gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-6.தவம்,பக்தி!

Written by

தவம்,பக்தி!                                                                                                              

ஒரு சாலையில் ஆடுமாடுகளை வழிநடத்தி கட்டுக்கோப்புடன் செல்வது போல சிரமமானது தவம் செய்வது! அதே சாலையில் ஒர் பசுமாட்டை எவ்வளவு சுலபமாக அழைத்துச் செல்லமுடியுமோ அதைப் போன்றது பக்தி மார்க்கம்! அன்பான இறைவனை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது! மழையையும், காற்றையும், வெய்யிலையும் ரசிக்கத் தெரிய வேண்டும். நான் எந்த இடத்திற்கும் யாருக்கும் சொந்தமில்லை என எண்ணத் தொடங்குதலே பேரின்ப பேற்றின் முதல்படி. நாம் (ஆன்மா) வாழ்ந்த வீடு (உடல்) விட்டு அகலும்போது வீடு (பேறு) நமக்கு கிடைக்கின்றது.
தாய்ப்பூனை தன் குட்டிகளை அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தவாறு இடமாற்றம் செய்யும். எங்கிருந்தாலும் தன் குட்டியின் அழைப்புக்கு வந்துவிடும். அதைப்போலவே இறைவன் நம்மை ஆங்காங்கே வைத்துள்ளான். நாம் நம் கடமையைச் செய்து இறைவனை மனத்தால் ஒன்றி அழைத்தால் நிச்சயம் அந்த குரலுக்கு பலன் உண்டு!
மனுசாஸ்திரம் மனித ஆன்மாக்கள் செய்ய வேண்டியது 1.தேவயக்ஞம்- இறைவனுக்கு பூஜை, 2.ரிஷியக்ஞம்- சாஸ்திரங்களைப் படித்து போதித்தல், 3.பித்ருயக்ஞம்- முன்னோர்களுக்கு தர்பணம், 4.நரயக்ஞம்- மனிதத்தொண்டு, 5.பூதயக்ஞம்-பிற உயிர்களுக்கு உதவுதல் என பட்டியலிட்டுள்ளது.
வேதங்களை படித்தவர்களால், உண்மையை உணர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது வழிபாட்டு முறைகள், அனுஷ்டானங்கள். அவைகள் பொய்யன்று. ஒருவர் சொன்னார் என்பதற்காக வழிபாட்டினை விருப்பப்படி மேற்கொள்ளக்கூடாது. சாத்திர பூர்வமற்ற சம்பிரதாயம் தவறிய வழிபாடுகள் உருவாகி விடுகின்றது. சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தூய்மையான அன்புடன் கடவுளை நெருங்குவது, அறிந்து கொள்வது ஒவ்வொருவர் கடமை. எல்லா உயிர்களுக்கும் இந்த தாக்கம் ஓர் நிலையில் ஏற்படுகின்றது.
எல்லா உயிர்களிலும் உள்ளது ஆன்மாவே! அவைகள் ஓர்நிலையில் அருள் பெற விரும்புகின்றன. அதை நாடி அருள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆந்தை-கூகையூரிலும், ஆமை-காஞ்சியிலும். உடும்பு-மாகறலிலும். எறும்புகள்-திருவெறும்பூரிலும், ஒட்டகம்-நெடுங்களத்திலும், கரிக்குருவி(வலியன்)-திருவலிதாயத்திலும். கிளி-சேலத்திலும், குதிரை-மங்கலக்குடியிலும். குயில்-திருக்கோழம்பத்திலும், குரங்கு-தென்குரங்காடுதுறை, குரக்குத்தளி, குரங்கனில் முட்டம், வடகுரங்காடுதுறையிலும், கீரி-ஈழநாட்டிலும் (கீரிமலை). சக்ரவாகப்பறவைகள்-சக்கரப்பள்ளியிலும்,சிலந்தி+ யாணை+ பாம்பு-திருக்காளத்தியிலும். சேவல்-உறையூரிலும். தேனீக்கள்-நன்னிலத்திலும், நண்டு-திருந்துதேவன்குடியிலும். பறவைகூட்டம்-புறவார் பனங்காட்டூர், திருவோத்தூர், எறும்பூரிலும். முத்துசிப்பி- காஞ்சியிலும், மான்- மப்பேட்டிலும், மீன்-காஞ்சியிலும், மயில்-மயிலாப்பூரிலும், யாணையும், சிலந்தியும் திருவாணைக்காவிலும் வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கின்றது.
