gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-5.உள்ளேகட!

Written by

உள்ளேகட!                                                                                                              

பிரமாண்டம் என்றால் அளவிடமுடியாத அளவிற்கு பெரியது. எந்தவித அளவுகோளும் இதற்கு இல்லை. நீங்கள் நினைப்பது போல பலமடங்கு பெரியது. பிரமாண்டம்- பிரம்மம்+ அண்டம். அண்டம்- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பிரம்மம்- ஆண்டவன்- கடவுள். எதிலிருந்து இந்த உலகம் உண்டானதோ, எதற்குள் இந்த உடலும் உயிரும் சங்கமிக்கின்றதோ அதுவே பிரம்மம்.
ஓர் விதையுனுள் ஓர்மரம் அடங்கியிருப்பதால் விதையே பெரியது, மரத்தைவிட. ஆனால் ஓர் மரத்தில் இது போன்று எத்தனை விதைகள் உருவாகின்றது. உற்பத்தியாகின்றது. எனவே விதையைவிட மரமே பெரியது. புரியாத ஆனால் உணரும் பெரிய தத்துவம் இது. இந்த வித்தையை புரிந்தவன், அறிந்தவன் கடவுள். அதனால்தான் பிரமாண்டவனாய் இருக்கின்றான்.
ஆலயம் என்பது ஆன்மாக்கள் ஆண்டவனிடம் ஒன்றி லயிக்குமிடம். கோவில் உயிர்களின் தலைவன் தங்குமிடம். ஆலயம் கோவில் வடிவானது. கோவில் கர்பகத்தினுள்ளே இறைவன் குடியிருப்பு. நம் உடலே ஆலய அமைப்பு. ஆக இந்த உடலின் கர்ப்பகத்துள்ளே இறைவன் குடியிருக்கின்றான்- ஆன்மாவாக- உயிராக. ஆன்மா உடலைச் சார்ந்து இருப்பதால் அந்த உடலின் ஆசாபாசத்திற்கு ஏற்ப நல்ல, தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றது.
எனவே நம் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், அதனால் ஆன்மா புனிதப்பட்டு அது பாவங்கள் நீங்கி முற்றிலும் இறை குடியிருப்புக்கு ஏற்றதாகி விடும். நம் பாவச்செயல்கள் காரணமாக மனம் இருண்டுவிடுவதால் நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனைக் காணமுடிவதில்லை. அந்த இடத்தை இருட்டடைப்பு செய்து விடுகின்றோம்.
வாழ்வின் மூலத்தை தேடுவது, தொடுவது என்பது இன்னொரு பரிமாணத்திற்குள் நுழைவதாகும். இறைவன் ஜோதிவடிவமானவன். எனவே மாயை எனும் அந்த இருட்டை நீக்கி மனதில் ஒளிகொண்டு இறையைக் கணமுயலுங்கள். இருண்ட இடத்தில்தான் ஒளி பரவமுடியும்.
ஒளி வந்தபின் இருண்டபகுதி என எதுவும் இருக்காது. அஞ்ஞானம் உள்ள இடத்தில் ஆண்டவன் வந்து ஒளி நிரம்பினால் முழுமையான ஞானம் நிறைந்து விடும்.
நமக்குள்ளே அவன் ஒளிர வேண்டும். இருளை அகற்ற ஞானம் என்ற அகல் விளைக்கை ஏற்றுங்கள். மனம், மூச்சு, பார்வை, சொல், கேள்வி, உணவு ஆகியவன எங்கிருந்து பிறக்கின்றனவோ, எங்கு போய் சேர்கின்றதோ அதுதான் அருளின் பிறப்பிடம். முதலில் நாடுங்கள். பின்னர் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும்’.
ஒரு ஆன்மாவின் உடலின் நிழல் அதனோடு எப்படி ஒன்றியிருந்து ஓளிபட்டால் மட்டும் நம் கண்களுக்கு தெரிகின்றதோ, அப்படியே நம் உள் இருக்கும் இறையும் உள்ளேஒளி பரவினால் மட்டுமே காணமுடியும்.
