Print this page
ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:05

வாமன அவதாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

####


வாமன அவதாரம்!

வாமனம்-குள்ளம். குள்ளமான உருவை உடையவன். வாமன அவதாரம் மாகாவிஷ்ணுவால் 2முறை எடுக்கப்பட்டுள்ளது.

1.காஸ்யபர்-தனுவின் மகன் துந்து அரக்கன். பிரம்மனை நோக்கி தவமிருந்து தேவர்களால் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கி அதை சோதிப்பதற்கு இந்திரனிடம் போரிட்டு அவனை வென்று இந்திரப் பதவியைப் பெற்றான். தோற்ற இந்திரனும் மற்ற தேவர்களும் சத்ய லோகம் சென்று ஒளிந்தனர். இது தெரிந்த துந்து பிரம்மனின் சத்ய லோகத்தையும் வெல்ல வேண்டும் என நினைத்தான். அதுபற்றி தன் குல குரு சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டு அஸ்வமேத யாகம் செய்ய முடிவு செய்து யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து யாகத்தை ஆரம்பித்தான்.

யாகத்திலிருந்து வரும் நறுமணத்தின் மூலம் விபரம் தெரிந்த தேவர்கள் விஷ்ணுவை சரணடைந்தனர். ஐந்தாவது சதுர்யுக கிருதயுகத்தில் விஷ்ணு அவர்களுக்கு அபயம் அளித்து தன்னை வாமன உருவிற்கு மாற்றிக்கொண்டு தேவிகா நதிகரையில் யாகம் நடக்கும் இடத்தினருகில் நதியில் மூழ்கியும் மூழ்காமலும் தத்தளிப்பதுபோல் இருக்க இதைக்கண்ட துந்துவும் மற்றவர்களும் அவனைக் காப்பாற்றினார்கள்.

அவர்களிடம் என் தந்தை இறந்ததும் என் அண்ணன் நேத்ரபாலன் வாமனன் போன்று குறையோடு இருப்பவனுக்கு சொத்து தரமுடியாது என்று சொல்லி என்னை இந்நதியில் போட்டுவிட்டு போய்விட்டான். என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி என்றான். அப்போது அங்கிருந்தவர்கள் அவனுக்கு ஆதரவாக பேசி அவனுக்கு உதவி செய்ய பிந்துவிடம் சொன்னார்கள். வாமனன் பிந்துவிடம் எனக்கு வீடு எல்லாம் வேண்டாம் எனது காலால் மூன்று அடி மண் கேட்க, இவன் விவரம் போதாதவன் என்று நினைத்து சரி தந்தேன் என்று பிந்து வாக்கு கொடுத்தான்.

மறுகணம் குள்ளமான வாமனன் ஓங்கி வளார்ந்து ஒரு அடியால் உலகை அளந்து மறு அடியால் வானை அளந்து மூன்றாவது அடியை பிந்துவின் சிரசின்மேல் வைத்து அழுத்தி அவனை மண்ணில் புதையுண்டு போகச் செய்தார். இது விஷ்ணுவின் முதலாவது வாமன அவதாரம் ஆகும்.

2.இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட விஷ்ணு பக்தன் பிரகலாதன் விசாரமடைந்தான். தனது மகன் விராசனனை ராட்சச ராஜ்யத்திற்கு அரசனாக்கினான். இவன் மகனே பலி. சிவாலயத்தில் மங்கிய நிலையில் இருந்த விளக்கின் திரியை எதிர்பாராமல் தூண்டிய நல்வினைக்காக எலி அடுத்த பிறவியில் பலியாகப் பிறந்தான். அசுரனாகப் பிறந்தாலும் சாஸ்திர வழியிலே தானதர்மங்களில் சிறந்து விளங்க அவன் புகழ் இந்திரலோகம் வரை பரவ இந்நிலை தனக்கு ஆபத்து என நினைத்த இந்திரன். பயமடைந்த தேவர்கள் தந்தை காஸ்யபரிடம் சென்று முறையிட்டனர். அவர் தேவர்களை பிரம்மாவிடம் அழைத்துச் சென்றார். அனைவரும் விஷ்ணுவை சந்தித்தனர். விஷ்ணு ஐந்தாவது சதுர்யுக கிருதயுகத்தில் தான் வாமன அவதாரம் எடுத்து பலியை அடக்குவதாக காஸ்யபரிடம் சொன்னார்.

