gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-7.எவர் தவறு !

Written by

எவர் தவறு !  


எத்தனையோ எதிர் பார்ப்புக்களிடையே இனையும் ஆணும் பெண்ணும் சிறுது காலத்திலேயே, தங்களுக்குள்ளே அபிப்ராயப் பேதங்கள் ஏற்பட்டு உணர்வுகளும் தேவைகளும் விருப்பங்களும் நிறைவேறா நிராசையால்  மனம் குமுறி மணமுறிவு பெறுகின்றனர். அல்லது பிரிந்து வாழ்கின்றனர்.

அவ்வாறு உள்ள ஆணோ, பெண்ணோ மீதி இருக்கும் நாளில் அவர்கள் விருப்பங்கள் உணர்வின் தேவைகள் பூர்த்தியாக ஓர் சந்தர்ப்பம் கிடைத்து அதை நாடினால் அது தவறு அன்று! எல்லா உயிர் ஆன்மாக்களும் சந்தோஷத்தின் வாயிலில் இருக்க வேண்டும்! சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இது இயற்கை நியதி.
அந்த உணர்வு நம் அனைவரிடமும் உள்ளது. எனவேதான் பெண் விடுதலை, சம உரிமை பேசும் இந்த காலகட்டத்தில் கணவன் இறந்ததும் மறுமணம் நடப்பதை நாம் ஆதரிக்கின்றோம். காலம் குறுகியது. வாழ்வில் அந்த உயிர்களும் சந்தோஷம் காணவேண்டும் என்ற அடிப்படையில் நாம் இருக்கின்றோம்.
ஆன்மாக்களை இறைவன் எப்போதும் தண்டித்துக் கொண்டிருப்பது இல்லை. இயற்கை நியதியில் ஆண் பெண் உறவுகள் மேலானவை. வாழ்வுபயணத்தில் சந்தோஷத்தின் சாரங்கள் அவைகள்.
இயற்கைக்கு மாறாக, ஆண் பெண் உறவுக்கு எதிராக ஈடுபடும் ஓரினச்சேர்க்கையை சிலர் ஏற்றுக்கொள்வது எவ்வளவு வக்ரமானது! அது இயற்கையை அவமதிப்பதாகும். முற்றிலும் இயற்கையின் தன்மைக்கு எதிரானது. அவர்களின் பிறப்பை கேவலப் படுத்துகின்றனர். எப்படியிருந்தாலும் அவர்களின் ஆன்மாவின் முடிவுகள் கர்ம பலன்களுக்குட்பட்ட இயற்கையை நோக்கியே!
பெண்பாலினம் உலகின் உயிர்களுக்கு உருவம் கொடுக்கும், வளர்க்கும் சிருஷ்டிக்கு ஆதரமானது. எனவே தாய்மை போற்றப் படுகிறது. தன்னலமற்ற, எதையும் எதிர்பாராத, வரைமுறையற்ற பாசம் கொண்டுள்ள தாய்மை சிறப்பிக்கப் படுகின்றது. குடும்பங்களின் ஒற்றுமைக்கு, உறவுகளின் நேசப்பின்னனிக்குப் பெரிதும் உதவுவது. போற்றிப் புகழப்படுவது அது.
இப்படி சிறப்புக்களையுடைய பெண்ணினத்திற்கு ஆண் உறவு தேவையாகிறது. அந்த தாம்பாத்திய உறவில் விருப்பு, வெறுப்பு இரண்டும் கலந்த வாழ்க்கைக்கு நாள் நட்சத்திரம் பெருத்தம் எல்லாம் பார்த்து இனைவதும் உண்டு. மனங்கள் விரும்பி இனைவதும் உண்டு.
காலத்தின் கட்டாய சூழலில் நிச்சயித்த மணவாழ்க்கையும் சரி, விரும்பிய காதல் மணவாழ்க்கையும் சரி பல சிக்கல்களை சந்திக்கின்றன. சிக்கல்களை தீர்க்க முடியா நிலையில் வாழ்க்கை கசக்கின்றது. ஒருவர்மீது ஒருவர் குறைகாண்கின்றனர். மனங்கள் சலிப்படைகின்றன. வெறுப்புகள் வளர்கின்றது. சந்தோஷம் விலகுகின்றது. மன அமைதி கிட்டுவதில்லை. உறக்கமில்லா இரவுகள், தொடர் மன உலைச்சல்கள். உடல்நிலை பாதிப்பு. இருபாலருக்கும் விரக்தி. ஆர்வமில்லா செயல்பாடுகள். முடிவில் பற்றற்ற வாழ்வாகிறது.