உயிர்கள் எல்லாவற்றிலும் கடவுளின் அம்சம் உள்ளது. உடலில் உள்ளே கடவுள் இருப்பதால் அவரின் அம்சம் நம் உடலில் இருப்பது சரிதானே! முன்னோர்களின் அம்சம்போல! இதைப் புரிந்துகொள்ள நாட்கள் ஆகின்றது. “புகை தெரிந்தால் அங்கு நெருப்பு இருக்கவேண்டும் என்பது நியதி.” அதைப்போன்றே ஓர் அனுமானம் கடவுளைப்பற்றி தெரியவரும்.
ஆனால் அனுஷ்டானங்களை, வழிபாட்டு முறைகளை அறியாமல் அவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையாக செயல்பட்டு இறைவனை அடைந்துள்ளார்கள் என்பதற்கு கண்ணப்பநாயனார் சரித்திரம் சான்று. எந்த விதமான பக்தி உயர்ந்தது என உண்மையான பக்தி சோதித்து பார்க்காது. பக்தி என்பது சத்யத்தின் வாசல். குழைந்து, கனிந்து, பரமானந்தமாக நிற்கின்ற நிலை. அந்த நிலையில் கண்ணப்பருக்கு இறை தரிசனம் கிடைத்தது. இறைவனுக்கு கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல. கொடுக்கின்ற மனோநிலை மிகமிக முக்கியமானது.
அங்கே தூய்மையான தன்னலமற்ற அன்பு, மனிதநேயம் தெரிந்தது. அந்த சரித்திரம் போல் எல்லோரும் கடைபிடிக்கமுடியுமா? என்பது சந்தேகமே! எனவேதான் வழிமுறைகள் படிப்படியாக இறைவனை நெருங்க அனுஷ்டானங்கள் தோன்றியது எனலாம். ஆசார அனுஷ்டானங்களைப் புரிந்து என்ன செய்கின்றோம் என உணர்ந்து, எதைச் செய்தாலும் மனம் ஒன்றிச் செய்தல் சிறப்பாகும்.
சிறுதொண்டநாயனாரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் தங்கள் மகனை அரிந்து கறிசமைத்து அடியவராக வந்து பிள்ளைக்கறிக்கேட்ட பெருமானுக்கு படைத்தது யாராலும் மறக்கமுடியாத நிகழ்வு. உலகத் தந்தையான இறை தங்கள் குழைந்தையையும் காப்பான் என நம்பினார்கள். நம்பினோர் கைவிடப்படார். சொந்தக் குழந்தை பாலகனை அரிந்து சமைக்கும் செயல் எவ்வளவு பெரிய அரிய பக்தி நம்பிக்கை இறைமேல் என்பதை விளக்குகின்றது.
அறிவினால் சாதனை படைக்கும்போது, மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றுவது இயற்கை. ஆனால் நமக்கு வேண்டுவது நிறைவும் அமைதியும் தரும் இன்பம். கவர்ச்சியை மனம் நாடக்கூடாது. நம் அனுபவத்திற்கு அப்பால் உள்ள ஒன்றை நாம் தேடக்குறிக்கோள் கொள்ளவேண்டும். நமக்கு அருகில், நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளிருந்து வெற்றிபெருவது மட்டும் குறிக்கோள் அல்ல. வெகுதூரத்தில் நாம் அடையமுடியாத நிலையில் இருப்பதை அடைய முயற்சி செய்வதுதான் சிறந்த குறிக்கோளாகும்.