மேலும் காஸ்யபரும் அதிதியும் பரம நிஷ்டையுடன் தன்னை மகவாக அடைய தவம் செய்ய அருளாசி வழங்கினார். அதிதி இதைக் கேட்டு ஆனந்தம் அடைந்தாள். ஆனால் விஷ்ணுவின் பாரத்தை தான் சுமக்க முடியுமா எனக்கேட்க, உன் குழந்தையாக நான் பிறப்பெடுப்பதால் உன்னையும் கருப்பளுவையும் நானே சுமப்பேன் என்றார்.

விஷ்ணு அதிதி கருவில் பிரவேசித்த சமயம் ராட்சசர்களிடையே மகிழ்ச்சி குன்றியது. இதை உணர்ந்த பலி சக்ரவர்த்தி தன்பாட்டன் பிரகலாதனிடம் கேட்க அவர் தியானத்தில் ஈடுபட்டு தன் ஞான திருஷ்டியில் விஷ்ணு வாமனனாக அவதரிக்கப் போகின்றார் என்பதை அறிந்து சொன்னார். மகாபலி நாராயணன் என் அசுரத் தலைவர்களைவிட சக்தி வாய்ந்தவனா என்று இகழ திருமால்மேல் பக்தி கொண்ட பிரகலாதன் தீய புத்தி உள்ள அசுரர்களின் தலைவன் என்பதால் உனக்கு கெட்ட புத்தி வந்து விட்டது, “விநாச கால விபரீத புத்தி‘ என்றார். விரைவில் நீ உன் ராஜ்யத்தை இழப்பாய் என்று சாபமிட்டார்.

நிலைமையைப் புரிந்த பலி தன் பாட்டனிடம் மன்னிப்பு கேட்டு அன்று முதல் விஷ்ணு பக்தனாக இருந்தான். மகாபலி அசுவமேத யாகம் நடத்த தன் குரு பரத்வாஜருடன் வாமனர் யாகசாலைக்கு வந்தார். பணிந்து வணங்கி உபசரித்த பலி, தங்களுக்கு வேண்டுவது எதுவானாலும் அளிக்கத் தயாராக இருப்பதாக வாக்குத் தானம் செய்தான்.

வாமனர் அருகிலிருந்த பரத்வாஜரைக் காண்பித்து இவர் என் குரு, அக்னி ஹோத்திரம் செய்ய மூன்று அடி மண் என் கால்களால் கொடுக்க வேண்டும் என்றார். கொடைத்தன்மை கொண்ட மாவலி நீங்கள் யாசகர். நான் தாதன்-அளிப்பவன். ஆனால் மூன்று அடி மண் கொடுப்பது எனக்கு வெட்கமாக இருப்பதால் இன்னும் என்ன வேண்டும் என்றான். வாமனர் மன்னா நான் கேட்ட மூன்று அடி மண்ணே போதும் என்றதும் குலகுரு தடுத்தும் கேளாமல் அந்த பரமனே என்னிடம் கேட்கிறார் என்றால் அதைக் கண்டிப்பாக நான் கொடுப்பேன் எனக்கூறி நிலம் கொடுக்க சம்மதிக்க பலியின் மனைவி வித்யாவளி அருகில் நின்று நீரூற்ற மன்னன் அந்த நீரால் வாமனிரின் கால்களைக் கழுவினான்.

பின்னர் மந்திரங்களைக் கூறி தானத்திற்கான நீரைத் தாரை வார்க்கும்போது குரு சுக்ராச்சாரியார் கமண்டலத்தினுள் வண்டாகப் புகுந்து மூக்கிலிருந்து நீர் வராமல் தடுக்க வாமனர் தர்ப்பைப் புல்லை எடுத்து துவாரத்தைக் குத்த அது அவர் ஒருகண்னை குருடாக்கி தடை நீங்கி நீர் வந்து தானம் முடிந்தது.

