Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

சொல்மயக்கம்!

Written by
Rate this item
(2 votes)

சொல்மயக்கம்! தன்னடக்கத்தின் எதிரி!

வாழ்வில் நாம் கேட்கும் சில சொற்கள் பல தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. சில சொற்களைக் கேட்டவுடன் அது நம்முள் ஒர் உணர்ச்சியை தோற்றுவிக்கும் தன்மையுடையது. அந்தச் சொற்கள் என்ன! அதன் தன்மை என்ன என்பதை அறியாமலே, அதைப் பார்க்காமலே அதைப் பற்றி ஓர் எண்ணம் நம்முள் பதிவாகியிருப்பதால் அந்த எண்ணம் ஒர் உணர்வை வெளிப்படுத்தும். அது அவரை அந்தப் பகுதியில் ஓர் குழப்பத்தை தோற்றுவிக்கும் வலிமையுடையது. இது ஒருவித மயக்கம். அறிவின் மயக்கம்.

சப்தக் ஜ்ஞானானுபாதீ வஸ்துசூன்யோ விகல்ப

ஒலி முதலிய ஒரு நிரந்தர நிலைப்பாட்டினால் ஒரு பொருளைப் பற்றி கற்பித்துக் கொள்ளும் அறிவானது விகல்பம் எனப்படும். மனத்தில் தோன்றுவது கல்பம். மொழியால் அதைக் கூறுவது ஸங்கல்பம். அதைக் கற்பனையாக மாற்றிக் கூறுதல் விகல்பம், இல்லாத ஒரு பொருளை இருப்பதுபோல் கற்பித்தலாகும். பாம்பு இல்லாமல் பாம்பு என்ற வார்த்தை ஒரு கூட்டத்தை கலைக்கும், சொல்லைக்கேட்டு அது இல்லாத இடத்தில் கற்பித்துக் கொள்வது. பொருள் இல்லாதிருக்கும்போது வெறும் சொல்லைப்பற்றி நிகழ்வது- சொல் மயக்கமாகும் (விகல்பம்). ஒரு சொல்லைக் கேட்டவுடன் அதன் கருத்தை ஆராயக் காத்திராமல் உடனே ஒரு முடிவுக்கு வருகிறோம். இது சித்தத்தின் வலிமையின்மைக்கு அறிகுறி. மனம் அடக்கம் குறைந்த நிலை. சில செய்திகள் காதில் விழுந்ததும் மனம் ஏன் கோபம் அல்லது வருத்தம் போன்ற நிலைகளை அடைகிறது. சொற்கள் காதில் விழுந்ததும் தொடர்ந்து விருத்தி என்கிற தொடர் எண்ணங்கள்கள் வராது தடுத்து பழகுதல் நன்மை பயக்கும். அவனே தன்னடக்கம் உடையவன்.
அந்த நிலைக்கு வர நீங்கள் உங்கள் உள்ளே உங்களை தயாராக இருக்கும்படி செய்யுங்கள். உங்கள் சித்தம் எப்போதும் வலிமையுடையதாக இருக்கட்டும்.-குருஸ்ரீ பகோரா

Login to post comments