gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-4.அதிர்வுஉணர்வுகள்!

Written by

அதிர்வுஉணர்வுகள்!                                                                                                  

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நம்மை சுற்றியுள்ள அண்டைவெளியில் ஏற்படும் அதிர்வலைகளே காரணம்! அவை உதவியும் புரிகின்றது. இந்த அலைகள்தான் ஒலி சப்தங்களை நம்மை கேட்க உதவி புரிகின்றது. ஒளியை, செயல்களைப் பார்க்க உதவுகின்றது.
இந்த அதிர்வலைகள் ஓர் ஊடகம். நம் சாதனைகள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இதன் ஒத்துழைப்பால்தான். ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான இந்த அதிர்வலைகளை ஒருங்கினைத்து நாம் பல செயல்கள் புரியலாம்.
புவியில் பல நிகழ்வுகள் 108 என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.                          

ஆன்மா

பிராயாணம் 108 கட்டங்கள்

உணர்வுகள்

கால அளவு 108 (கடந்த-36, நிகழ்-36, எதிர்-36)

உடல்

மர்மஸ்தானங்கள் 108

உபநிஷத்துக்கள்

108 கட்டங்கள்

சூரியன் விட்டம்

புவியைப்போல் 108 மடங்கு

வேதங்கள்

உட்பிரிவுகள் 108 (ரிக்-10, யஜுர்-50, சாமம்-16, அதர்வண-32

ஸ்ரீ எந்திரம்

மனித உடலை வடிக்கும் புள்ளிகள் 108 (54x2-ஆண்,பெண்)