பலி மன்னா! நானே மூன்றடி அடி மண்ணை எடுத்துக் கொள்கின்றேன் என்ற வாமனர் ஓங்கி உயர்ந்து உலகலந்த உத்தமராக ஒரடியில் மண்ணையும் ஈரண்டாவது அடியில் விண்ணையும் அளந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார்! எல்லா இடமும் பெருமாளுக்குச் சொந்தமானபின் வேறு இடமில்லாததால் குனிந்து அமர்ந்த பலிச்சக்ரவர்த்தி தன் தலையை காட்ட மூன்றாவது அடியை பலின் தலைமீது வைத்து பாதாள லோகத்தில் அமிழ்த்தி, உன் மனைவி மக்கள் பரிவாரங்களுடன் பாதாள உலகிலே இப்போதுள்ள அனைத்து சுக போகங்களுடன் வாழ்வாயாக என வாழ்த்தினார்.

மகாவிஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்வுடன் பாதாளலோகம் செல்லுமுன் பலி ஒர் வரம் கேட்டான். தங்களால் ஆட்கொள்ளப்பட்ட இந்நாளை மக்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, தீபமேற்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதே அது. அதன்படியும் ஐப்பசி சதுர்த்தசி அன்று தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

விஷ்ணுவின் வாமன அவதரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தூமாவதி.

அப்போது மாபலியை கொன்ற மமதை காரணமாக வாமனர் ஆவேசம் அடங்காமலிருக்க அவரின் உக்ரம் உலக உயிர்களுக்கு துன்பமாயிற்று. தேவர்கள் ஈசனை நாடினர். அந்த வாமனரின் ஆவேசத்தை அடக்க வந்தார் ஈசன். கங்காளநாதர் உருவில். செருக்குற்ற விஷ்ணுவை, வடுகநாதராக வஜ்ரதண்டத்தினால் மார்பில் அடித்து முதுகு தண்டை தன் கையில் ஏந்த, சிவ விஷ்ணு சக்திகள் ஒன்றாயின. இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அருள்-மீண்டும் சிவனிடமிருந்து உயிர்பெற்ற விஷ்ணு தம்தோல்+எலும்பை அணிந்துகொள்ள வேண்ட எலும்பைக் கதையாகக் கொண்டு தோலைச் சட்டையாக போர்த்து அருள்-சட்டைநாதர்-வடுகநாதர்.சீர்காழி. கங்காளநாதர்-பிரம்மதேசம்

செய்த வினைக்கு விதிவிலக்கில்லை!- செய்த வினைக்கு எவரும் விதிவிலக்கல்ல. தன்னால் வரம்பெற்ற மாவலியை தான் அழித்தல் தர்மமில்லை என சிவன்கூற பெருமாள் வாமன அவதாரத்தில் சிவதொண்டன் மாவலியின் சிரசில் கால்வைத்து அழுத்த தர்மத்தின் காவலன் மறைவு கண்டு தர்மதேவதை கண்ணீர் சிந்த அந்த துளிகள் பெருமாள் காலில் பட்டு புற்று வளர தங்கை மதுரை மீனாட்சி வழி காட்டுதலின்படி வாசுகி தீர்த்தத்தில் நீராடி பெருமாள் வழிபாடு. இறைவன் இறைவியை பிரித்து பார்க்கக்கூடாது என இரட்டை அர்ச்சனை. தீராத நோய்கள் தீரும். விஷம் குணமடையும். சித்திரை விழா. ஈசன்- புற்று நோய்க்கு மருந்து.-திருவெற்றியூர்(திருவாடானை)

இது விஷ்ணுவின் இரண்டாவது வாமன அவதாரம் ஆகும்.

வாமனப் பெருமாளை வழிபட்டால் குருதோஷம் நீக்கும்- 1.உலகளந்தபெருமாள்-காஞ்சி, 2.திருவிக்ரமன்-திருக்கோவிலூர், 3.தாடாளன்-சீர்காழி

#####

Read 16023 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 21 October 2018 12:16
Login to post comments