உலகப் பொருள்களை எல்லாம் உங்கள் முயற்சியால் எளிதில் அடையலாம். எளிதில் அடையமுடியாதது இறையருள். அதற்காக முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முயற்சி, கடினமான முயற்சிகளால் சாதனை படைக்கமுடியும். இறக்கை முளைக்காத பறவைக் குஞ்சுகள் தாய் பறவைக்காகவும், கட்டிப்போட்ட இளங்கன்றுக்குட்டி தாய்ப் பசுவின் மடிக்காகவும் காத்திருப்பதுபோல் அருளாளின் அருள் கிடைக்க எதிர்பார்த்திருப்பதே ஞானத்தை தேடலின் அறிகுறி.
மந்திர, யாகங்கள் செய்ய முடியாதவர்கள் எளியமுறையான, உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், எளிமையாக வாழுதல், பொய் பேசாதிருத்தல், சுத்தமாக இருத்தல், சுறுசுறுப்பாக இயங்குதல், பிறருக்கு உதவி நன்மை செய்தல், பொருளில் பற்றற்று இருத்தல் ஆகிய செயல்களினாலும் இறையை அடையலாம் என அக்னிபுராணம் கூறுகின்றது.
“எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்” எனப் பிரகலாதன் கூறியபோது இந்தத் தூணில் உள்ளானா? என இரண்யன் கேட்டது அறிவோம். பின் இரண்யவதம் நடந்ததும் அறிவோம். எங்கும் உள்ள இறைவன் ஏன் உன்னுள்ளும் இருக்கின்றார். நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறார். அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது ஆன்மாபற்றியது. உடலின் உயிரை முழுமையாகப் புரிந்து கொள்ள உள்நோக்கி பார்த்தால்தான் தெரியும்.
உடலையும் மனத்தையும் புரிந்தால் மட்டும் வாழ்க்கை வாழ்க்கையல்ல! உடலையும் மனதையும் இயக்கும் சக்தி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். “நம்முள்ளே இருக்கும் இறைவனை நாம்தான் தேடிக்கண்டு கொள்ளவேண்டும்” ‘என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேனே’ என திருநாவுக்கரசர் பெருமான் கூறுகிறார். அறிவினால் கடவுளை அறிந்து கொள்ளமுடியாது, உணர்வினால்தான் புரிந்து கொள்ள முடியும். நாம் தேடுவதற்கு வழிமுறைகள் உண்டு. அதற்கான உணர்வுகளை நாம் வழி முறைகளிலிருந்து அடையவேண்டும். அந்த அறிவுப்பூர்வமான செயலை செய்வதற்குத்தான் வழிமுறைகள், அனுஷ்டானங்கள்.
சீன மூங்கில்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றினால் ஒருவருடத்தில் ஒரு அங்குலம் தான் வளரும். இப்படி ஐந்து வருடங்கள் வளர்ந்த பின் ஆறாவது வருடத்தில் 90 அடிக்கு வளர்ந்துவிடும். ஒருவருடத்தில் 90அடி வளரும் மூங்கில் அந்த உயரத்தை தாங்க ஐந்து வருடங்களுக்கு வேர்பரப்பி தன்னை தயார் செய்து கொள்கின்றது. இதுபோல் மனம் தளராமல் அமைதியுடன் ஆனால் உறுதியுடன் இருந்து நீங்களும் தயாராகுங்கள் உங்கள் மனம் அருள் வயப்பட்டு பேரானந்தம் அடைய.
“உன்னை உணரும் அறிவைக் கொடு” என அப்பர் பெருமான் இறைவனிடம் இறைஞ்சுகின்றார். தேடும் அறிவினால் மீண்டும் மீண்டும் முயற்சித்து எண்ணங்களை, செயலை, கருத்தை, நினைவை ஒருமித்து உள்ளே இருக்கும் அருளைத்தேடிக் கண்டுபிடித்து வெற்றி பெற்றவர் திருமூலர் பெருமான் அவர்கள்.
