Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:47

கேடுகண்டிரங்கல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####

கேடுகண்டிரங்கல்!

2084. ஒவ்வொரு கணத்திலும் தம் வாழ்நாள் கழிவதை அறியாத பாவிகள் வினைகள் என்னும் விதைகளைச் சேமிப்பர். விதை போகத்தை அறுவடை செய்ய உடம்பான நாற்றங்காலில் அந்த விதையை முளைக்கும்படி செய்வர். தமக்குற்ற வினைப் போகத்தால் உண்டாகும் துன்பத்தைச் சற்றும் உணர மாட்டார்கள். அவர்கள் கொழுந்து விட்டு எரியும் தீயில் கெடுவதைப் போன்/றவர் ஆவர்.

2085. வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும் மக்கள் சாதனை இல்லாமல் வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனை அடைவது. நேர்மை பொருந்திய அகண்டமாகிய் மலம் அற்ற சிவத்தினது திருவடியை வணங்கி ஆதியான இறைவனிடம் அன்புடன் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவராய் விளங்குவர்.

2086. அறிவற்ற மக்கள் உடலைப் பெற்றேனும் நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து தம் உடலை வளர்த்து அந்த உடம்பே உயிர் என மதித்து திரிவர். அகன்ற மலைச்சரிவில் தீப்பொருந்திய முருட்டுக் கட்டையில் ஏறி இந்த உடம்பு கிடக்கும் என்பதை அறியார்.

2087. முன் காலத்தில் சனகர் முதலிய முனிவர் நால்வர்க்குக் கயிலாயப் பதியில் சேர்ந்து இருந்து கல்லாலின் மரத்தின் கீழ் இருந்து அறக் கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்த சிவத்தை உணராமல் பழிச் சொற்களை பேசும் மக்கள் தம் உயிர் அறிவையே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர்.

2088. நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும் எம் சிவபெருமான் அடியவர்க்கு அருள்வான். அஃது அறிந்தும் உலகத்தவர் முதற் கடவுள் அது என்றுன் இது என்றும் பேசி நிலை கெடுதலால் குறைவடைந்தனர்.

2089. இன்ப நிலையில் பிறந்து இன்பச் சூழ்நிலையில் வளர்ந்து இன்பப் பொருளான சிவத்தை இன்பம் அனுபவிக்கும்போதே எண்ணுவதை விட்டுச் சிலர் இன்பத்தை விரும்பித் சோறு ஆடை என்னும் துன்பத்துள் நின்று துன்பத்தையே எண்ணிக் கொண்டு அறியாமையில் உழல்கின்றனர்.

2090. பெருவதற்கு அருமையான மனிதப் பிறவியை இறைவனது அருளால் பெற்றிருந்தும் பெறுதற்கு அரிய சிவனது திருவடியைப் போற்றாது இருக்கின்றனர். பெறுவதற்கு அரிய பிறவியைப் பெற்ற மக்கள் எல்லாம் பெறுவதற்கு அரிய இன்பப் பேற்றை இழந்தனர்.

2091. வேட்கை பொருந்திய உள்ளம் அளவில்லாத இளமை அன்பு என்ற இவை ந்ல்ல நிலையில் உள்ள காலத்தில் மாற்றம் தரும் ஓர் உடல் உறவு கொண்டு நிலை பெற்ற மாதவனான சிவனை எண்ணி இன்பம் பெறாமல் இவ்வுலக்த்தவர் கெடுகின்றனர்.

2092. மேல் பாடல் முறையில் இளங்கதிரவன் போன்ற வடிவம் வாய்க்கும். அவ்வாறு அக்கினி மண்டலத்துள் அயர்ந்த தலைவனும் இம் முறையில் சுவாதிட்டான முலாதாரங்களில் விளங்கும் ஈசனுமான இறைவனின் உண்மை இயல்பை இதுவரை விசாரனை செய்யாமல் இருந்தோம் என்னே அறியாமை.

2093. குருவானவர் காட்டிய குறியில் பொருந்திச் சீவனைக் கூடமாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர் நூல்களில் தாம் கண்ட நயத்தைப் பேசித் திரிவர். இறைவன் செய்த உதவிகளை எண்ணி அவனது புகழைப் பாடமாட்டார். வீணாகக் களியாட்டம் ஆடுவதில் வல்ல இவர்கள் எய்தும் பயன் யாது.