கண்ணனே! உன் கால்களால் என் மார்பில் மிதி. உன்கால்களில் மிதிபட்டு விஷப் பாம்பு மடிந்ததை அறிவேன். அதேபோன்று என் மனதில் உள்ள காமம், குரோதம், மோகம், மதம், போகம் ஆகிய பாம்புகள் நீ உதைத்தால் அழிந்துவிடும். என் மனம் சுத்தமாகிவிடும். அப்போது இறையை நான் காணமுடியும் என, தன்நிலை மறந்து ஒரு கோபிகை கூறியதாக புராணத்தில் உள்ளது.
எரிகட்டுகளை பற்றவைத்தால் புகைவருகின்றது. அது கண் எரிச்சலையும், மூச்சுத் திணரலையும் ஏற்படுத்தும். நமக்கு நெருப்பு வேண்டும். நமது நோக்கத்தில் உறுதியாக இருப்பதால் எரிச்சலையும் திணரலையும் பொறுத்துக்கொண்டு மூச்சுக்காற்றால் ஊதி ஊதி நெருப்பு பற்ற உதவி செய்கிறோம்.
நெருப்பு எரிய ஆரம்பித்தால் புகையில்லை, கண் எரிச்சலில்லை, மூச்சுத்திணரலில்லை. அங்கே ஒளியையும் அதன் வெப்பத்தையும் உணருகிறோம்.
இதேபோன்றுதான் ஆன்மீகப் பாதையில் ஆரம்பத்தில் ஏற்படும் இடர்பாடுகள். தடங்கல்களைத் தவிர்த்து நாம் இறைஓளி காணும் கொள்கையில் உறுதியுடன் செயலாக்கம் நடைபெற்றால் அந்த வெளிச்சத்தை காணமுடியும், அதில் ஒளியை உணர்வீர்.
அந்த ஜீவஒளி நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஜீவன்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். எனவே தடைகள் கண்டு ஒதுங்காமல் தொடர்ந்து பயணித்து இன்ப ஓளியை காணுங்கள்.
தலைமைத் துறவி ஓர் சிலையை எடுத்து தன் சீடர்களிடம் கொடுத்து, இது சாதாரண சிலை என நினைத்துவிடாதீர்கள், மிகவும் சக்தி வாய்ந்தது. பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போது திருடர் தொல்லை அதிகம் இருந்ததால் அவர்களால் சிலை சேதப்படமல் இருக்க, சீடர்கள் முழு முயற்சி எடுத்து அதை பாதுகாத்தனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமும் இருந்தது. அந்த சிலையை வைத்திருந்த இடத்தில் மழைநீர் வழிந்து, கூரையிலிருந்து ஒழிகி களிமண் கரைந்து விடவே அச்சிலை பொற்சிலையாக காட்சி தந்தது. மண்சிலை பொன்னாகவே தங்கள் குருவிடம் சென்று விபரத்தை கூறினார்கள். உண்மையில் அது பொன் சிலைதான், திருடர்களிடமிருந்து காப்பாற்றவே அதற்குமேல் களிமண் பூசிவைத்தேன் என்றார்.
வெளியே உள்ளமண் கரைய உள்ளே உள்ள பொன் தெரிந்தது, மனித உயிரின் உடல்களும் களிமண் சிலைபோலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளே உள்ள அவர்களின் பொன்ஆன்மாவை அடையாளம் தெரியாமல் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கின்றனர்
பயம், ஆசை, பேராசை, கோபம், ஆணவம், கர்வம், பொறாமை இவைகளிலிருந்து விடுபட்டால் வெளிச்சம் உள்ளே வரும், அப்போது உள்ளே இருக்கும் உண்மைகள் புரியும். அது ஆன்மீக உணர்வுகளினால்தான் தோன்றும் என்றார்.
