Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:16

சிவபூசை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####


சிவபூசை!

1823. அரிய உயிரின் உள்ளம் எனும் மனமண்டலமே சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறையாகும். ஊனால் ஆகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்திருக்கும் இடம் ஆகும். வள்ளலான தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாயிலாகும். ந்ன்கு அறிந்து தெளிவு பெற்றார்க்குச் சிவனே சிவலிங்கம் ஆகும். இவ்வகையாய் உணர்ந்து வழிபடுபவர்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மிக்க ஒளியுடைய விளக்காகும்.

1824. வேள்வித் தீயுனுள் இடப்படும் அவியை ஏற்கும் விரிந்த கதிரையுடைய சிவபெருமானுக்குப் படைக்கக்கூடிய பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் படைக்கப்படுபவை மனத்தை மகிழச் செய்யும் பாடல்களான உணவாம். அதை நாம் படைப்போம். அதுவே அப்பொருமானுக்கு பால் நிவேதன்யம் ஆகும்.

1825. பால் போல் இன்சொல்லையுடைய பராசத்தியின் பாகனான பராபரனை சதாசிவ மூர்த்தியைத் தலையில் நிலைப் பெறச் செய்து உச்சி முகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் துதித்துச் சீலமான முகத்தைச் செய்யச் சிவம் ஆவர்.

1826. சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்ரி மற்றவர்க்கு எடுத்துக் கூறுவதும் ஆன இரண்டு வழிகள் அல்லாமல் நாதவடிவினனான சிவத்தைக் காண்பது அரிதாகும். நாத வடிவினனான சிவத்தைக் கண்டு மகிழ வல்லவர் நீரை முகமாக உடைய சுவதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தை தொடுயோகத்தில் அடையத்தக்கவர்.

1827. திருமுழுக்காட்டிலும் அலங்காரத்திலும் விளக்கிலும் தேவர்களின் மனத்திலும் இறைவன் வீற்றிருக்கின்றான். இதற்குக் காரணம் பஞ்சக்கவ்விய உபசாரத்துடன் வழிபாட்டு முத்திரையுடன் பக்தர்களுடன் கலந்து வழிபட்டதே ஆகும்.

1828. சிவபூசையான புண்ணியச் செயலைச் செய்பவர்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலான சிவம் அவ்வாறு பூசை செய்பவர்க்கு அருள் வழங்கி நிற்பான். எண்ணில்லாத பாவிகள் எம் தலைவனான சிவத்தைப் பொருத்தமுற அறியாமல் வீணே அழிகின்றனர்.

1829. சிவனின் ஒன்பது நீர்களிலும் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பாய். அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தவர் திருவடியைத் தூய்மையாய்க் கழுவித் தெளித்துக் கொள்ள முத்தி கிட்டப் பெறுமென்பது நம் மூலன் கூறியதாகும்.

1830. தேவர் பெருமானே அறிவு பூர்வமற்று ஞானியர் உறவு கிட்டப் பெற்றாலும் சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி மறவாமல் உன்னை வழிபடும் ந்ன்மையை மிகவும் பெறுவதற்கு அருள் செய்வாயாக.

1831. ஆயிரம் திருப்பெயர்களையும் சிவனின் திருப்பெயரான சிவசிவ என்பனவற்ரையும் துதிக்கும் வகையால் என் இறைவன் விளங்குவான். அவ்வமயத்தே வழிபாடுகளும் தேவர்கள் கூட்டமும் அலை ஓயாத கடலும் நீங்கள் வாழும் உலகத்தில் உம் ஆணைவழி நிற்கும்.

1832. உயிர்களிடம் ஐந்து ஐந்தாகப் பொருந்தியுள்ளவற்றைப் பக்குவம் செய்து தேவர் கூட்டம் வணங்க எனக்கு ஓர் இறுதியும் இல்லாத தலைவன் சிவத்தின் அருளுடன் சுவாதிட்டான சக்கரத்தில் பொருந்தி தெளிந்த உலகத்தின் ஐந்து இயல்புகளை அமைத்தருள் செய்தான்.

1833. சுவதிட்டான சக்கரத்தினின்றும் ஊர்த்துவ முகமாய் பாயும் வான் கங்கையின் நீரைக்கொண்டு கருக் கொண்ட மேகம் மேல் செல்வதைப் போல் மேலே சென்று தேவர்கள் தளிர்த்துள்ள பாசத்தில் கிடந்து தயங்கி நின்று வழிபடத் தவறாமல் எம் பெருமானின் அருள் வழிபடுவார்க்கு வாய்க்கப் பெறும்.

1834. நீர்ப் பெருக்கினை உடைய சுவதிட்டான சக்கரத்தினின்று விரிந்து மேல் ஒளி மண்டலத்தில் விளங்கும் சதாசிவருக்கு மனம் என்ற வான் மண்டலத்தில் புகுந்து நீண்டு உயர்ந்துள்ள ஆயிரம் இதழ்த் தாமரைப் பூவையேந்தி வஞ்சத்தனமையுடைய பிறவிக் கடலைக் விட்டு உண்மையுடன் வணக்கம் செலுத்தமாட்டார். சேற்றுடன் கூடிய துன்பக் கடலுள் விழுந்து கெடுகின்றனர்.