“எங்கேயல்லாம் ஓடித்திரிந்த என் அறிவை, முயற்சிசெய்து என்னோடு ஒன்றாகி நிற்கவைத்த அறிவை உள்ளே செலுத்தி, பரம்பொருள் அனுபவம் கண்டேன், திருவருள் தன்மை புலப்பட்டது, இந்த உணர்வு உடனே எனக்கு கிடைக்கவில்லை. இதற்காக நான் பலபிறவிகள் எடுத்ததாக நினைக்கிறேன்.” என்றார் திருமூலர்.
‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்’ என்கிறது ஓர் பழமொழி. பிள்ளைகள் பாசமின்றி ஓர் கல்லைப்போல் நடந்து கொண்டாலும், அவன் தாய் குற்றம் செய்த மகனை மன்னித்து அவன் வளமுடன் ஆயுளுடனும் வாழவேண்டும் என நினைக்கின்றது. செய்த குற்றங்களை பெரிதுபடுத்தாமல் மன்னித்து வாழ்த்துகின்ற கருணைதனைக் கொண்டிருப்பவரை பித்து எனக்கூறுதல் வழக்கம்.
ஆன்மாக்கள் புரிகின்ற பல பிழைகளைத் தாயுள்ளம் கொண்டு பொறுத்து அருள் புரிகின்ற அருளாளனும் பித்தன்தான். எனவேதான் “பித்தா பிறைசூடி பெருமானே அருளாள” என சுந்தரர் தேவாரத்தில் பாடியுள்ளார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டு சுந்தரரிடம் வழக்கு தொடுத்தபோது காட்டிய பத்திரத்தில் பித்தன் எனக்குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரபஞ்சம் ஓர் நியதிக்குட்பட்டு இயங்குகிறது. நியதிக்கு ஆதாரம் திரு அருள்தான். இது அதிசயம், அற்புதமும்கூட.
அதிசயம், அற்புதம் இரண்டுமே வியப்பின் மேலீட்டால் தோன்றும் உணர்வாகும். நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஓர் நிகழ்வை பார்க்கும் போதும், நினைக்கும் போதும் வியப்பு ஏற்படுகின்றது, நாம் அதிசயிக்கிறோம். அற்புதம் என மகிழ்கின்றோம். உலக இயக்கத்தில் அதிசயப்பட்டு, பல அற்புதங்களை நாம் உணரலாம்.
வறுமையின் உச்சத்தில் இருந்த குசேலர் தன் நண்பனை பார்க்க அவலோடும் ஆவலோடும் போனார். அவலை உரிமையோடு எடுத்து உண்டார் கிருஷ்ணர். குசேலர் கிருஷ்ணனிடம் எதுவுமே கேட்கவில்லை. கிருஷ்ணரும் ஏதும் தரவுமில்லை. வறுமையுடன் சென்றவர் கிருழ்ணரை பார்த்து வெறும் கையராய் திரும்பியதற்கு வருத்தப்படவில்லை. ஏனெனில் அவரின் நோக்கம் தன் நண்பன் கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்பதே! பார்த்தார். கிரிஷ்ணனின் அருள் பெற்றார். எதையும் கேட்காமலே எல்லாம் அடைந்தார்.
ஓர் சூழலில் நாம் அனைவரும் அருள்பெற விழைகின்றோம். அதற்காக நாம் பல இடங்களுக்குச் செல்கின்றோம். அங்கெல்லாம் இருக்கும் உண்டியலில் நம் வேண்டுதல் முடிந்து காணிக்கை செலுத்துகின்றோம். இதுதவறு? செய்யாதீர்கள் என யாராவது கூறியிருக்கின்றார்களா! இல்லை! ஏன்? நமக்கு எதற்கு இந்த வம்பு என ஒதுங்கி கொள்கின்றார்கள். ஏன்?