எந்தவித அசைவும் இன்றி வெறுமனே இருக்கும் மரக்குச்சியை தண்டம், என்பதால் அதேபோன்ற நிலையில்உள்ள ஓர் ஆன்மாவின் உடலை நாம் தண்டச்சோறு என்கின்றோம். ஆனால் கரியாகி மண்ணில் மறைந்த அந்த தண்டம்கூட ஓர்நாள் வைரமாகி ஒளிர்கிறது.
ஆன்மாக்களே! இப்போது உலக்கை தண்டமாக ‘முசலகிசலயம்’ ஆக பலரால் நினைக்கப்பட்ட நீங்களும் என்றாவது ஓர்நாள் மனிதர்களுள் மாணிக்கமாக பிராகாசிக்க அறிவு அருள் பெற விழையுங்கள். வெற்றி பெற்று ஒளிர்விடுங்கள். உள்ளே இருக்கும் இருளில் ஒளியை கண்டு ஆனந்தப்படுங்கள்.
நம் ஆன்மாவின் நல்ல உணர்வுகொண்ட செயல்களை ஆங்கே நாம் காணமுடியும். இதைத்தான் ஞானிகளும், புராணங்களும் “உனக்கு உள்ளே கட, உன்னை உன் மனதின் உள்ளே கடந்து செல்” என்றார்கள். அப்போது தெரிவான் உள்ளே உள்ள “கடவுள்”. அதாவது ‘உள்ளே கட, கட உள்ளே’ என்றநிலையில் கடவுளின் தரிசனம் காணமுடியும். நீ பந்த பாசங்களையெல்லாம் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பார் என்பது பொருள்.
சூரிய ஒளியின் மூலம் பகலிலும், சந்திர ஒளியினால் இரவிலும், மற்றும் செயற்கை ஒளியினாலும் எந்நேரமும் பொருட்களைப் பார்த்து அறிந்து கொள்ளமுடிகின்றது, எந்த ஒளியில்லா நிலையிலும், மனதில் பொருட்களை பார்த்து பழகிய அளவில், கற்பனை செய்து கண்டு கொள்கின்றோம்.
அதுபோன்றே நம் உணர்வு, மன எண்ணங்கள் கொண்டு நமக்குள்ளே கடவுளைத் தேடினால் காணமுடியும். எதைத் தேடுகிறாயோ அது உன்னுள்ளேயே இருக்கின்றது.
கடவுள் உன் வாழ்க்கைப் பயணத்தில் உனக்குத் தெரியாமலே உன்னுடன் பயணம் செய்யும் அனுபவசாலி. வாழ்க்கையின் ரகசியங்களை நீ உணர்ந்து புரிந்து கொள்ள உதவுபவர். அவரை நாடுவதால் உனக்கு அமைதி, நிம்மதி, சந்தோஷம், இன்பம் எல்லாம் கிடைக்கும்போது அது உனக்கு நன்மை என்பதால் அவரை நீ வணங்குவதில் எந்த தவறுமில்லை. நீ வணங்குவதாலும், வணங்காததாலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.  
“அகம் ப்ரம்மாஸ்மி ”  என்றால் இதயத்தின் நடுவே வாசம் செய்பவன் என உபநிடதங்கள் கூறுகின்றன. இறைவன் அங்கே கட்டைவிரல்/ அங்குள அளவில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் நாம் கடந்து உள்ளே சென்றால் நிச்சயம் அங்குலபிரமான இறைவனைக் காணமுடியும். அளவிடமுடியாத பிரமாண்டமானவன் உலக நன்மைக்காக ஒவ்வொரு உடலிலும் இந்த அளவிற்கு வெளிப்படுகின்றான்.