1835. உப்பங்கழிகள் பொருந்திய குலிர்ச்சியுடைய சுவாதிட்டான கடல் கள்ளான இன்பப் பெருக்கைக் கொண்டது. அதனை வழிபடுபவர்கள் விரிதலும் குவிதலும் உடைய மலர் மொட்டுகளின் இயல்பை அறிய மாட்டார்கள். அதனால் அவர்கள் பழியிலே விழுவர் ஆனால் பலரின் பழிச் சொல்லும் கெட உடலைக் கடந்து மேலே செல்பவரின் மேல் முகமாக உள்ள சகசிரதளத்தில் சிவன் பொருந்தி நிற்கின்றான.

1836. பயன் அளிககக் கூடிய பொருள் ஒன்று உண்டு. பயனை எண்ணிப் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்குச் சிவன் தானே தன் வரவினைக் கூறும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச் சார்தலும் அதுவே வழியாய் எப்போதும் வெளிப்பட்டு விளங்கினான்.

1837. பெருமை கொண்ட மலர்களைத் தூவிப் பூசனை செய்து நின்று ஆரவாரம் செய்து எம் ஈசனின் அருளான திருவடியை வழிபடுபவர் முதன்மையான திருவுருவத்தைத் தாங்கி நின்ற தூய்மையானவனும் ஆன சிவனை யாரும் வழிபட்டு மனதில் உணரவில்லை.

1838. தேவர்களுடன் கூடிப் பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரின்று வான் கங்கையின் மேல் எழும் உணர்வில் வெளிப்படும் தூய இறைவனை நான்முகன் திருமால் உருத்திரன், ஆகிய மூவருடன் கலந்தும் வேறாகவும் விளங்கும் முதல்வனான சிவன் அருளும் முறையை எவர் அறிந்து எண்ண வல்லவர்கள்!

1839. சிவனை நினைக்க வல்லவர் சுவாதிட்டான மலரினின்று சுழுமுனை வழியாய் மேல் நோக்கிப் பாயுமுணர்வு என்னும் நீரை ஏந்தித் தவறு இல்லாது இறைவனின் பெருந்தவத்தை விரும்பி இரண்டு கண் எனும் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப் பற்றி மழைபோல் பொழியும் மேகம் போன்ற ஒளியில் நிலைத்து நில்லுங்கள்.

1840. காமத்தை வென்று காலம் தாழ்த்தாமல் விந்துவைத் தர்ப்பணம் செய்யுங்கள் என்று முன்னோர் உரைத்தனர். அங்ஙனம் செய்து சிவம் விளங்குகின்ற முறையில் அமைய விந்து நாதம் கலக்கும் சுவதிட்டான மலர் கொண்டு நாள்தோறும் வழிபட்டால் சிவன் உம்மை ஏற்றுக் கொள்வான். இது முன்பே சொல்லப்பட்டது அன்றோ!

1841. சுவதிட்டான மலர் கதிரவ சந்திரர்களாகிய கண்கள் என்பனவற்றை இறைவனுக்குச் சாத்தியும் எவராலும் தோற்றுவிக்கப்படாதவன் எனத் துதித்தும் வணங்கியும், நாள்தோறும் உலகினர் வழிபட அறிய மாட்டார். துன்பத்தைப் போக்கி மனதில் குற்றத்தை நீக்கினால் அதுவே பெருந்திக்கான வீட்டுலகம் போவதற்குரிய வாயில் ஆகும்.

1842 .உயிரின் தாமரையான சகசிரதளத்துக்கு மேல் இன்பம் உண்டாகுமாறு பொருந்தி எங்கும் விளங்கும் பரந்த சடையான ஒளிக்கிரணத்தையுடைய சிவத்தை மந்திர சாதனை செய்து சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் படியான மந்திரத்தை உலகத்தார் அறியார்.

1843. சாண் அளவுடைய உடலுள் மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும்படி அதன் உண்மை இயல்பை அறிபவர் இல்லை. அதைப்போற்றி வளர்த்து எண்ண வல்லவர்க்கு மாணிக்கப் பேரொளியாய் மனத்தில் புகுந்து விளங்குவான்.

1844. சிவன் பெருந்தன்மையுடைய நந்தியும் மாறு பாட்டைச் செய்யும் இருளினைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் என்மனத்தை தன் பேரருளால் இடம் கொண்டவனும் வேண்டியவர்க்கு வேண்டியது அருள்பவனும் ஆவான். அச்சிவனை வான் மண்டலத்து வாழ்பவர்களான தேவர்கள் தாங்கி நின்றனர்.

1845. சமய தீடசிக்கு உடல் தூயமை அடைந்து தன் செயல் நீங்கிடும் சிறப்பான தீட்சையால் மந்திரத் தூய்மை உண்டாகும். சமயத்தில் சிறந்ததான நிர்வாண தீட்சையால் கலை தூய்மை ஏற்படும். சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆசாரிய திருமுழுக்காட்டாம்.

1846. ஊழிதோறும் உணர்ந்து வழிபட்டவர்க்கே அல்லாது அழியாத ஆன்மாவை உணர இயலாது. பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலும் நான்முகனும் ஓர் யுகம் சென்றாலும் அவர்களால் அறியப்படாமல் ஞானியர் உச்சியில் விளங்குவான்.

#####

Read 2396 times
Login to post comments