அப்போது உலகவழ்வியலில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் துறக்கின்றனர். ஆன்மிகத்திலும் இது நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வுகள் இறை மேல்கொண்ட பக்தி காரணமாக நடைபெற்றுள்ளது. ஆர்யாம்பிகை தன் மகன் ஆதிசங்கரரை துறக்கின்றாள். வள்ளாரின் மனைவி அக்கா உண்ணமுலையின் மகள் தனக்கோடி, ‘உங்கள் பக்திவழி செல்லுங்கள், நான் உங்களைத் தொடருவேன்’ என்று அவரைத் துறந்தாள். உயர்ஜாதி செருக்கை விடாத தன் மனைவி தஞ்சமாளைவிட்டு, ‘ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ எனப் பிரிந்து சென்றார் ராமானுஜர். ஸ்ரீராகவேந்தர் என்ற வேங்கடநாதர் தனது மனைவி சரஸ்வதி, மகன் லட்சுமி நாராயணனைத் துறந்தார்.
ஏ மானிடமே! உன் விருப்பத்திற்கு ஆண் அல்லது பெண் ஆக பிறக்க வில்லை. நீ இறப்பதும் உன் எண்ணத்திற்கு இல்லை. எதுவும் உன் முடிவில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் வாழ இயற்கை தோற்றுவித்தது இன்ப துன்பங்களுடன் கூடிய பாலின வாழ்க்கை. அதில் கவர்ச்சியுண்டு. துன்பமிருந்தாலும் தொடர்ந்து நாடும் தன்மையுடையது. தொடர்ச்சியான அன்பு, அரவணைப்பு, பொருப்பு மற்றும் கடமைகளை கொண்டது வாழ்க்கை.
குறைகள் சிறியனவாகவும் வேட்கை பெரியதாகவும் தெரியும். உடல் வேட்கைதீர ஒருவர்மீது ஒருவர் மட்டற்ற அன்பு கொள்வர். அங்கு சச்சரவுகளில்லை. இன்பம் அதிகமாக இருந்து, துன்பம்வரின் பாதிப்பு குறைவாக உணரப்படும். நிறைந்த இன்பத்தின் நினைவில் துன்பத்தின் தோற்றம், துயரம் அதிகமாக தெரியாது. துன்பங்களை சந்திக்க துணிவு அடைவர். துன்பம் மிகுதியாக இருந்தால் மன உறுதியுடன் செயல்பட்டால் அடுத்து இன்பம் என்ற நிலை ஆறுதல் அளிக்கும். துன்பத்தின் தீவிரம் மன அளவில் கட்டுப் படுத்தப்பட்டு குறைத்து உணரப்படும்.
ஆரம்ப நிலையில் அந்தி மயக்கம் அனைவருக்கும் பொது. நிலைகள் மாறுபடும்போது குறைகளும், வேறுபாடுகளும் அதிகரிக்கின்றன. குறைகளிலிருந்தும், வேறுபாடுகளிலிருந்தும் மனநிலையை மாற்ற இயற்கை செய்த வினோதம்தான் ‘தாய்மை’, ‘கரு’.
கரு உற்பத்தியில் தங்களது ஜீவன், வாரிசு, ஓர்மனித ஆன்மா ஜனனம் என்ற எண்ணங்கள், இருபாலரிடையே தோன்றிய  அபிப்ராய பேதங்களை மாற்றிவிடுகிறது. மறந்து மன்னித்து விடுகின்றது. அன்பு அதிகமாகி மீண்டும் செழிப்புடன் தழைக்கின்றது. ஒருவர்மேலிருந்த வெறுப்புகளை மாற்றி அக்கறை கொள்ளச் செய்கின்றது. எல்லா ஆன்மாவிற்கும் ஜனனத்தில் ஓர் அபரிதமான சந்தோஷம் தோன்றும்.
இருவரின் எண்ணங்கள் பொதுவாகின்றது. இணைப்பில் உறுவான ஜனனத்தின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டு அதற்காக முனைப்புடன் தங்கள் உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். சிலருக்கு பொருளாதாரம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
உடலின் உஷ்ண சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி பெற அவசியமானது தாம்பத்திய உறவு. அது அடுத்தடுத்து ஜனனத்திற்கு படிகள் இட பொருளாதார சுமைகூடி பல இன்னல்களைத்தர குடும்பம் சிக்கல் சூழ்ந்ததாகிறது. எவ்வளவு சிக்கல்களிருந்தாலும், இன்னல்கள் நிறைந்திருந்தாலும், வாழ்வில் உறவுமுறையில் ஆறுதலுக்கு இலவசமாக கிடைப்பது தாம்பத்திய உறவு ஒன்றே! மனக்கவலைகளால், சூழலால் ஏற்பட்ட சலிப்புகளால் உள்ளம் நைந்து போனசமயம் உடலுறவு மறுக்க வாய்ப்புள்ள நிலையில் குழப்பங்கள் தோன்றும்.