ஹிருதி (இதயம்)+ அயம் (பரமன்)- ஹிருதயம். அதனால் தான் பரமன் இருக்குமிடம் “இருதயம்” என்பர். இதை புரிந்து செயல் படுதல் நன்று. அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும் தங்கள் உடலைக் கடந்து மனதுள் பிரவேசித்து, அதாவது கடந்து உள்ளே சென்று, அங்குல பிரமானமுள்ள இறைவனை கண்டு தரிசித்து பூஜித்தும் விடுகின்றனர்
உலகில் உள்ள ஜீவராசிகள், தாவரங்கள் அனைத்தும் ஓர் அளவுகோளுக்கு உட்பட்டே படைக்கப் பட்டிருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவன் எந்த அளவு கோளின் அளவுகளுக்கும் எட்டாமல், அகப்படாமல் இருப்பதன் அளவு என்ன?
உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். “விஸ்வவியாபி” என்று அதனைக் கூறுவர். அனைத்திலுமுள்ள ஒருவன் நம்முள்ளும் இருப்பது சரிதானே! அதை நாம் உணரவேண்டும்.
‘மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னிடம் பிரம்படி பட்ட’ நிகழ்வு அறிவோம். சிவனின்மீது பட்ட அடி எல்லோர் முதுகிலும் பட்டதென்றால் இந்த நிகழ்வின் உண்மை என்னவெனில், அடித்தவனும், அடிபட்டவனும், உயிர்குலமெல்லாமும் சிவனின் அம்சம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவே.
கண்களைமூடி கருவரையை-கழுத்து என்றும், விமானம்-சிகரம்-தலை என்றும், கலசம்-சிகை என்றும் நினைத்துப் பாருங்கள். கோவில் கர்பகிரகமே ஒர் இறை உருவமாகக் காணப்படும். அதனால்தான் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கப் படாவிடினும், கருவரைக்கு மேல் விமானச் சிகரம், கலசம் வைத்து கட்டுகின்றனர்.
ஆகமவிதிப்படி கட்டப்பட்ட ஆலயத்தில், மனித உடம்பின் பாதங்கள்- ராஜகோபுரம், முழங்கால்- ஆஸ்தான மண்டபம், துடை-நிருத்த மண்டபம், தொப்புள்- பலிபீடம், மார்பு- மகாமண்டபம், கழுத்து- அர்த்த மண்டபம், சிரம்-கர்பக்கிருகம், சிரத்தின் உச்சி-விமானம். என்ற அமைப்பில் கட்டப்படுகின்றது.
திருப்பாதம்- பூவுலகம் என்றும், சிகை-பிரம்மலோகம் மற்றுமுள்ள புவர்லோகம், ஸுவர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், மஹாலோகம் ஆகிய 7 உலகங்களும் இறைவனின் உடலில் அடங்கிய பகுதிகளாகும். எனவே கோவிலை வலம் வருவது என்பது வெறும் வழிபாடு மட்டுமின்றி ஏழு உலகங்களையும் வலம் வருவதற்குச் சமமானது என்றால் இந்த செயல் எவ்வளவு புனிதமானது. ஆகவே இறைவழிபாட்டிற்குப்பின் வலம் வரவேண்டும்.
அந்தராலம், அந்தர்மண்டலம்: “அந்தராலம்” என்பது இறைவனின் கழுத்துப்பகுதி. இந்தப்பகுதியில் வலம் வரக்கூடாது. “அந்தர்மண்டலம்” என்பது கழுத்திற்கு அடுத்த பகுதி. இது தான் நாம் வலம் வரவேண்டிய பகுதி. ஏனெனில் படுத்துக் கொண்டு கழுத்தில் கைவைத்தால் நம் மூச்சுக்காற்று கைமேல் படுவதில்லை. கையை சிறிது நகர்த்தி நெஞ்சின் மீது வைத்தால் மூச்சுக் காற்று படுவதை உணரலாம்.
இதைப்போலவே கழுத்துப் பகுதியான ‘அந்தராலத்தில்’ அதிர்வலைகள் இருக்காது. கழுத்தை அடுத்துள்ள ‘அந்தர்மண்டலத்தில்’ இறை அதிர்வுகள் அதிகமாக கிடைக்கும்.