அருள்தரும் இறை நம் கோரிக்கைகளில் நியாயம் தர்மம் பார்த்து அருள் புரிதல் நடைபெற்று வருகின்றது. அது அவர் கடமை. தன்னை நாடி வருபவர்களுக்கு அருளச்செய்வது தான் அருள். பொருள் பெற்றுக்கொண்டு அருளுவதும், அருளியபின் பெற்றுக் கொள்வதும் ஓருவகை வியாபாரம். வியாபாரமாக நடைபெற்றால் அது அருள் இல்லை. பின் ஏன் இவ்வாறு உண்டியல் போட்டு வசூலிக்கின்றார்கள். அருள் தரும், பெரும் இடங்களை சீர்படுத்தி சுத்தமாகப் பேணி பாதுகாக்க பெருள் தேவைப் படுகின்றது. அதற்கான நிதியை சேர்த்தவே உண்டியல்கள். அந்தநோக்கில் உள்ள உண்டியல்களை நிரப்ப முன்வரலாம். உண்டியல்களில் பணம் செலுத்துமுன் அது உங்கள் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என்ற நோக்கில் செலுத்தாதீர்கள்.
உண்டியல்கள் இருக்கும் சூழல் கண்டு நம் செயல்பாடு இருக்க வேண்டும். ஏதோ ஓர் மரத்தில் கட்டிய உண்டியல்களுக்கு எல்லாம் மதி மயங்கி ஆதரவு தந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். பொதுவாக நம் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த முறையானாலும் வழிபட்டு அருள்பெறவேண்டி அதற்கு ஈடாக நம்மால் முடிந்தது எனக்காணிக்கை அளிப்பது அருள் புரிபவருக்கு ஊதியம் அளிப்பது போலாகும்.
அவர் உங்களிடம் சம்பளம் அல்லது வேறு ஏதும் பெறும் ஊழியரில்லை. உங்கள் பாவங்களிலிருந்து, செயல்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நல்வழியில் மனம் செயல்பட மட்டும் உதவுபவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறாவிடின் ஏமாற்றம் அடைந்து கோபமும் வெறுப்பும் அடைகிறோம். இது தவறு. “வேண்டுதல் வேண்டாமைக்கு அப்பாற்பட்டவன் அருள்புரிபவன்.” உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பக்தியை கருவியாக நினைக்கக்கூடாது.
தவம், ஜபம் காம்யார்த்தமாயின்றி (காரணங்களை உத்தேசித்தவை) ஆத்மார்தமானவையாக இருக்கவேண்டும். வேண்டுபவர்கள் நல்லதை மட்டும் வேண்டுவதில்லை. ஆசையினால் எல்லாவற்றிற்கும் அருள் பெறவிரும்புகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஓர் நியதி உண்டு. கர்மபலன் உண்டு. அந்த வினைகளைச் செய்து அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டும். நீங்கள் அந்த பலன்களை அனுபவிக்காவிடில் அது உங்கள் சந்ததியினரைத் தொடரும். அதற்காக வெறுமனே வணங்கி வேண்டுதல் விடுத்து காணிக்கை செலுத்தி கர்ம பலன்களை அடையவோ, அதன் பாதிப்புகளை நீக்கவோ முடியாது.
சந்தோஷமும், துக்கமும் அவரவர் கர்ம வினையின் பலன்கள். வினைகளை நாம் செய்திருந்தாலும் பயன்கள் சேருமிடம் வேறுஓர் இடத்தில். அங்குதான் கர்மபலன்கள் நிர்ணயக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் உயிர், ஆன்மா உடலின் வழியாக அதன் வினைப்பயன்களை அனுபவிக்கவே நிகழ்வுகள் நடைபெறுகின்றன். அருள் நம்பிக்கை சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கவும், துக்கங்களை தாங்கும் மனவலிமைதனையும் தரவல்லது. நம்பிக்கையில்லாதவர் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அவர் நியாயத்தையும் நேர்மையையும் கடைபிடிப்பவராக இருக்கக் கூடும்.