போதிய பொருளாதாரம் கிட்டாதநிலையில் உடல் உழைப்பை அதிகம் செலவிட்டு தன் பொருளாதாரம் சிறப்படைய உழைக்கும் ஓர் உழைப்பாளிக்கு ஆண் பெண் இருபாலருக்கும் அந்த உழைப்பின் அசதி, களைப்பு, நீங்க நல்ல நிம்மதியான உறக்கத்திற்கு தேவையான மருந்து உறவுமட்டுமே.
அது புத்துணர்ச்சியுடன் காலை தனது பணிகளை சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும். கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் போராட, முன்னேற்றம் அடைய உறவுதான் உறுதுணையாக இருக்கும்.
அந்த உறவு ஒற்றுமையுடன் செயல்படவில்லை எனில் வாழ்வில் போராட்டம் அதிகம். உறவுதான் உணர்ச்சிகளின் கழிப்பிடம். அஃதில்லை எனில் சொல்லவொன ஓர் வெறுப்பு தோன்றும். செயல்களில் கவனமின்மை, செயல் வேகமின்மை தோன்றும். அது ஒரு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடியது.
நீண்ட நாள் திருமணமின்றியும், உறவுகள் கொள்ளா ஓர் ஆன்மாவின் பார்வையில் ஓர் ஏக்கம் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை பார்க்கலாம். பார்வையில் ஓர் கலக்கம் இருக்கும். தெளிவு இருக்காது. செயல்களில் சுறுசுறுப்பின்மை தொய்வு நிறைந்து இருக்கும், எதிலும் கவனங்கள் நிலைபெறாத நாட்களைக் கொண்ட வாழ்க்கையாகிவிடும். அந்த ஆன்மாக்களை ‘கேந்தி’ பிடித்து அலைகின்றது என்பர்.
இந்தசூழலுக்கு ஓர் ஆன்மா தள்ளப்படும் நிலை வேதனையானது. வாழ்வியலில் இருபாலரும் ஒருவரிடமிருந்து மற்றவர் கட்டுப்பாடின்றி விரும்பும்போது தன் உணர்ச்சிகளை தெரிவித்து புரிந்து செயல்படவேண்டிதான் மணவாழ்வியல் நடைமுறை தோன்றியது. அதில் குளறுபடி நடந்தால் அச்சாணி கழன்ற வண்டி போலாகிவிடும் வாழ்க்கை.
மனித மனம் ஓர் குரங்கு. என்பது ஆன்றோர் வாக்கு. அந்தமனம் மண வாழ்க்கையில் தன் உணர்ச்சிகளுக்கு கிடைக்காத சாந்தியை கிடைக்குமிடம் தேடிப் போகின்றது. நாடிவருவதை ஏற்றுக் கொண்டு அமைதியடைகிறது. இதில் ஏது தவறு. இது எவர் தவறு! மனங்கள் குரங்கின் தாவும் நிலையை அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, ஆண் என்றால் பெண்ணும், பெண் என்றால் ஆணும் ஆகும்.
அதைவிடுத்து அடுத்தவர் மேல் குறைப்பட்டு நன்மையில்லை. ஒருவருக்கொருவர் துரோகம் எனச் சொல்லலாம். ஆனால் ஒருவர் உணர்ச்சிகளை மற்றவர் தீர்த்து வைக்காமல், தனது மணவாழ் கடைமைகளை ஏதோ காரணங்களுக்காக சரிவர செய்யாமல் விட்டுவிட்டு பின்னர் தன்மேல் தவறில்லை, மற்றவர் செய்ததுதான் தவறு, கொடுமை, துரோகம் என சொற்களால் சொல்லி என்ன பயன்.
பூனைக்கு பால் பிடித்தமான ஒன்று. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படித் தேடி அதன் பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூணை என்ற பட்டம் பெற்றுவிடுகிறது. பூனைக்கு பசி எடுப்பது தவறா! இது யார் தவறு!.
திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- அவை மன்னிக்கப்படலாம், தவறுகளை திருத்த சந்தர்ப்பங்கள் உண்டு, மீண்டும் தவறு செய்யாதிருக்க!
திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்- மன்னிப்பு இல்லை. அதற்கான தண்டனைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும்.குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879274
All
26879274
Your IP: 3.235.42.157
2024-03-19 08:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்