நாம் எவ்வளவு பெரியமலை, ஆறு, கடல், என பெரியவைகளையெல்லாம் பார்த்து மகிழ்ந்து பெரியது என அளவிடுகிறோம். இவ்வளவு சிறிய கண்ணால் அவ்வளவு பெரிய நிலைகளை கண்டு அளவிட முடியும்போது, சிறிய மனத்தில் ஏன் மிகப்பெரிய இறைவனை இருத்தமுடியாது. காணமுடியாது. கண்டிப்பாக முடியும். ஒருமுனைப்புடன் நினைவு கொண்டால் நம் இதயத்தில் இறை குடியிருக்கும். அதை உணரமுடியும்.
தோண்டிய குழியிலிருந்து எடுத்த மண்ணை மீண்டும் குழியினுள் நிரப்பினால், 1.முழுவதும் குழி நிரம்பினால் அது உத்தமமான இடம், 2. மண் உபரியாக இருந்தால் மத்தியமான இடம், 3.மண் பற்றாமல் போனால் அதமமான இடம். என நிலத்தின் தன்மைக்கு அளவு கோல் உள்ளது. அதுபோல மனம் உத்தமமானதாக இருக்க வேண்டும்.
மனதில் கெட்ட, தீய, வேண்டாத எண்ணங்களை எடுத்து, அழித்துவிட்டு நல்ல உயர்வான மனதின் தன்மை கெடாமல், எப்போதும் நல்ல எண்ணங்களை இட்டு நிரப்புங்கள். நல்ல செயல்களைச் செய்ய விழையும் நல்ல மனமாக இருக்கட்டும். அந்த உத்தமமான இடத்தின் இருளை நீக்கி ஒளியை பரப்புங்கள்.
உள்ளே கடந்து செல்லுங்கள். ‘கட உள்ளே’ என்று சென்று கடவுளைக் கானுங்கள். அந்த உத்தமமான நல்ல உள்ளத்தை உருவாக்க எளிமையான சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள். உன்னுள்ளேயும் கடவுள் இருப்பதனால்தான் கடவுளுக்கு படைத்து நெய் வேத்தியம் செய்தவைகளை மனிதனை உட்கொள்ள வைத்துள்ளார்கள்.
ஒருவரால் வாடிய பயிருக்காக வாடவும், வற்றிய வயிற்றுக்காக வருந்தவும் முடியுமானால் அவரால் உள்ளே இருக்கும் இறையை உணரமுடியும். புல்லில், பூவில், நீரில், நெருப்பில், பறவையில், மற்ற உயிரினங்களில் உள்ள ஆன்மாக்களை உணரத் தொடங்கினால் நீ இறையை நோக்கி பயணம் செய்கின்றாய் என்று அர்த்தம்.
அப்படி உள்ளே கடந்து கடவுளைக் கண்டால் அந்த நல்ல உள்ளத்தின் அதிர்வுகள் உங்களைச் சுற்றியிருக்கும். உங்களால் அதை உணரமுடியும். ஏன் உங்களைச் சுற்றியுள்ள அனைவராலும் அது உணரப்படும். உங்கள் சொல், வார்த்தைகள் அவர்களை மெய்மறக்கச் செய்யக்கூடும்.
இந்த அதிர்வுகளை கரு குடிகொண்டுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலும் உணரலாம். இயற்கையோடு நாம் ஒன்றியிருந்தால் அதை எப்போதும் உணரலாம். நம் முன்னோர்கள் கிரகங்களை ஆரய்ந்து கணக்கிட்டு பல அரிய, பெரிய விஷயங்களைச் சொல்லி இருக்கின்றார்கள். விஞ்ஞான உலகத்தின் பல ஆரம்ப நிலை செயல்கள் பண்டைக் காலத்தில் முன்னோர்களால் தெரிவிக்கப்பட்டவை.
