gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

1-2.ஆனந்தம்!

Written by

ஆனந்தம்!                                                                                                              

மனம் நொந்து தளர்ந்துபோன நிலையில் இதுகாறும் நடந்த நல்ல சந்தோஷமான நினைவுகள்தான் நொந்த மனதிற்கு ஆறுதல் தந்து தளர்ந்த நிலையிலிருந்து மீட்டு மீண்டும் செயல்படவைக்க உதவுகிறது. மனம் மகிழக் கூடிய நிகழ்ச்சிகள் ஒன்றுகூட இல்லையெனில் கடந்த வாழ்க்கையும் பலனின்றி தொய்வுற்ற நிலையில், ஆறுதல்தர ஒரு துளி விஷயம்கூட இல்லாத நிலையில் இனி வரும் எதிர்காலமும் சோலையில்லா பாலைவனமாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. 

எனவே வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை ஏற்று மகிழ கற்றுக்கொள்ள வேண்டும். எந்த சின்ன சந்தோஷமாயிருந்தாலும் அதை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். சின்ன விஷயம் என விட்டு விடாதீர்கள். அதனால் ஒரு துளி சந்தோஷம் என்றாலும் ஏற்று சந்தோஷப் படமுயலுங்கள். 
சந்தோஷங்களை தேடிச் செல்லுங்கள். எந்த செயலையும் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படும் நிகழ்ச்சியாக மாற்றிக் கொள்ளப் பழகுங்கள். அந்த சின்ன சின்ன விஷயங்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட, வாழ்வில் தோன்ற வழி வகுங்கள். சின்ன விஷயங்களால் ஏற்பட்ட சின்ன சந்தோஷங்களை பெரிய செயல்களுடன் இனைத்து அதையும் சந்தோஷமாக்க முயலுங்கள்.
அந்த மகிழ்வு தந்த செயல் உங்களுக்கு வெற்றி ஏற்பட வைக்காவிட்டாலும் அந்த செயலால் தோன்றிய மகிழ்வு உங்களை அடுத்த செயலுக்கு எந்தவித குழப்பமின்றி திறமையுடன் முழுமையாக சிந்திக்க வைக்கும். உங்களின் குழப்பமில்லா முழுமையான சிந்தனை உங்களுக்கு மீண்டும் வெற்றியோ அல்லது சந்தோஷத்தையோ கொடுக்க வாய்ப்பு அதிகம். அடுத்து வரும் உங்களின் செயல்பாடுகள் நல்ல முறையில் அமையும். உங்கள் முகத்தில் தன்னம்பிக்கையும், புன்னகையும் குடி கொள்ளும்.
இந்த புன்னகை பூத்த முகம் உங்களை சந்திப்போர்க்கு உங்களின் மேல் ஓர் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். நல்லெண்ணம் பிறக்கும். நீங்கள் வேண்டும்போது அவர்களின் உதவி, உறுதுணை உங்களுக்கு கிடைக்கும். இது போன்ற உதவிகள் உங்கள் செயல் பாடுகளை எளிமையான முறையில் இலகுவாக வெற்றியடைய உதவும். அதனால் ஏற்படும் சந்தோஷம், சிறிய வெற்றி, மீண்டும் மீண்டும் வெற்றி என மாறி உங்கள் வாழ்க்கையை அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக திகழ வைக்கும்.
வாழ்வின் பல நிகழ்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் கடந்து வந்திருப்பீர்கள். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட நடந்த சின்ன சின்ன மகிழ்வூட்டிய, சந்தோஷம் ஏற்படுத்திய செய்திகளை நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து நினைவில் இறுத்திக் கொள்ளுங்கள். 
மனித இயல்பு நமக்கு துன்பமும் துயரமும் சார்ந்த நிகழ்வுகளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கும். அப்போது இப்படி நடந்தது என அடிக்கடி அசைபோடும். அது போன்ற நிகழ்வுகளை அதிகம் நினைவில் கொள்ளாமல் தவிர்த்து விடுங்கள். நம் நினைவின் ஆற்றல் சேகரிக்கும் பகுதியில் அதிகமாக வேண்டாத நினைவுகளும், துயர நிகழ்வுகளும் குடிகொண்டால், நல்ல நிகழ்வுகள் நமது மனதிற்கு, நினைக்கும்போது சந்தோஷம் தரும் நினைவுகளுக்கு இடம் குறைந்து, பல நிகழ்வுகள் நம் நினைவை விட்டு அகன்றிருக்கும்.