நம்மை சுற்றியுள்ள உணர்வுகளின் கால அளவு-108 உணர்வுகளில் கடந்தகாலம்-36, நிகழ்காலம்-36, எதிர்காலம்-36 என்ற விகிதத்தில் நிறைந்துள்ளது. இதிலிருந்துதான் நாம் கடந்த, நிகழ், எதிர் கால உணர்வுகளை அதிர்வு அலைகள் மூலம் புரிந்து கொள்கின்றோம்.
இறந்த, நிகழ், எதிர் கால அதிர்வுகள் நம்மை சுற்றியுள்ளன என்பதற்கு சான்றாக கோவில்களில் ஏற்படும் அதிர்வுகள் அங்கு செல்லும் அன்பர்களுக்கு கிடைக்கின்றது. அங்கு செல்பவர்களுக்கு எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்றவிகிதத்தில் ராஜகோபுரங்கள், மசூதி கோபுரங்கள், சர்ச் கோபுரங்கள் அமைக்கப் படுகின்றன. அடிப்பகுதி அகன்று அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு மேல்பகுதி குவிந்து இருப்பதாலும், கலசங்கள் உதவியோடும் அதிர்வுகளை பரப்பியும், பெற்றுக்கொண்டும் இருக்கின்றது.
ஒருவர் எல்லாவகை பிரச்சனைகளோடு போய், அந்த சூழலில் ஒன்றியிருந்து மனம் சலனமின்றி இருந்தால், அவர்தம் பிரச்சனைக்கு தீர்வாக தெளிவான ஓர் சிந்தனை, எண்ணங்கள் தோன்றும். அவர் பிரச்சனைகள் பற்றி அங்கே நினைவு கொள்ளும்போது எழுகின்ற அதிர்வுகள் அங்கே பரவி, எப்போதோ தோன்றி முன்பே பரவிக்கிடக்கும் தீர்வலைகளிலிருந்து தெரிவு செய்து நம் தேவைக்கு உரியன நம்மை வந்து அடைகின்றது. நம் மனம் அமைதி கொண்டு தீர்வுகண்ட நிலையில் நிம்மதியடைந்து வெளியில் வந்து செயல்பட்டு உண்மையான தீர்வுகளை அடைந்து சந்தோஷம் அடைகின்றோம்.
உடலின் ஆன்மா அந்தந்த சூழலில் லயித்துவிடுவதால் நம் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைத்து விடுகின்றது.
பொது உணர்வு அலை: கடந்த கால நிகழ்வுகளினால் நம்மை சுற்றியுள்ள கடந்த கால உணர்வுகளால் ஏற்படும் தாக்கம், அதன் சாதக பலன்களை புரிந்து கொண்டு நிகழ்கால, எதிர்கால, சிந்தனைகளில் நாம் மூழ்கினால் அதனால் நம் வெற்றி பாதிக்கும். இன்பம் மறையும், துன்பம் தோன்றும். நிம்மதி அழியும்.
மனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.  நிகழ் காலத்தை வீணடிக்காதீர்கள். அவர்களுக்கு உண்மையை உணர்த்துங்கள்.
எனவே இது போன்று கடந்த, நிகழ் கால உணர்வுகளால் பாதிக்கப்பட்ட உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக, நண்பர்களுக்காக, உற்றார் உறவினருக்காக, உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக அவர்களால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்ற நிலையிலும் கூட வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆத்மா நலமடைய வேண்டும், அந்த துக்கத்திலிருந்து விடுபடவேண்டும், என்று எந்த சுயநலமும் இன்றி நீங்கள் நினைத்தால் அந்த நல்ல எண்ணம் கொண்ட அதிர்வலைகள் புவியில் கலந்து அவர்களைச் சேரும்,
ஆலயத்தின் மணி ஒலியின் நாதம் வெகுதூரத்திற்கு கேட்கும்போது அதன் இடைப்பகுதியில் உள்ள உள்ளங்களில் ஆன்மீக சிந்தனை எழுந்து, இது பூஜை நடக்கும் நேரம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒலியலைகளைப் போலவே நினைவலைகளும் ஒருமித்த மனதுடையோரை ஒன்று சேர ஈர்க்கும் வல்லமையுடையது.
இதே போன்று பலருடைய நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய அதிர்வலையாக மாறி யார் யார் நலமடைய வேண்டும் என நினைக்கின்றோமோ அவர்களைச் சென்றடையும். அந்த உணர்வலைகள் அவர்களுக்கு உணர்வு பூர்வமான ஆறுதலைத் தரும். நலத்தைத் தரும்.
இதன் காரணமாகத்தான் பல சாதனைப் புரிந்த, நாட்டின் நலனுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் உடல் நலமின்றி இருக்கும் போது அவர் சாதனைகளைப் புரிந்து கொண்டவர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனை செய்வதை பார்த்துள்ளோம், கேட்டுள்ளோம்.
ஒரு நல்ல எண்ணம், எண்ண அதிர்வுகளால், யாரோ ஒருவர் நலமடைகிறார், நலம் அடையமுடியும் என்றால், இந்த செயல் உங்களுக்கு, உங்களை போன்று சுயநலன் கருதாமல் செய்தோருக்கும் ஓர் நாள் உதவும். பலரின் பிரார்த்தனை அதிர்வுகளுக்குப்பின் நலமடைந்தார் என்ற செய்தி பிரார்த்தனை செய்த அனைவரின் உள்ளம் உவகையில் நிரம்ப வழிவகுக்கும்.
இந்த உவகை உடல் முழுவதும் பரவி உங்கள் உடலின் செல்களுக்கு ஓர் சந்தோஷத்தை அளித்து உற்சாகப் படுத்தும். இது உங்கள் உடல் தொய்வில்லாமல், உள்ளம் சோர்வில்லாமல் செயல்பட உதவும்.
ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளையாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான். தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா.. நீ என் பக்தன்.. எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன்.. உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.
