Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:22

முக்குற்றம்! முப்பதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

முக்குற்றம்!

2435. காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்கள் உள்ளன. அவையாவும் உயிர்களுக்குத் துன்பத்தை தருவன. அதனால் உயிர்கள் தங்களின் உண்மை வடிவத்தை அறியாமல் மாயா காரியமான இருளில் ஆழ்ந்து மயங்கியுள்ளன. காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களிலிருந்தும் விடுபட்டவர் பிறப்பு இறப்புகளை நீக்கினவர் ஆவர். அங்ஙனம் நீங்காதவர் அம் முக்குற்றங்களின் காரியமான மாயையில் துன்புற்று அழிவர்.

2436. காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிப் பாதுகாவலான திருவடி பற்றியிருக்கும் எனக்கு மணியோசை பொன்ற பிரணவத் தொனியினும் பொருந்துவதான ஒளியைத் தலைப்படுதல் இயலும்.

####$

முப்பதம்!

2437. தோன்றிய தீ என்ற பதம் அது என்ற பதத்தை சூழ்ந்திருக்க ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஆகிறாய் என்ற பதமும் என்ற இம்மூன்றோடும் பொருந்தியவன் பிறவி நீங்க அகண்டப் பொருள ஆவான். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பட்டவன் இவ்வுடல் ஒழியச் சிவன் ஆவான்.

2438. திருவருளால் பெறும் நாத உபாசனையில் நின்று பூதம் முதலாகப் பேசப்படும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி வேதம் உணர்த்திய நீ என்ற பதமாதல் உண்மையான நிலையாகும்.

2439. தத்பதம் என்பதும் துவம் பதம் என்பதும் திருவருளால் பொருந்தியிருப்பதும் அசிபதம் ஆகும். எல்லாவற்றாலும் அளவினால் அளவிட்டுக் கூற முடியாத சிவபெருமான், பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்தருளுகின்றான்.

2440. உயிரும் பரமும் அசிபதத்தில் பொருந்தித் தங்கு தடையற்ற சிவமும் கலந்தால் உவமம் கட்ட இயலத பாலும் தேனும் அமுதமும் போன்று அந்த இன்பப் பொருளால் வாய் பேசா மௌனத்தில் திகழ்வதாகும்.

2441. தொம்பதம்- சீவன் தத்பதமாக- பரமாக மாறுவது அசிபத நிலையில் உள்ளது. சிவனை நம்பிய சீவன் சிவத்தன்மை விட்டு பரன் என்ற பேரைப் பெற்றுச் சிவன் ஆகின்றான். மேலான உண்மையுடைய பெருவாக்கியத்தில் அழகிய அசி என்ற பதத்தின் செம்பொருளை உணர்த்திச் சிறப்பு மிக்க நந்தியின் சிவபெருமான் எங்களை ஆண்டருளினான்.

2442. ஐம்பது எழுத்துக்களும் வாக்கின் வடிவான சத்திகள் என்பதை மக்கள் அறியாதவர் ஆவர். அவருள் அறிந்தவர் சிலர் சத்திகளைக் கொண்டே இறைவனை நாடி உரைக்கப்படும் முப்பதத்தால் உணர்த்தப்படும் பொருளில் உணர்வைச் செலுத்தி விந்து நாதமாய்ச் சிவமாய் விளங்குவர்.

2443. நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலைநழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். ஐம்பொறிகள் ஐந்தும் சத்தம் முதலியவற்றை விடப் பரம் ஆகும். இந்த ஐம்பொறி அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே சிவன் அநாதியான நின்மலச் சாத்திரம் முதலியவற்றைக் கூட்டி உயிர்களைப் பக்குவப் படுத்துகின்றான்.

2444. ஆன்மா மேலான நின்மலத் துரியத்தில் நனவு நிலையில் விரியாத காலத்து நின்மலக் கனவு அமையும். இதில் அலையில்லாத கடல் போன்று அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்திடம் பொருந்திய போது அதுவும் நீங்கிய நின்மலத்துரியமே அசிபதமாகும்.

#####

Read 1659 times
Login to post comments