இதை ஒவ்வொருவரும் தவிர்த்து, சந்தோஷம் தரும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட மனதில் இருத்திக் கொண்டால் உங்கள் உள்ளமும், உள்ளத்தினால் எண்ணங்களும், எண்ணங்களால் செயலும், செயலால் செயல்படும் திறனும், செயல் திறனால் ஊக்கமும், ஊக்கத்தினால் ஆக்கமும், ஆக்கத்தினால் வெற்றியும், வெற்றியினால் மகிழ்வும் ஏற்பட்டு நீங்கள் வளமாக வாழ அந்த மகிழ்வு உதவி புரியும்.
நமது நினைவு திரையில் சந்தோஷ நினைவுகள் நிறம்பினால், சோகத்தை தரும் துன்ப நிகழ்வுகளுக்கு திரையில் பதிய இடமே இருக்காது. ஓர் விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோகத்தை ஏற்படுத்தும் துன்பங்களின் நினைவுகள் உங்கள் நினைவு திரைகளில் இருந்தால் அது உங்களுக்கு அடிக்கடி தோன்றி, பழைய நிகழ்வுகளுக்கு உங்கள் மனதை இழுத்துச் செல்லும். ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் அந்த நிகழ்வுகளின் தாக்கம் சிறிது அளவாவது இருக்கும். ஏனெனில் அந்த நிகழ்வின் பாதிப்பு அப்படி! அதனால் உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள் அந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருக்கக் கூடும். இந்த பாதிப்புகளை ஒழிக்க முயலுங்கள். 
சந்தோஷ நிகழ்வுகளின் நினைவுகள் உங்கள் நினைவிலிருந்து அகன்றிருக்கக் கூடும். ஏனெனில் சந்தோஷ நிகழ்வுகளை, துயர நினைவுகள் மனதில் பதிகின்ற அளவிற்கு நீங்கள் முழுமையாக மனதில் வாங்கிக் கொள்வதில்லை. 
நம் உறவில் ஒருவர் அதை நினைவுபடுத்தும் போது அதை உணர்வீர்கள். இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். நமது வாழ்வின் பயணத்தின் சந்தோஷங்களை ஒருவர் சொல்லி நினைவு கூறா நிலையில் நாமே நினைவில் கொள்ள வேண்டும்.
சோக நினைவுகள் மனதில் அதிகம் தாக்கம் ஏற்படுத்தாமலும், சந்தோஷ நினைவுகள் மனதை விட்டு அகலாமலும் இருக்க எப்போதும் உங்களை, உங்கள் மன நிலையை தயாரக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் உறுதியுடன் செயல் படுங்கள். 
 ‘நடந்தது நன்றாகவே நடந்தது, நடந்து கொண்டிருப்பதும் நன்றாகவே இருக்கின்றது, நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும்’ என்ற கீதையின் சாரத்திற்கு ஏற்ப உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் நடந்த சோக நிகழ்வுகளின் தாக்கம் உங்களை, உங்கள் மனத்தில் பதியாமல் சந்தோஷ நிகழ்வுகளின் தாக்கங்களை உங்கள் மனது பிரித்தெடுத்து உங்கள் நினைவு திரையில் அதிமாக பதிய வைக்கும். 
சோதனை நிகழ்வுகள் வாழ்க்கையில் பாடம், படிப்பினை என உணர்ந்தால், ஒவ்வொன்றும் ஓர் எண்ணத்தை, உண்ணத தத்துவத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும். அது ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி உங்கள் செயல்களுக்கு வழிகாட்டும். சந்தோஷ பாதையில் சென்று வெற்றி காணலாம்.
கஷ்டங்களை மனதில் பதித்து, காலம் கடத்தி, அழுது, மருகி, உணர்வுகளை வெளிப்படுத்துதலை விட, அதைத் தவிர்த்து, சந்தோஷங்களை மனதில் வாங்கி, மனதார ரசித்து அதனுள் மூழ்கி அனுபவித்தால் அந்த நினைவுகள் மனதில் பதிந்து எப்போதும் உங்களின் சந்தோஷ வாழ்க்கை பயணத்திற்கு பயனுள்ளதாகும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879308
All
26879308
Your IP: 44.222.149.13
2024-03-19 08:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்