குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
சமர்ப்பணம்!
Written by குருஸ்ரீ பகோராசந்தோஷப்பூக்கள்!
(உன்னதமான நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும்)
ஓம் சிவாயநமக!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
சமர்ப்பணம்!
என் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த நிகழ்வுகளின் தாக்கங்கள், பல சிந்தனைக்குப்பின் எழுத்து வடிவம் பெற்று, பூக்களாகப் பூத்த அதை, என்னை ஆளாக்கிய, பாலும், பாசமும் ஊட்டிய பாசறை மாணிக்கங்கள் என் தாய்வழிப்பாட்டி (காலம்சென்ற) திருமதி: நாவாயம்மாள் மாரிமுத்து அவர்களுக்கும், என்தாயின் சகோதரரும், என்னை வளர்த்த தந்தையுமான (காலம்சென்ற) திரு: மா.பழனியப்பன் அவர்களுக்கும் என் நீங்கா நினைவுகளுடன் சமர்பித்து, காணிக்கையாக்கி என்றும் நன்றியுள்ளவனாக இருக்க விழைகின்றேன். பாசத்தின் பாசறை அவர்கள். அந்த பள்ளியில் வளர்ந்ததால்தான் என்னால் இதுபோன்று பாசமுடன் சிந்திக்கத் தோன்றியதோ என்னவோ! என் வாழ்நாள் முழுவதும், மறக்க முடியா அன்பை பொழிந்த, அந்த மறைந்த நல்ல ஆன்மாக்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் என்றும் எப்போதும் கிடைக்கட்டும். அந்த அன்பு பாசறையில் பூத்ததுதான் நானும் இந்த “சந்தோஷப்பூக்களும்”
முதல் கோரிக்கை!
நான் நாத்திகனில்லை! முற்றிய ஆன்மீகவாதியுமில்லை! பழமையும், புதுமையும் கலந்த ஓர் இரண்டும் கொண்டான்! என் தினசரி வாழ்நாளில் கண்ட, கேட்ட, பார்த்த, படித்த நிகழ்வுகள் என்னுள் தோற்றுவித்த உணர்வுகளின் வழி மொட்டாகி, செம்மையான சிந்தனை புரட்சிப் பூக்களாய் பூத்த, எண்ணங்களை எழுத்துக்களாய் எழுதி தட்டெழுத்தில் கோர்த்து, திருத்தி வடிவமைத்து மலரவிட்டுள்ளளேன். மலர்களில் வாசனையுள்ள, வாசமில்லா மலர்களைப்போல இந்த “சந்தோஷப்பூக்கள்”-ல் சில மணமில்லாதவையாகவும், சில மணமுள்ளதாகவும் இருக்கக்கூடும். தலையில் தூக்கி வைக்கவும் வேண்டாம்! கீழேபோட்டு மிதிக்கவும் வேண்டாம்! ஏற்றுகொள்ள முடிந்தவற்றை ஏற்றுக்கொண்டு மற்றதை விட்டு விடும்படி பணிவு கொண்டு கூறுகின்றேன். நன்றி! வணக்கம்! ----- எண்ணங்களைக் கோர்த்தவன்
இரண்டாம் கோரிக்கை!
வந்தேன், உடலடைந்தேன், சந்தோஷம்காண விழைந்தேன், வாழ்ந்தேன், சென்றேன் என்றில்லாமல் இந்த ஆத்மாவின் உடல் கொண்டு அனுபவித்த, நுகர்ந்த, அனுபவங்களை, உணர்வுகளை ஏனைய ஆன்மாவின் உடல்களும் பயனடையவேண்டும் என்ற நோக்கில் அடியார்க்கும் அடியான் எழுதி வெளியிட்டது. கேள்விப்பட்ட, படித்த ஆன்மாக்கள் மற்ற ஆத்மாக்கள் அவர்களின் சந்தோஷ வாழ்விற்கு பயனுள்ள தகவல்தரும் இந்நூலை ஒருமுறையேனும் படிக்க உதவுங்கள். வாழ்வின் சந்தோஷம்கான அனைவரும் விழையட்டும். சந்தோஷப்பூக்கள் பூத்தமுகங்களாக இவ்வுலகம் பிரகாசிக்கட்டும். அருள் அதற்கு துணையாக நிற்கட்டும் என விரும்பும் “ஆசிரியனின் ஆத்மாவின் குரல்”
மூன்றாம் கோரிக்கை!
வியாபார நோக்கின்றி, மனித வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற கருத்தில், இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளதால், இந்நூல் பற்றி கேள்விப்பட்ட ஒவ்வெருவரும் ஒரு பிரதியை பெற்று ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இந்நூலின் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கோவில்கள் புணரமைப்பு, ஆன்மீகவளர்ச்சி, மற்றும் மருத்துவ பொதுக்காரியங்களுக்காக மட்டும் பயன்படுத்த ஆசிரியர் உள்ளம் கொண்டிருப்பதால் அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி கொடுத்து பல நல்ல செயல்கள் குறையின்றி உங்களின் பங்களிப்புடன் நடந்திட உதவிக்கரம் நீட்டுங்கள்-அடியார்க்கு அடியோன், குருஸ்ரீ பகோரா கயிலைமணி. ப.கோவிந்தராசன்.
ஆசிரியரின் முகவரி:
குருஸ்ரீ பகோரா கயிலைமணி. ப.கோவிந்தராசன்.
Naavaapalanigo Trust (Head office)
32,TelephoneNagar, Moolappalayam, ஈரோடு-638 002
32,டெலிபோன்நகர், மூலப்பளையம், ஈரோடு-638 002.
Email-இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Ph:04242280142/9442836536.
PLvisit:naavaapalanigotrust.com தலைப்புகள் உள்ளே
1. புரிந்துணர்வு:1-9
2. வெற்றியின் ரகசியங்கள்:2-9
3. துன்பம், துயரம் நீங்க:3-18
4. சந்தோஷம்காண:1-6
5. பேரின்பம் அடைய:1-9
6. இறுதி உரை:1-3
******
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.