உண்மையில் தவம் என்பது எளிமையான வாழ்க்கைமுறையைக் கொண்டதாகும். ஏழ்மை வேறு, எளிமை வேறு. மனை, வாசல் என்றில்லாமல் சாலை ஓரத்திட்டுகளில் வாழ்ந்திருப்பது ஏழ்மையாக இருக்கலாம். சோம்பேறித்தனத்தினால் வந்திருக்கலாம். உழைத்து எல்லா வசதிகளுடன், அனுபவிக்க இருந்தபோதும், ஒன்றும் இல்லாதவன் போன்று ஆடம்பரமின்றி, சமூக கௌரவம் பற்றி கவலையின்றி, மாய சிந்தனைகளில் உழலாமல், உங்களுக்காக, உங்கள் சந்தோஷத்திற்காக தேவைகளைக் குறைத்து அளவுடன் அனுபவித்து, எளிமையுடன் பிறர் நலன் காத்து வாழ்வதே உண்மையான தவம்.
தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுத்துக் கொண்டாகிலும், மற்ற உயிர்களுக்குத் துன்பம் தராச் செயல்களை செய்யாதிருப்பது தவத்தின் மகிமையாகும். தவவலிமையுடைய ஆன்மாவின் உடலை மற்ற ஆன்மாக்கள் தொழும். சுட்ட தங்கம்போல், தவம் செய்வோரை துன்பங்கள் அடையாமல், மேலும் மெய்யுணர்வு அடைவர். ஆத்மாக்களில் தவம் செய்பவரே ஆற்றல் மிக்கவர்.
எது அதுவாகும்: நாம் என்ன நினைக்கின்றோமோ அதையே மீண்டும் மீண்டும் நினைத்து செயல்பட்டால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். அந்த செயலுடன் ஒன்றிவிடுவோம். இந்த நிகழ்வுகள் இராமாயணத்திலும் சொல்லப் பட்டுள்ளது. இலங்கேஸ்வரனால் சிறை பிடிக்கப்பட்டு அசோக வனத்தில் இருந்த சீதை அங்கு தன்மீது பரிவுகொண்ட திரிசடை என்பவளிடம் ராமனையே எப்போதும் நினைக்கும் நான் இராமனாகி விடுவேனோ! என்கதி என்ன! அப்போது நான் எப்படி அவருக்கு உபயோகமாகுவேன். நான் சீதையாகவே இருந்தால்தானே நல்லது என வருந்தி புலம்புகின்றாள்.
அப்போது திரிசடை, அம்மா! கவலைப்படாதீர்கள். தாங்கள் இராமனை எண்ணி, எண்ணி ராமர் ஆனாலும் கவலையில்லை. ஏனெனில் ராமரும் உங்களை எண்ணி எண்ணி சீதையாக மாறியிருப்பார். எப்படிப் பார்தாலும் ஒரு ராமர், ஒரு சீதைதான். என சீதைக்கு ஆறுதல் சொல்லியதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு இந்து மதத்தின் அழகான தத்துவத்தை, “எதை எண்ணுகிறாயோ! அதுவாகவே ஆகிறாய்” என்பதை உணர்த்துகின்றது.
காந்தத்தில் இனைந்த இரும்பு, காந்த தன்மையைப் பெற்று காந்தம் ஆகிறது. கடவுளை நினைத்து இனைந்த ஆன்மா கடவுளாகிறது. இனைதல் என்பது இடைவிடாது நினைத்தல் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதன் உண்மை புரியும்.
கோவில் உபன்யாசத்திற்கு சென்ற யாரும் அவர் கூறியதை அப்படியே நினைவு கொள்ளமுடியாது. அந்த குறிப்பிட்ட நேரங்களில் அவர்கூறியதை மனம் ஒன்றிக் கேட்டாலும் ஒரு சில நிகழ்வுகளில் மனம் லயித்துவிட்டால் அது ஓர் ஆனந்த அனுபவம். மொத்தமாக நன்றாயிருந்தது எனத்தான் சொல்கின்றோம். என்ன நினைத்து அந்த நிகழ்விற்கு சென்றோமோ அதன் தாக்கம் நம்மை அடைகின்றது. கூடையில் தண்ணீர் பிடித்தால் சில நிமிடங்களில் சல்லடைவழியாக வெளியேறி கூடை சுத்தமாகி விடுவதுபோல உபன்யாச செய்திகள் நம் உள்ளே தங்காவிடினும், அதைக்கேட்ட அந்த நேரங்களில் நம் மனது லயித்திருந்த நிமிடங்கள் நம் மனது, ஆத்மா சுத்தமாகி ஆனந்தம் அடைகின்றது.