இது எப்படி சாத்தியமாயிற்று? அவர்கள் இயற்கையை மதித்தார்கள். வணங்கினார்கள். அதனோடு ஒன்றிப் போனார்கள். உண்மைதனை உணர்ந்தார்கள். நினைத்தபோது அதை உபயோகித்தார்கள். உலகுக்கு உபதேசித்தார்கள். அதன் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம். எனவே இயற்கையை மதித்து வழிபட்டு, ஒன்றி உணருங்கள், நீங்களும் உன்மைகளை உணரலாம்.
நதி தன்னிடமுள்ள நீரை அருந்துவதில்லை. ஓர் மரம் தன்னிடம் உற்பத்தியான பழங்களை உண்ணுவதில்லை. ஓர் செடி, கொடி தன்னிடம் பூத்த மலர்களை ரசிப்பதோ, நுகர்வதோ இல்லையே! பூ, கனி தரு மரம், செடிகள் எல்லாம் பிற உயிர்களுக்குப் பயன்படுகின்றன.
அவைகள் அப்படியே மற்ற ஜீவராசிகளுக்கு அளிப்பதுபோல மகாத்மாக்களும், சாதுக்களும் மற்ற ஆன்மாக்களுக்கு உதவுவதற்காக வாழும் உயர் ஆன்மாக்கள். அவர்களைவிட அவர்களின் போதனைகள், பாதைகள், வழிகாட்டுதல்கள் முக்கியமானவை.
அந்த ஊரில் அவரே பெரிய செல்வந்தர். தனவான். அவர் ஒருநாள் ஒரு ஞானியைச் சந்தித்தார். சுவாமி, என்னைக் காப்பாற்றும்படியான ஒரு உபதேசம் கூறுங்கள் எனக் கேட்டுப் பெற்றார். அவர் சொன்னது, ‘எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை ஒருமுறைக்கு மூன்றுமுறை தீர ஆலோசித்து, உன் மனசாட்சிக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அதைச் செயல்படுத்து’ என்பதாகும். செல்வந்தருக்கு அந்த வாக்கியம் மிகவும் பிடித்திருந்தது. அதை அவர் தன் படுக்கை அறையில் எழுதிவைத்தார்.
அந்த ஞானியின் தர்மசெலவினங்களுக்கு சில லட்சங்களை நிதியாக அளித்தார். செல்வந்தர் இப்படி செலவு செய்வது அவசியமில்லை, பணத்தை விரையம் செய்கிறார் என அவரின் சொத்துக்குக்கு வாரிசுகளில் ஒருவர் நினைத்தார். தன் பங்கில் பணம் குறைகிறதே என்ற வருத்தம் அவரை ஓர் தீச்செயல் செய்ய தூண்டியது. சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தார்.
அப்போது செல்வந்தர் நோய்வாய்ப்பட்டார். நோய் குணமாகாததால் அடிக்கடி வைத்தியரை மாற்றினர். ஒரு வைத்தியர் செல்வந்தருக்கு மருந்து கொடுக்கும்போது சுற்றும் முற்றும் பார்த்து இடுப்பில் மறைவாக வைத்திருந்த குப்பியை எடுத்து கலக்கினார். செல்வந்தருக்கு கொடுக்க நினைக்கும்போது அவர் அறையில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்தார்.
அதைப் படித்ததும் தன்னை யாரோ கவனிக்கின்றார்கள் என்ற பயம் வந்தது. தன் செயல் பாட்டின் விளைவுகளை யோசிக்காமல் செய்து விட்டோமோ என்ற நினைவு வந்தது. மனசாட்சிப்படி ஒரு வைத்தியர் இப்படி செய்வது சரியில்லை என்ற நினைவும் சேர பதட்டத்துடன் சென்று முன் தான் கலந்து வைத்திருந்த மருந்தை எடுத்துக் கொட்டிவிட்டு, வேறு மருந்தைச் செல்வந்தரிடம் கொடுத்தார்.