2094. உள்ளத்தில் நிறைந்து எழுகின்ற சோதியை நம் செம்பொருளான சிவம் என்று நம் தலைவனை நாள் தோறும் உறங்கும்போதும் துதியுங்கள். அவ்வாறு தொழாவிட்டால் நம் ஐந்து பொறிகளூம் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போல் ஆகும்.

2095. விலங்கு மனிதர் தேவர் பறவை என்பனவற்றால் இறைவனிடம் அன்பு கொள்ளாதவை இல்லை. ஞானத்துடன் பொருந்திய மாதவம் செய்த ஞானியர் சிவத்தை எண்ணுவதுடன் அமையாமல் சிவ அமுதத்தை உண்டு திளைப்பர். மகிழ்ச்சியால் ஓடுவர். இவ்வுலகில் பிறந்ததால் ஆகிய பயனை உறுவர்.

2096. நேர்மையில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றார். அது போன்ற முறைப்படி இறைவனை பேரொளியாய் அறிந்து போற்றுபவர் இலர். ஆனால் நான் அவனை நாம் பெறுகின்ற முதல் பயன் என்றும் தேவர்க்கு மேலான தேவன் என்றும் அநதி காலம் தொடங்கி மனத்துள் வைத்து அவனையே விரும்புகின்றேன்.

2097. மிக்கத் தேனை உடைய மலரைப் பொருந்தி மகிழ் வதர்காக வண்டுகள் மிகுதியாய் தேனைச் சேர்ப்பதை மக்கள் அறியமாட்டார்கள். சுற்றி வரும் வண்டு நுகராமல் வாயில் வலிய வந்து சொட்டும் தேனும் எல்லாராலும் பெறுவதற்கு அரிய தேனும் போன்றவரான இறைவனை எவரும் உணரமாட்டார்.

2098. இறைவனை அறியும் நெறியை அறியாமல் இத்தனை காலம் வீணே கழிந்தது. வானவரின் தலைவனான அவன் அன்பினுள் இருக்கின்றான். அவன் ஒருவனே உயிர்கள் எல்லாவற்றிலும் உயிராய் உள்ளவன். அவ்வாறு இருந்தும் அறிவற்றவர் அவனைத் தங்கள் அனுபவத்தில் வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றனர்.

2099. வாழ்நாளைக் குதித்தோடச் செய்கின்ற கூற்றுவனுக்குச் சார்பாக வரையறுக்கப்பட்ட நாள்களும் பயன் இல்லாமல் கழிந்தன. அதற்கெண நடுக்கம் கொண்டிருந்து என்ன செய்யப் போகிறீர்கள். நீவிர் ஆறுதல் அடைய விரும்பினால் மூலாதாரத்தில் கொதிக்கின்ற கூழில் உள்ள அமுதத்தை பக்குவப்படுத்தி உண்ண அகப்பையை இடலாம்.

2100. இடைகலை பிங்கலையாகிய கரைபக்கம் சுக்கிலமாகிய வயல் விளைந்தது. சுக்கிலத்தின் வளமை சுருங்கிக் கெடுவதற்கு முன்பு அச்சத்தியைப் பயன்படுத்திப் பேரின்பத்தை அடையுங்க்ள். குண்டலினி சத்தி மேல் முகமாகத் தலையை அடைந்து இன்பம் ஊறுகின்ற தவத்தைச் செய்தால் மயிர் நரைத்து முதிர்ந்த பருவம் இல்லாமல் நீங்கும்.

2101. உயிர்க்ள் எல்லாம் உடலுடன் கூடித் தோன்றும் ஆதிப் படைப்பை அறிபவன் அறியாமை உடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவன், தானே எழுந்து விளங்கும் சோதி இத்தகைய இறைவனைக் குண்டலினி யோகம் பயின்றவர் முன் விளங்கும் ஒரு தெய்வம் என்?று அதை அடைய வகை அறியாமல் இருள் மிக்க உலகத்தில் ஆசை வைத்துக் கெடுகின்றனர்.

#####

Read 1553 times
Login to post comments