கருனை: கடவுளின் கருணை சிறிதளவு கிடைத்ததும், அகங்காரம் கொண்டு மனம்போனப் போக்கில் தாறுமாறாக நடந்துகொள்கின்றனர். தொடர்ந்து அவ்வாறு நடக்கும்போது கடவுளின் கருணையை முற்றிலும் இழந்து பழையநிலைக்கே திரும்பி விடப்படுகின்றார்கள்.
ஒரு சக்தி மிக்க முனியின் ஆசிரமத்தில் ஓர் எலி வாழ்ந்தது. அங்கிருந்த பூனையினால் அடிக்கடி தொந்தரவு ஏற்பட அது முனிவரை நாடியது. அவர் அதை பூனையாக மாற்றினார். பூனைவெளியில் சென்றபோது நாய்கள் அதை துரத்திவர, முனிவர் உதவியை நாட, அவர் அந்தபூனையை ஓர் நாயாக மாற்றினார். அந்த நாயை பசியுடன் இருந்த சிறுத்தைபுலி வேட்டையாட துரத்த முனிவரிடம் ஓடிவர, அவர் அதை புலியாக மாற்றினார். புலியாக மாறிய எலிக்கு பசிஎடுக்க அது முனிவர்மேல் பாயத்தயாரானது. அந்தப்புலி எலி-பூனை-நாய்-புலி ஆகிய மாற்றங்களை மறந்திருந்தது. புலியின் நிலையிலிருந்து அது பாயத்தயாராகவே அதை மீண்டும் எலியாகவே மாற்றினார்.
இந்த கதை நிகழ்வு, கருணை நமக்கு கிடைத்தால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மையடைந்த கருணை நம்மைவிட்டு விலகிவிடும். நாம் மீண்டும் பழைய நிலையடைந்து வருந்துவோம் என்பதை உணர்த்துகின்றது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவனின் பொருளைத் திருடி விட்டான். அவனை ஆசிரியன் முன் நிறுத்த அவர் அவனைத் தடவிக் கொடுத்து "திருட்டு தவறு" என அன்புடன் உரைக்கிறார். புரிந்ததா? எனக் கேட்டு இனி இவன் திருடமாட்டான்! என மற்ற மாணவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி விட்டார்.மீண்டும் இதே தவறை அவன் மீண்டும் செய்ய மற்ற மாணாக்கர்கள், அவனைப் பள்ளியை விட்டு வெளியேற்ற விரும்பினார்கள். அவனுக்கு ஆசிரியர் மீண்டும் அறிவுரை கூற, இந்த அனுகுமுறையை இம்முறை ஏற்கத்தயாராக இல்லாத மாணவர்கள் அவனை வெளியேற்றாவிடில் அனைவரும் வெளியேறி விடுவதாக கூறினார்கள். சரி போங்கள் என அமைதியாக சொன்னார் ஆசிரியர்.
ஏன் திருடக்கூடாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்து விட்டது. நீங்கள் எங்கு சென்றாலும் சரியாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் அவசியமில்லை. இவனுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. அதைப் புரியவைப்பதுதான் எனது கடமை. இவனுக்கு இதை நன்கு புரியவைக்க நான் அவசியம் தேவை. வெளியே அனுப்ப முடியாது என்ற ஆசிரியரின் கருணை அன்பைக் கண்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
திருட்டு மாணவனின் மனதை ஆசிரியரின் மனிதநேய கருணை மாற்றியது. ஆசிரியர் எல்லாம் போதிப்பவராக மட்டுமல்லாமல், கண்டிப்பும், கனிவும், கருணையும் காட்டத் தெரிந்தவராக இருந்தால் தான் நல்ல உள்ளம் கொண்டவர்களை உருவாக்க முடியும். அவரே உண்மையாண ஆசிரியர், போதகர், குரு, ஞானி எல்லாம்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880100
All
26880100
Your IP: 18.208.203.36
2024-03-19 12:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்