லா நிலையில் கர்ணா உன்னால் எப்படி முடிந்தது இது என அந்தணர் கேட்க, நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான். அங்கிருந்த கர்ணனின் அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தேக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் விறகாகி இருந்தன.
அந்த 100 விறகு வண்டிகளுடன் துரியோதனின் அரண்மனைக்குச் சென்று சந்தித்தார் அந்தணர், வெட்கத்தால் தலைகுணிந்த துரியோதனன் உடன் தகவல் பலகையை நீக்கினான். போட்டி, பொறாமையின்றி உள்ளார்ந்த நினைவுகளுடன் தர்மம் செய்தல் சிறப்பாகும். புகழ் வேண்டி செய்த தர்மங்கள் பலன் தராது-குருஸ்ரீ பகோரா. 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880224
All
26880224
Your IP: 52.205.218.160
2024-03-19 13:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்