Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:03

முப்பாழ்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோ

#####

முப்பாழ்!

2495. மாயையின் செயலால் வித்தியா தத்துவம் ஏழினையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிய ஆன்ம சொரூபம் விளங்கும் உடல் பிரக்ஞையும் காரணமான சிவ நிலைகள் ஏழினையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும் காரிய காராணங்களாய் உள்ளவற்றைக் கண்டபோது உண்டான உபாசாந்தமும் அகலும் முப்பாழும் நீங்கப் பிறவி நீங்கும்.

2496. மாயாப்பாழும் சீவப்பாழும் உபாசாந்தப்பாழும் நிலைபெற்ற பர்னின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்ப்டி சிவசத்தியான அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ் நிலைகளாகும். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி என்ற வாக்கியத்தின் முடிவாகும்.

2497. தனக்கு ஒப்பு இல்லாத பரவிந்து ம்ண்டலத்தில் விளங்கும் தலைவனான நந்தியின் திருவடியை அடைய அதுவே நெறி என்று மாயப்பாழ் போதப்பாழ் உபாசாந்தப்பாழ் என்னும் மூன்றையும் கடந்து அதற்கு மேல் அளவிட்டு அறிய முடியாத நிலையில் மயங்கி நின்றேன்.

2498. துரியம் கடந்து சொல்வதற்கு முடியாத பாழினை அடைவதற்கு முடியாத மேலாம் நிலை என்று அறிவற்றவர் உரைப்பர். ஆனால் அறிவுடையவர் அரிய மேலாம் பாழ் என்றே வணங்குவது அரிய முப்பாழும் கடந்த நிலை என்பதை யார் அறியவல்லார்.

2499. முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கத் திரோதானமான நகரமும் மலமாகிய மகாரமும் நீங்கி திருவருட் சத்தியான பரை என்னும் யகார்மாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவவச்த்தியுடன் சேர்ப்பிக்கும். ஆராய்ந்தால் அது வல்லவர் உயிர்களால் அறிய இயலாத சிவயநம என்பதன் கருத்தாகும்.

2500. மன மண்டலமே உடல் என்றும் உடலே மன மண்டலம் என்றூ கூறும் தன்மை அறிந்து அவ்விரண்டுக்கும் உள்ள உண்மையான தொடர்பை உணரும் ஞானியர்க்குத் தம்மை கீழ்படுத்தும் பள்ளமும் இல்லை. மேலாகச் செய்யும் மேடும் இல்லை. காரியப்பாழ் காரணப்பாழ் உபாசாந்தப்பாழ் என்பவை இல்லை. உள்ளமும் இல்லை. அவரிடம் பிரகிருதி நாட்டமும் இல்லை. ஆதலால் அவர் உடல் அறம் கடந்து விளங்குவர்.

#####

Read 1699 times
Login to post comments