இவர் செயல்களைக் கவனித்த செல்வந்தர், எதையோ கலந்து பின் அதை கொட்டி விட்டு வேறுமருந்தை கொடுக்கின்றீர்கள் என்றார். பதறிய வைத்தியர் உண்மையை உலறி விட்டார். செல்வந்தரின் உறவினர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தான் தவறு செய்ததாகவும், நீங்கள் எழுதிவைத்திருந்த இந்த உபதேசம்தான் என்னை திருத்தியது என்றும், தன்னை மன்னிக்கும் படியும் கூறினார்.
உறவினர் தண்டிக்கப்பட்டார். மகான்களின் உபதேசங்கள் வெறும் வார்த்தைகளல்ல. அந்த சொற்களின் அர்த்தங்களை உணரத் தொடங்கிய உயிர்களுக்கு உலக வாழ்வு ஆனந்தம்.
மனிதன் மட்டும்தான் தனக்கு என்றும் தன் இனத்திற்கு என நினைத்துச் செயல் படுகின்றான். படைப்பின் தன்மை, சில உயிர்கள்வாழ மண்ணில் பல உற்பத்தி செயல்கள் நடைபெறுகிறது. நீ சேமிக்கும் பலாபலன்கள் உனக்கு நன்மையாகின்றதோ அல்லது தீமையாகின்றதோ! கண்டிப்பாய் உன் வாரிசுகளுக்கு அதன் பலன் உண்டு.
நீ சேர்க்கும் செல்வங்கள் எவ்வாறு அவர்களுக்கு பாத்தியதையாகின்றதோ அதுபோன்றே உன் செயல்களின் நன்மை, தீமைகளிலும் பாத்தியதை உண்டு. இதைப்புரிந்து கொள்ளுங்கள். தீயவழி சென்று தீமைகள் புரிந்து செல்வங்களைச் சேர்த்து நீங்கள் அனுபவித்தும் அனுபவிக்காமலும் சென்று உங்கள் குலவாரிசுகளுக்கு ஏன் தீமைகளை விட்டுச் செல்லவேண்டும். சற்று நிதானமுடன் சிந்தியுங்கள். உங்கள் செயலில் மாற்றம் ஏற்படும்.  
ஒரு ரிஷியின் மகள் மணப்பருவம் அடைந்தாள். வேதநெறியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவனை மணமுடிக்க ரிஷி விரும்பினார். ஆனால் அவள் தனக்கு வரும் மாப்பிள்ளை, ‘குருடும், குருடு இல்லாதவருமான’ ஒருவரை மணக்க விருப்பம் தெரிவித்தாள். ஒரே நேரத்தில் குருடாகவும், குருடற்றவனாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும், அவனை எப்படி தேடுவது. எப்போது மகளுக்கு திருமணம் என கவலை கொண்டார் ரிஷி. காலம் கடந்தது.
ஒருநாள் வேறு ரிஷியின் மகன் ஒருவன் முறைப்படி வந்து பெண் கேட்டான். அவனிடம், மகளின் குருடும், குருடற்ற மணமகனையே மணக்க விருப்புவதாகக் கூறிய நிபந்தனைகளைக் கூறினார்.  அவன் அந்தப் பெண்ணிடம் சென்று, எந்தக் கண்ணால் மனம் நினைக்கின்றதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, உலகம் ஞானம் எனச் சொல்லுகின்ற அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. அது ஒருவகைக் குருடே!
தினமும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறேன். காரியமான இயற்கையான பிரபஞ்சத்தையும், காரணகர்த்தாவாகிய பரம்பொருளை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவதால் என் செயல்களில் கடவுளைக் காண்பதால் நான் குருடு அல்லாதவனாகவும் இருக்கின்றேன், என்றதைக்கேட்ட அந்த பெண் அவனை கணவராக ஏற்க சம்மதித்தாள். இறக்கும் தருவாயில் பீஷ்மர், தருமருக்கு சொல்லிய அறம். அதுபோலவே நம்மில் ஒவ்வொருவரும் குருடாகவும், குருடற்றவருமாக இருத்தல் சிறப்பு-குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879468
All
26879468
Your IP: 54.224.52.210
2024-03-19 09:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்