உங்கள் வெற்றிக்குரிய சீரிய சிந்தனை கிடைக்க இது ஒரு துளியாகும். பலதுளிகள் சேர்ந்தால்..... உங்களை, உங்களின் செல்களை தொடர்ந்து தூண்டிவிட்டால் நீங்கள் முற்றிலும் ஓர் சந்தோஷமான மனிதனாக இருக்கும்போது, எல்லா நிலைகளிலும் தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு, வெற்றியின் இரகசியத்தை அறிந்த வெற்றி மனிதராக எப்போதும் திகழ்வீர்கள்!
பிறவிகள்: நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், என்பதைப் போன்றே இப்பிறவி, முற்பிறவி, இனியும் பிறவி எனவுண்டு. இதில் நிகழ்காலத்தில் நம் உணர்வில் நம்மை சுற்றியுள்ள அதிர்வு அலைகளின் வாயிலாக நினைவில் உணர்கின்றோம்.
ஞானி ஒருவர் தனது உரையின் போது ஓர் நகைச்சுவை சொல்ல அனைவரும் சிரித்தனர். இடையிடையே அதே நகைச்சுவையைக்கூற சிரிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக சொன்னபோது யாரிடமிருந்தும் சிரிப்பு வரவில்லை. இதை உணர்ந்த ஞானி சொன்னார், அன்பர்களே! உங்களை மகிழ்வூட்டும் ஓர் சுவையான செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்களால் சிரிக்க முடியவில்லை. ஆனால் என்றோ எங்கோ நடந்த துயர சம்பவங்களை அடிக்கடி நினைத்து நினைத்து வேதனைப் படுகின்றீர்கள்! அந்த ஒரே விஷயத்தை பல காலமாக நினைவில் கொண்டு வன்மம் பாரட்டுவது சரியா! அதனால் உங்கள் மனமும் எண்ணங்களும் நிலை மாறுவதைப் புரிந்துகொள்ளுங்கள். துன்பங்களை துயரங்களை விட்டுவிட பழகிக்கொள்ளுங்கள் என்றார்.
இப்பிறவியில், கடந்த காலவாழ்வு, அதைபற்றிய எண்ணங்கள், அதிர்வுகளைப் பற்றி நாம் அதிகம் சிந்தித்து நமது நிகழ்கால நேரங்களை வீணடித்துக் கொண்டிருந்தால் அதன் தாக்கம் நம் நிகழ்கால செயல்களுக்கு முட்டுக்கட்டை போலாகும். எனவே அந்த எண்ணங்களை நீக்கி இனி என்ன செய்யலாம், செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். கடந்தகாலத் துயரத்திலும், வருங்காலப் பயத்திலும் நிகழ்காலத்தை இழந்துவிடாதீர்கள்.
சென்ற பிறவியில் நீங்கள் என்னவாயிருந்தால் என்ன? என்ன செய்திருந்தால் என்ன? நன்மை செய்திருந்தோமா? தீமைகள் புரிந்திருந்தோமா? என ஆராய்வதும், தெரிந்து கொள்ள முயலுவதும் பொன்னான நிகழ்காலத்தை விரையம் செய்வது ஆகும். அதை தெரிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்? இன்று நாம் அதிக அன்பு வைத்திருப்பவர் அப்பிறவியில் நம்மை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கியவராக இருந்திருக்ககூடும்.
இப்போது இந்த உண்மை தெரியவந்தால் அது சுடும். நாம் அவர்மீது வைத்துள்ள அன்பை, அந்த உண்மையால் மனதில் ஏற்படும் மாற்றங்கள், கசப்புகள், வாழ்வின் போக்கை திசை மாற்றக்கூடியதாக இருவருக்கும் இருக்கும்.  ஓர் நல்ல உறவு திசை மாறுவது தேவைதானா? தேவையற்றது.
துன்பத்தில் துவழும்போது முன்பு என்ன செய்தோமோ? என கடந்தகால முற்பிறவி உண்மைகளை ஆராயாமல் அந்த நிமிடத்தில் அந்த நிகழ்வில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என மன உறுதியுடன் நடந்து கொள்வது சிறப்பு. கடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.
அந்த எண்ணங்களைத் தவிர்த்திடுங்கள். அந்த சூழலில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். தேவையற்ற நினைவுகள் இயல்பாகவே அழிக்கப் படுகின்றது. கடந்தகால, முற்பிறவி நினைவு வேண்டியதில்லை அதில் நீங்கள் என்ன நல்லது செய்திருந்தாலும். இப்பிறவியில் சூழ்நிலைக்கேற்ப அது முற்பிறவியின் பாதிப்பாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும்.
உனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.
ஒர் ஆன்மா அது இதுகாறும் பற்றியிருந்த உடலைவிட்டு செல்லும் மரணநேரத்தில், அந்த ஜீவன் பிராணனைப் பற்றி சரீரத்தை விட்டு செல்கின்றது. நமது உடம்பில் உள்ள 9 துவாரங்களில் ஒன்றின் வழியாகத்தான் அது வெளியேறுகிறது.
அது வெளியேறும் வழியைப் பொறுத்தே அந்த ஜீவ ஆத்மாவின் மறுபிறவி அமையும் என்கிறது சாஸ்திரம். யோகிகளுக்கு தலையில் 10வது ஓட்டை ஏற்பட்டு அதன் வழி பிராணன் செல்லும். ஆனால் ஞானிகளுக்கு இந்த 10ஓட்டைகளின் வழிசெல்லாது பிராணன் அந்த ஆத்மாவிலேயே ஒடுங்கிவிடும் என்பதால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038024
All
27038024
Your IP: 18.117.91.153
2024-04-19 03:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்