gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-3.கர்மம்! காரணம்!

Written by

கர்மம்! காரணம்!                                                                                                          

உலகின் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை! என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு! பின்னாலில் அது சம்பந்தமாக நிகழ்வுகள் நடைபெரும் போது நாம் இதற்காகத்தான் அன்று அப்படி நடந்ததோ என ஆச்சரியப் படுகின்றோம். இந்த காரண காரியங்கள் அந்த நிகழ்வுகள் சம்பந்தப் பட்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். புரிந்து கொள்ள முடியும். எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக நமது புராணங்களில் நிகழ்வுகள் நிறைய உண்டு.
இராவணன் மகன் இந்திரஜித் கடுமையான தவங்கள் பல செய்து பெற்ற வரங்களில் முக்கியமானது,  “தன்னை வெல்பவன் உணவு, இரவு உறக்கமின்றி 14 வருடங்கள் இருக்க வேண்டும் என்பதாகும்.” ஒருவன் 14 வருடங்கள் உணவு, உறக்கமின்மை என்பது சாத்தியமில்லை என்பதால் இந்திரஜித்திற்கு மரணம் என்பது இல்லை என நம்பப்பட்டது. ஆனால் நம்பமுடியாத அளவில் இலட்சுமணன் வீரசாகசங்கள் புரிந்து இந்திரஜித்தை கொன்றான். இதன் காரண காரியங்களை தெரிந்து கொள்வீர்கள்.
இந்திரஜித்தின் தவவலிமைதனை உணர்ந்த வீபீடணன் இதைப்பற்றி இராமரிடம் கூற அவர் தன் தம்பியிடம் கேட்டபோது, ‘இராம அண்ணலையும், அண்ணியையும் காக்க இரவில் உறங்குவதில்லை ! மேலும் காட்டிற்கு அண்ணலுடன் புறப்படும்போது தாய் சுபத்திரை கூறியபடி அண்ணலும், அண்ணியும் உணவு அருந்தியபின் உண்ண இருந்தேன், ஆனால் அவர்கள் மீதி ஏதுமில்லாமல் இலையை தூக்கி எறிந்து விடுவதால் உலர்ந்த பழங்களையே உண்டு வந்தேன் என்றான்’.
எதற்கும் ஓர் முடிவு என்பார்களே அது இதுதான். இந்திரஜித் பெற்ற அளவில்லா வரங்களுக்கும், இலட்சுமணன் உணவு, உறக்கமின்றி இருந்ததற்கும் கர்ம, காரணங்கள் புரிகின்றது. இதைக்கேட்ட இராமன் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் மறுபிறப்பாகிய இலட்சுமணணுக்கு தான் தம்பியாகப் பிறந்து சேவை புரிய வேண்டும் என மனதார நினைத்தார். அதன் விளைவாக 14 வருடங்கள் உணவும், இரவு உறக்கமும் இல்லா ஆதிசேஷன் ஆகிய இலட்சுமணன் அடுத்த பிறப்பில், பலராமராகவும், இராமர் சேவை செய்ய விரும்பியதன் பலனாக அவரது தம்பி கிருஷ்ணராகவும் பிறந்து தன் முற்பிறப்பின் அபிலாஷைகளைப் கர்ம காரணப்படி பூர்த்தி செய்து கொண்டார்.
இராவணன் தாயின் வேண்டுகோளின்படி மகேசனை மகிழ்வித்து ஆத்மலிங்கம் பெற்றான். ஆத்மலிங்கம் இராவணனுடன் சென்றுவிடக் கூடாது என தேவர்கள் முயற்சித்து விஷ்ணுவின் ஆலோசனைப்படி வெற்றி பெற்றனர்.  மீண்டும் கடுமையான தவமிருந்து ஈசனிடமிருந்து  1. தன் மாமனாரால் தான் இறக்கவேண்டும், 2. உமையவள் வேண்டும். 3. மூன்றரைக்கோடி ஆண்டுகள் ஆயுள் வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றான். 
