gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-5.நிஜம்!

Written by

நிஜம்!                                                                                                                

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான். திரும்பத் திரும்ப ஒன்றை சொல்வதாலும், கேட்பதாலும், குறிப்பிட ஒன்றை நிஜம் என நம்புவதாக தொடர்ந்து நினைத்தாலும், அதை நம் மனம், நம் உடல், நம் மூளை ஏற்றுக் கொள்ளும். அது அப்படியே நம்முள் பதிந்துவிடும். அதன் பின் அதில் மாற்றங்கள் கொண்டுவர, உண்மைகளை ஆராய்ந்து அந்த மனதிற்கு தெளிவாக புரிய வைத்தால் மட்டும்தான் அது அதை தவறு என ஏற்றுக்கொள்ளும். ஆகவே ஒன்றை நம்புமுன் நிஜம் என முடிவு எடுக்குமுன் தீவிரமாக ஆலோசனை செய்து அதன் நம்பகத் தன்மையை புரிந்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் இனி உங்கள் செயல்பாட்டிற்கும் சிறந்த செயல் வழிமுறை!
“வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்லமுடியாது. நீ இப்பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை, நீ பூவுலகைவிட்டு செல்லும்போது, ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை, இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.”
இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்பது உண்மை. அத்துனைபேரும் நம்பினாலும் பார்த்தவரில்லை. ஆனால் உணர்ந்தவர்கள் உள்ளனர். பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள். ஆனால் அவைகள் ஒன்றினுள் இருப்பது நமக்குத் தெரியும். தெரிந்த ஒன்றினுள் தெரியாத ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். அதுபோலவே இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். பாலில் ஒன்றிற்குள் ஒன்று இருப்பதைப்போலவே பாவத்திற்குள்ளும் பலன்கள் நிறைந்திருக்கின்றன. செயல் பாவத்திற்கேற்ப பலன் ஒருநாள் வந்துசேரும் என்பதும் நிஜம்.
ஓர் உடலின் அழகு அழியக்கூடியது, செல்வம் செல்லக்கூடியது, தங்கம் தங்காதது, தங்கக் கூடியது நல்ல வினைப் பயன்கள் மட்டுமே! இதுவும் நிஜம். வாழ்வில் இன்பமும், துன்பமும் இரண்டுற கலந்தது. எந்த ஓரு ஆன்மாவும் இறுதிவரை இன்பங்களிலேயே திளைத்தாகவே, துன்பத்திலேயே துடித்ததாகவோ இல்லை. துன்பத்தின் முடிவில் இன்பம் காத்திருக்கும். இன்பத்தின் முடிவில் துன்பம் நிச்சயம் நிலை கொண்டிருக்கும். இதுவும் நிஜம். உன்னதமான நிகழ்வுகள் ஒளி, இருள் என்ற இரண்டிலும் நடைபெறுகின்றது. மண்ணில் இருட்டில் மறைந்த விதை முளைத்து செடியாக, மரமாக ஒளியில் வளர்கிறது. இருளில் வேர்பரப்பி வெளியில் பூத்து, கனிந்து தன் கடமைதனை செய்கிறது தாவரங்கள். ஆன்மாவின் உயிர் கரு இருளில் உதித்துதான் வெளிச்சத்துக்கு வருகின்றது. ஒரு ஜீவ சக்தியான ஆன்மாவிற்கு இருளும் ஒளியும் நிஜதேவையான ஒன்று.
சீதம்-நீர், உஷ்ணம்-அக்னி இனைந்து உலகை இயக்குகின்றது. இந்த கலவையில்தான் உயிர்  இனங்கள் உருப்பெற்று வளர்கிறது. இந்த இரண்டின் மாறுபட்ட கலவையே நமக்கு ஏற்படும் பருவகால மாற்றங்கள். கர்பத்தின் நீரில் விந்துவின் சேர்க்கை என்பது இவற்றின் சங்கமம். ஆணும் பெண்ணும் இனைந்து தங்களை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது சத்தியத்தின் கட்டாயம். இந்த உண்மை மகிழ்வுக்கு ஆதாரம். சீதமும் உஷ்ணமும் அனைத்து தாவரங்களிலும் கலந்திருக்கின்றது. பசுவின் பால்-நீர், பாலிலிருந்து உருவாகும் நெய்- உஷ்ணம். இரண்டும் சேர்ந்து நம்மில் தட்பவெட்பத்தை சீராக வைக்க உதவுகிறது. நல்லெண்ணங்கள் தோன்ற இவைகள் ஒத்துழைக்கின்றன என்பது மறுக்கமுடியாத நிஜம், உண்மை.
இந்த பெருமையை உணர்ந்து மாறுபட்ட சூழல், இயல்புகளில் பிறந்தவர்களான ஆணும்(தணல்-உஷ்ணம்) பெண்ணும்(நீர்-நெய்க்குடம்) இனைந்தால் அருமையான வாழ்வை சுவைத்து ஆனந்த சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்கிறது சாஸ்திரங்கள்...குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880579
All
26880579
Your IP: 54.224.52.210
2024-03-19 15:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்