விஷ்ணு உமையைக் காப்பாற்ற முடிவு செய்து இராவணனிடம் உண்மையான உமை, மயனின் பாதாள அறையில் இருக்கிறாள் எனக் கூறி திசைதிருப்பி உமையை மீட்டார். பின் சந்தனக் குழம்பால் அழகிய பெண் உருவாக்கினார். அவளை (மண்டோதரி) மயனிடம் கொடுத்து என் மகள், இனி உன் வளர்ப்பு மகள். இராவணன் வந்து மணக்க விரும்பி கேட்பான். அவன் விருப்பப்படி செய் என்றார்.
இராவணன் மண்டோதரியைக் கண்டு விரும்பி மணம் கொண்டான். விஷ்ணுவின் ராமா அவதாரத்தில், மாமனாரால் மரணம் என ஈசனிடம் பெற்ற வரத்திற்கேற்ப, விதி வசம் மதியிழந்து சீதையைக் கவர்ந்து இராமனால் கொல்லப்பட்டான். ஆக எந்த ஒரு விஷயங்களும் காரண, காரியமின்றி நடப்பதில்லை என்பது புரிகின்றது.
இன்னொறு காரண நிகழ்வு: கடவுளே ஆனாலும் மனித வடிவெடுத்தால் உறவுகள் தோன்றுவதும், அதே உறவுகள் தானாகப் பிரிவதும் தவிர்க்க இயலாதவை என்பதைச் சொல்லும் நிகழ்வு இது.
பட்டாபிஷேகம் நடந்து ராமரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சீதை பிரிந்து தாய் பூமாதேவியுடன் ஐக்கியமானார். லவ, குசர் வளர்ந்து பெரியவராகினர். லட்சுமனுடன் இராமர் உரையாடிக்கொண்டிருந்த போது, ஒரு முனிவர் வந்திருப்பதாக தகவல் வர இருவரும் அவரை சந்திக்க தயாராகின்றனர்.
வந்தமுனிவர் இராமனுடன் தனித்து பேச விரும்புகின்றார். இடையே யாரேனும் குறுக்கிட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார். அவ்வளவு முக்கிய விஷயமா? என்ற ராமர், தங்களின் விருப்பப்படியே ஆகட்டும் என்றார். லட்சுமணன் வெளியே சென்று கதவருகில் யாரும் உள்ளே வராமல் பாதுகாப்பாக நின்று கொண்டார்.
வந்த முனிவரின் சுய உருவான எமதர்மனைக் கண்ட ராமர் இன்று நான் பெரும் பாக்கியசாலி என சந்தோஷப்பட்டார். அப்போது எமன் சொன்னார், என்னைக் கண்டவர்கள் நீண்ட காலம் அந்த பாக்யத்தை அனுபவிக்க முடியாது! ராமா! நீ திருமாலின் அவதாரம் என்பதை மறந்தாயா! வைகுண்டம் உன் வருகைக்கு காத்திருக்கின்றது! காலதேவன் கணக்குப்படி ராமாவதாரம் முடிவடையும் காலமிது என்றார்.
அப்போது அறைக்கு வெளியே துர்வாசரைக்கண்ட லட்சுமணன் அவரை உள்ளே விட மறுக்க அவர் கோபத்தில் சாபமிடதுணிய, தன் உயிரைவிட நாட்டுமக்கள் நலமே பெரியது என்றெண்ணி லட்சுமணன் உள்ளே சென்றான். இராமர் தழதழப்புடன்  உள்ளே வந்தால் மரணதண்டனை என்று தெரிந்துமா வந்தாய் ஏனக் கேட்டார். துர்வாசர் வருகையைத் தங்களுக்குத் தெரிவிக்காவிட்டால் அயோத்தி அழிய சாபமிடுவதாகச் சொன்னதால் வந்தேன். தங்களிடமிருந்தும், உலகத்திடமிருந்தும் நிரந்தரமாக விடைபெறுகிறேன் என்றார் லட்சுமணன். காலதேவனின் திட்டம் தாமதமின்றி நடந்தது. தன்னை வழிகாட்டி கூட்டிச்செல்வது யமன் என்பதறியாமலே சரயூவில் இறங்கிக் கலந்தான். காரணம்- லட்சுமணன் மீண்டும் ஆதிசேஷனாகி படுக்கையாக வைகுந்தத்தில்  திருமால் வருமுன் காத்திருக்க!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26881268
All
26881268
Your IP: 54.224.52.210
2024-03-19 19:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்